வெள்ளி, 13 மே, 2016

ஓட்டம்

இயல்பாய் சிரிப்பதற்கில்லா
இறுக்கமான வாழ்க்கை..

தாங்கமுடிய பாரங்களை 
தலையில் சுமக்கும்
கட்டாய பயணம்...

ஒப்பீடுகளால் மேலே
பார்த்துக்கொண்டே நடந்து
பள்ளத்தில் வீழும் அவலம்..

விண்ணைமுட்டும் வீக்கத்தை
வற்றச்செய்ய வடிகாலாய்
ஏமாளி மனிதர்கள்..

ரத்தம் உறிஞ்சப்படுவது அறியாது
ஏமாற்றத்தின் வலியே சுகமாய்
நினைக்கும் மக்கள் கூட்டம்...

ஏக்கப்பெருமூச்சுகளில்
ஏதிலிகளாய் இருக்கும்
அந்தக் கூட்டத்தில்
நானும் ஒருவனாய்....!


கருத்துகள் இல்லை: