வெள்ளி, 2 செப்டம்பர், 2011

திருக்குறளின் பெருமைகள்


உலகத்திருமறையை உவகையுடன் படிப்பவர்க்கு
  உணர்வதனைதுமே நீதியே !
உள்ளதில் உண்மைகள் மலர்வதற்கு
உரிய பெட்டகமே திருக்குறளே !

தினம் தினம் திரித்து கூறுவோரும்
திருக்குறளை படித்தாரானால் - நீதியின்
திசைநோக்கி நிச்சயம் நடந்திடுவர்
திரித்தது தவறென திருந்தியும் வாழ்ந்திடுவர் !

அன்னை தந்தை கடவுளென
அனைவர்க்கும் கூருகிறார் ஆதியிலே !
அறம்பொருளே இன்பமென
அனைத்தையும் கூருகிறார் மீதியிலே !

கூறியுள்ள குறலனைத்தும் குன்றாத
குணக்குன்றாய் கூறுவதும் நீதிகளே !
குணத்தில் உயர்ந்தோரை குலதில் சிறந்தோரை
கோமகனாய் காட்டுகிறார் சாதியிலே !

தனித்திருந்தால் தவசியென்றும்
விழித்திருந்தால் வீரனென்றும்
பசித்திருந்தால் பண்பாளனென்றும்
பலநீதி கூறுகிறார் திருமறையில் !

இனிய சொல்லை எடுத்தாண்டு
வலிய சொல்லை வழக்கொழித்து
புதிய சொல்லை உலகளித்து
புதுவுலகம் காணுகிறார் பொதுமறையில் !

தீமையில்லா வாய்மை வேண்டும்
தீதுயில்லா செய்கை வேண்டும்
வன்மையில்ல வாழ்க்கை வேண்டும்
வறியவர்க்கு வழங்க வேண்டும் !

அடக்கத்துடன் வாழ வேண்டும்
ஆன்றோறை ஒழுக வேண்டும்
ஒழுக்கத்தினால் மேன்மை வேண்டும்
உள்ளத்தில் உயர்வு வேண்டும் !

நன்றி மறவாமல் வாழவேண்டும்
நன்றல்லதை அன்றே மறக்க வேண்டும்
நல்ல நூல்களையே படிக்க வேண்டும்
நல்லறமே இல்லறத்தில் சிறக்க வேண்டும் !

முறைசெய்து காப்பாற்றும் மன்னன் வேண்டும்
முறையற்ற மாக்களை களைய வேண்டும்
முறையானவழியில் முந்த வேண்டும்
முன்னோர் வாக்கினை காக்க வேண்டும் !

மனைதக்க மனைவி அமைய வேண்டும்
மகனுக்கு தந்தை வழிகாட்ட வேண்டும்
தந்தைக்கு தவமகனாய் அமையவேண்டும்
தன்மானம் உள்ளவனாய் வாழ வேண்டும் !

பொய்யாமையற்று வாழ வேண்டும்
புகழ்பெறவே பிறவி அமையவேண்டும்
புழுக்கமில்ல மனம் இருக்க வேண்டும்
புள்ளறிவாளர் நட்பை விளக்க வேண்டும் !

உலகத்தோடு உவந்து வாழ வேண்டும்
உண்மையுடன் உபதேசம் செய்யவேண்டும்
உழவர்க்கே முன்னுரிமை வழங்க வேண்டும்
ஊருக்கு பழுமரமாய் உதவ வேண்டும் !

இல்லிக்கும் மல்லிக்கும் சொல்லிற்கும்
அரசர்க்கும் அமைச்சர்க்கும்
அனைவர்க்கும் அடுக்கடுக்காய் நீதிகளை
அழகுபட கூறுகிறார் திருக்குறளில் !

உலகப் பொதுமறையென
உண்மையான நீதிகளை
ஒவ்வொரு குறளிலும் எடுத்துக்கூறி
ஒளிவிளக்காய் அமைந்துள்ளது திருக்குறளே !



மேலே கூறியுள்ள வரிகள் நான் எழாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளி இலக்கியமன்றத்தில் நான் பேசுவதற்காக எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த ஆசிரியர் திரு. நாராயணன் அவர்கள் தன்னுடைய நண்பரும் என் வகுப்பு தோழன் கோபிநாதனின்  தந்தை திரு. பாண்டுரங்கன் என்பவரிடம் சொல்லி எழுதி தந்தது. வருடம் 1986-1987. இவ்வளவு காலம் பாதுகாத்து இப்பொழுது வலைதளத்தில் ஏற்றியுள்ளேன்.                              நன்றியுடன் நீ.சங்கர்

கருத்துகள் இல்லை: