வியாழன், 5 மே, 2016

சுட்டெரிக்கும் மழை காலம்


நிலாக்கால இரவுகளில் பெய்யும்
மழையென உன் அன்பில்
நனைகிறேன்..

சிலிர்த்துக்கொண்டு அணைக்கும்
உன் தழுவலில் என் துயரங்களில்
வடுக்கள் வற்றிக்போகிறது..

மேகத்தை துணைக்கொண்டு நீ
மிதந்து வருகையில்
மூழ்கி போகிறது எனது
கோபங்கள்.மூர்க்கங்கள்...

உன் கரம்கோர்த்து கொட்டும்
மழைச்சாலையில் நடை பயில..
மெல்லச்சுடுகிறது தேகம்..

இடையணைத்து மெல்ல
இதழ்பருகும் வேளையின்
இமை மூடும் தருணத்தில்

நீ...
தடுத்திட்டு மெல்ல கேட்ட
அந்த கேள்வியில்
வானம் வெடித்துச் சிதறியதாய்
மெல்ல
சுட்டுவிட்டது அந்த மழையிரவு....


கருத்துகள் இல்லை: