வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

உலகத்திற்கு இந்தியா கற்றுக் கொடுத்த 10 விஷயங்கள்!!!

இந்தியனாக இருப்பதில் பெருமிதம்
கொள்கிறீர்களா......? 
ஆமெனில்,
இங்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்தால்,
ஆச்சரியப்படுவீர்கள்.....! ஏனென்றால்....?
இங்கு இந்தியாவிடமிருந்த உலக மக்கள் கற்றுக்கொண்டவைகளைப் பட்டியலிட்டுள்ளோம்......

பலருக்கு இவைகளை தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. ஆனால் இவற்றால் உலகில் உள்ள பல
பல மில்லியன் மக்களுக்கு பெரிதும் உதவியாக
உள்ளது.

1 மொழிகள்:-
உகின் பழமையான மொழிகளில் ஒன்று இந்திய மொழி "தமிழ்"
உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் நிறைய
மொழிகள் பேசப்படுகின்றன. அதிலும் 780 மொழிகள்
இந்தியாவில் சரளமாக பேசப்படுகின்றன.
எத்தனை மொழிகள் இருந்தாலும்,
மொழி வேற்றுமையின்றி அனைவரும் இந்தியர்
என்ற எண்ணத்துடன், சகோதரர்களாக
வாழ்ந்து வருகிறோம். இது இந்தியாவில்
இருந்து மற்ற நாட்டினர் கற்றுக் கொண்டவைகளில்
ஒன்று.

2.கூட்டுக் குடும்பம்:-
கூட்டுக் குடும்பத்தில் வாழ்வது சற்று சிரமமாக
இருந்தாலும், கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதன்
மூலம் கிடைக்கும் அன்பும், சந்தோஷமும்
வேறு எங்கும்
கிடைக்காது என்பதை உலகிற்கு காட்டியதும்
இந்தியா தான்.

3.ஆயுர்வேதம்:-
ஆயுர்வேதம் என்பது இந்தியாவில் பிறந்த
ஒரு பாரம்பரிய மருத்துவ முறை. இந்த
முறையினால் நோய்களுக்கு சிகிச்சை அளித்து,
குணப்படுத்த முடியும். இது மருத்துவ
முறை மட்டுமல்லாமல், இந்த முறையானது இந்திய
மக்களின் வாழ்க்கை முறையுடன் ஒன்றியிருப்பதால்
தான், இந்தியர்கள் இன்றும் ஆரோக்கியமாகவும்
வலுவுடனும் இருக்கின்றனர்
என்பதை உலகிற்கு வெளிப்படுத்தி, மற்றவர்களும்
ஆயுர்வேத முறையைப் பின்பற்றுகின்றனர்.

4.புடவைகள்:-
ஃபேஷன் வரும் போகும். ஆனால் என்றும் மாறாத
ஒரு உடை தான் இந்திய பெண்களின் பாரம்பரிய
உடையான புடவை. இந்த புடவையை பெண்கள்
அணிந்தால், அவர்களின் மீது மதிப்பும்,
மரியாதையும் எழும். மேலும்
தற்போது அனைத்து வெளிநாட்டினரும்
இந்தியாவின் பாரம்பரிய புடவையை அணிய
விரும்புகின்றனர்.

5.வணக்கம்:-
ஒருவரைப் பார்த்ததும் மரியாதை செலுத்மும்
விதமாக அக்காலத்தில்
இரு கைகளை கூப்பி வணக்கம் செலுத்துவார்கள்.
இதை உலக மக்களுக்கு கற்றுக்
கொடுத்தது இந்தியா தான்.

6.செஸ்:-
செஸ் என்னும் விளையாட்டில் உள்ள ராஜா, ராணி,
மந்திரி போன்றவை இந்தியாவில் பிறந்தது தான்.
இது இந்தியாவில் இருந்து பெர்சியா, அரபு பின்னர்
ஐரோப்பா என்று பரவி பிரபலமான
ஒரு விளையாட்டாகிவிட்டது.

7.பூப்பந்தாட்டம்:-
இந்தியர்களுக்கு இந்த விளையாட்டு மிகவும்
பிடிக்கும். இதனை ஆரம்பத்தில் இந்தியர்கள்
விளையாட ஆரம்பித்து, பின் அது பல மில்லியன்
மக்களால் விருப்பப்பட்டு விளையாடப்படும்
விளையாட்டாகிவிட்டது.

8.உணவுகள்:-
பெரும்பாலான வெளிநாட்டவருக்கு இந்தியாவில்
பிடித்தது என்றால் அது உணவுகள் தான். ஏனெனில்
இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும்
மசாலா பொருட்கள், இந்த உணவுகளின்
சுவைக்கு அதிக மணத்தையும், ருசியையும்
தருகிறது. மேலும் தற்போது வெளிநாட்டவர்
பலரும் இந்திய மசாலாக்களைப்
பயன்படுத்தி உணவுகளை சமைத்து சாப்பிடுகின்றனர்.

9.யோகா:-
உடல், மனம் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ள செய்யப்படும் ஒருவகையான
உடற்பயிற்சி தான் யோகா. இதுவும் இந்தியாவில்
பிறந்தது தான். இந்த யோகாவை தற்போது உலகில்
உள்ள நிறைய மக்கள் தினமும் பின்பற்றி வருகின்றனர்.

10.தியானம்:-
நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ
வேண்டுமானால், தியானம் அவசியம் செய்ய
வேண்டும். இதுவும் உலகிற்கு இந்தியா கற்றுக்
கொடுத்தவைகளில் ஒன்றாகும்...





நன்றி: வணக்கம் இந்தியா

புதன், 20 ஆகஸ்ட், 2014

நூறு மேற்கோள்கள்

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படாத தமிழில் வந்த நல்ல மேற்கோள்கள் (Quotes): 
***********************************************************************

1. அகர முதல எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு
2. வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம்
3. செயற்கு அரிய செய்வார் பெரியர்
4. மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
5. அறத்தான் வருவதே இன்பம்
6. அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
7. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
8. பெண்ணின் பெருந்தக்க யாவுள!
9. கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை
10. மங்கலம் என்ப மனைமாட்சி
11. அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்
12. குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்
13. ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்
14. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ’இவன் தந்தை என் நோற்றான் கொல்!’ எனும் சொல்
15. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
16. அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
17. அன்பின் வழியது உயிர்நிலை
18. இனிய உள ஆக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று
19. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
20. நன்றி மறப்பது நன்றன்று, நன்று அல்லது அன்றே மறப்பது நன்று
21. தக்கார், தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்
22. அடக்கம் அமரருள் உய்க்கும்
23. யாகாவார் ஆயினும் நா காக்க
24. தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு
25. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
26. நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம்
27. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
28. பிறன் மனை நோக்காத பேராண்மை
29. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
30. ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்
31. ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!
32. சொல்லுக சொல்லில் பயன் உடைய!
33. தீயவை தீயினும் அஞ்சப்படும்!
34. கைம்மாறு வேண்டா கடப்பாடு
35. ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம் பேரறிவாளன் திரு
36. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை
37. ஈதல் இசைபட வாழ்தல்
38. தோன்றின் புகழொடு தோன்றுக
39. வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்
40. அருள்செல்வம் செல்வத்துள் செல்வம்
41. வலியார்முன் தன்னை நினைக்க, தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து
42. வாய்மை எனப்படுவது யாது எனின், யாது ஒன்றும் தீமை இலாத சொலல்
43. பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்
44. தன் நெஞ்சு அறிவது பொய்யற்க
45. பொய்யாமை அன்ன புகழ் இல்லை
46. அகம் தூய்மை வாய்மையால் காணப்படும்
47. சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
48. தன்னைத் தான் காக்கின், சினம் காக்க
49. இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்
50. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்
51. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல்
52. உறங்குவதுபோலும் சாக்காடு, உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு
53. பற்றுக பற்று அற்றான் பற்றினை
54. மெய்ப்பொருள் காண்பது அறிவு
55. நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும்
56. கற்க கசடற, கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
57. எண் என்ப, ஏனை எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு
58. கற்றனைத்து ஊறும் அறிவு
59. கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
60. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
61. செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
62. எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
63. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை
64. அறிவு உடையார் எல்லாம் உடையார்
65. பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
66. எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
67. வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்
68. ஆற்றின் அளவு அறிந்து ஈக
69. கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து, மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து
70. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்
71. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
72. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்
73. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல்
74. மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி
75. கடிது ஓச்சி மெல்ல எறிக
76. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்
77. உடையர் எனப்படுவது ஊக்கம்
78. உள்ளம் உடைமை உடைமை
79. வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு
80. உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்
81. முயற்சி திருவினை ஆக்கும்
82. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்
83. இடுக்கண் வருங்கால் நகுக
84. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்
85. திறன் அறிந்து சொல்லுக சொல்லை
86. சொல்லுக சொல்லை, பிறிது ஓர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து
87. சொலல்வல்லன், சோர்வு இலன், அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது
88. செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை
89. வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்
90. சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லியவண்ணம் செயல்
91. எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்
92. உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
93. அகலாது, அணுகாது தீக் காய்வார் போல்க, இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்
94. நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்
95. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக
96. அறன் ஈனும், இன்பமும் ஈனும், திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள்
97. அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு
98. செயற்கு அரிய யா உள நட்பின்?
99. நகுதல் பொருட்டு அன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு
100. முகம் நக நட்பது நட்பு அன்று, நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு
101. உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
102. வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல் ஏர் உழவர் பகை
103. உண்ணற்க கள்ளை
104. சூதின் வறுமை தருவது ஒன்று இல்
105. நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்
106. மயிர் நீப்பின் வாழாக் கவரி மா அன்னார், உயிர் நீப்பர் மானம் வரின்
107. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
108. பணியுமாம் என்றும் பெருமை
109. மரம்போல்வர் மக்கள் பண்பு இல்லாதவர்
110. குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு
111. சுழன்றும் ஏர்ப் பின் அது உலகம்
112. உழுவார் உலகத்தார்க்கு ஆணி
113. உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார், மற்று எல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர்
114. கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல!
115. காலை அரும்பி, பகலெல்லாம் போது ஆகி மாலை மலரும் இந்நோய்
116. மலரினும் மெல்லிது காமம்
117. ஊடலில் தோற்றவர் வென்றார்
118. ஊடுதல் காமத்திற்கு இன்பம்

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

சுதந்திரம்...

சும்மா வந்ததா
சுதந்திரம்...
வாழ்க்கை தொலைத்து
வலியைத் தாங்கி
வாங்கித்தந்தது
நாம்
சுவாசிக்கும்
இந்த சுதந்திரம்...

வந்தவன் போனான்...
இருந்தவன் பெற்றான்...

வாசமலர் வீசும்
ஜனநாயக பூ என்று
காகிதப் பூவை
நம் காதில் சுற்றினர்...

வாழ்வு முன்னேருமென்று
வாக்களித்து காத்திருந்தோம்..
கனிந்திடுமே சுவைப் பழமே..
பறந்திடுமே கவலையெல்லாம்..
என
களித்திருந்தோம்.....
அழகான பழமென்று
சுவைக்கப் பார்த்தால்
லஞ்ச லாவண்ய
கூட்டுக்கொள்ளை
வண்டு துளைத்த
சுவையற்ற பழமாகிப்
போனதிலே
சோர்ந்து போனோம்..

ஐந்தாண்டு ஆயுதம்
கையிலுண்டு
கொல்வோம் அந்த
வண்டுகளை என்று
எண்ணி எண்ணி ஏமாந்தோம்.

பழங்கதைகள் பேசிப்பேசி
முனைமழுங்கிய ஆயுதத்தை
கைக்கொண்டோம்...

பட்டதெல்லாம் போதுமினி
கொட்டம் அடக்கிடவே
புதிய கருவி கைக்கொண்டு
பழந்துளைக்கும்
வண்டுகளை வென்றெடுப்போம்..

சும்மா வந்ததில்லை
சுதந்திரம் என்பதை
வரும் தலைமுறையும்
அறியும் வண்ணம்
ஒரு
நல்ல பாதை அமைத்திடவே
முதலடியை எடுத்து வைப்போம்..

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று.......

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

புதன், 13 ஆகஸ்ட், 2014

மரணம் என்றால் என்ன?



மனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம், சுவாச உறுப்புகள், மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை ஏற்படும் பொழுது மனித உடலில் இயக்கம் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ ஸ்தம்பித்த நிலையை அடைந்து விடுகிறது. மூளைக்கு இரத்தத்தின் மூலமாக பிராணவாய்வு செல்லாது நின்றவுடன் புலனுணர்வுகள் தடைப்பட்டு மரணம் ஏற்படுகிறது. இவை தான் மரணத்துக்கு உடல் நூல் வல்லுனர்களும் மருத்துவர்களும் கூறும் காரணங்கள்.

மரணம் சம்பவிப்பதற்கு இவை மட்டம் தான் காரணங்கள் அல்ல. இதயம் அடிப்பது நின்று விடுவதாலோ அல்லது சுவாசம் தடைப்பட்டு விடுவதாலோ இறப்பு ஏற்பட்டு விடுகிறது என்று கூற முடியாது. ஏனெனில் இருதயம் நின்று விட்ட சில மணி நேரங்களின் பின்னர் கூட பலருக்கு உடலில் உயிர் தரித்திருந்த சம்பவங்கள் மருத்துவ நூல்களில் பதிவுச் சான்றுகளாகக் கூறப்படுகின்றன. இருதயத்தில் சத்திரசிகிச்சை செய்யும் பொழுது இருதயத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறார்கள் சத்திரசிகிச்சை நிபுணர்கள். இதயத்தை தங்கள் மனோசக்தியால் சிறிது நேரம் நிறுத்தி வைத்துக் காட்டியிருக்கிறார்கள் யோகிகள். சுவாசம் நீண்ட நேரம் தடைப்பட்ட பின்னரும் உயிர் பிரியாமல் இருந்திருக்கிறது. காற்றுப்புக இயலாத பெட்டிக்குள் வைத்து நிலத்தில் புதைக்கப்பட்டவர்கள் பல மணித்தியாலங்களுக்குப் பின்னர் உயிரோடு வெளிவந்ததை பலர் பார்த்திருக்கிறார்கள்.

இறப்பு போன்ற ஒரு நிலையை மனோசக்தியாலும் ஏற்படுத்தலாம். யோகநிலையில் இருந்து கொண்டு உடலில் எவ்வித உயிரோட்டமும் அற்ற நிலையை யோகிகள் செய்து காட்டுகிறார்கள். சில மிருகங்கள், பூச்சிகள், புழுக்கள் தமக்கு அபாயம் வருகிறது என்பதை உணர்ந்தவுடன் இறந்துவிட்டது போன்ற பாவனையை வெளிக்காட்டிக்கொண்டு கிடப்பதைப் பார்த்திருக்கிறோம். அந்நிலையில் அவைகள் உயிரற்ற சடலங்கள் போலவே காணப்படுகின்றன. தமது மனோசக்தியினாலேயே அவைகள் அந்த நிலையை ஏற்படுத்துகின்றன.

உடலில் உயிர தரித்திருப்பதற்குக் காரணமாயிருப்பது விஞ்ஞானத்தின் பார்வைக்கும் ஆய்வுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி. அதுதான் பிராணன் இந்த சக்தி உடலைவிட்டுப் பிரிவதைத் தான் “பிராணன் போய் விட்டது” என்று மரபு வழியாகச் சொல்லி வந்திருக்கிறோம். பிராணன் உடலில் இருக்கும் வரையில் உடல் இறந்து விடாது. மனித உடலின் எல்லா உணர்வுகளும் அடங்கி விட்டது போல் தோன்றினாலும், பிராணன் உடலை விட்டு வெளியேறும் வரையில் மனிதன் இறந்து விடுவதில்லை.

இக்கட்டத்தில் பிராணனைப் பற்றி மேலும் சிறிது விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இயல் உலகை இயக்குவது இரண்டு மூலப்பொருட்கள். ஒன்று ஆகாசம் (ஈதர் – பஞ்சபூதங்களில் ஒன்று). இது இயலுலகு எங்கும் இடையறா நிரம்பி நிற்கும் ஊடுபொருள். இதுவும் நமது கண்களுக்கு வெட்டவெளியாய் தெரிவது. இதை பௌதீக விஞ்ஞானிகள் matter என்பர். ஆகாசம் சூட்சமமான பொருள். அது சூட்சுமமாக இருக்கும்பொழுது கண்ணுக்குத் தெரிவதில்லை. அது ஸ்தூல வடிவமாகும்பொழுது அதாவது உருவம் பெற்று பொருளாகும் பொழுது கண்களுக்கு தெரிகிறது.

இயக்கத்துக்குக் காரணமாயிருக்கும் மற்ற மூலப்பொருள் பிராணன் சிருஷ்டியின் துவக்கத்திலும் பிரளயத்திலும் அண்டத்திலுமுள்ள சக்திகளெல்லாம் ஒடுங்கிப்போய் பிராணன் என்னும் மூலநிலையை அடைகின்றன. பிராணன் அசைவதற்கான வீரியத்தைக் கொடுக்கும் உயிராதாரமான விசை, அதிர்வுகளை (Vibration) ஏற்படுத்தி இயக்கத்தைப் பிறப்பிப்பது பிராணன். ஆகாசத்தை பிரபஞ்சமாக உருவாக்குகின்ற சக்திதான் பிராணன். இதையே பௌதீக விஞ்ஞானிகள் Energy என்பர்.

பிரளயத்தின் போது ஸ்தம்பித்த நிலையை அடைகின்ற பிராணன் சிருஷ்டியின் போது ஆகாசத்துடன் ஒன்றிச்செயற்பட்டு அண்டத்தை தோற்றுவிக்கிறது. ஆகாசத்தின் மீது எனைய நான்கு முதன் மூலப்பொருள்கள் (Primordial Elements – பூதங்கள்) ஆகிய மண், நீர், காற்று, நெருப்பு என்பவை செயற்படுவதால் சிருஷ்டிக் காரியங்கள் நடைபெறுகின்றன. இச்செயற்பாடுகளுக்கு வேண்டிய அதிர்வுகளை பிராணனே ஏற்படுத்திக் கொடுக்கிறது.

மனித உடலில் கோடானுகோடி ஜீவ அணுக்கள் இருக்கின்றன. இந்த ஜீவ அணுக்கள் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அமைந்து ஒரே நோக்குடன் செயற்படுவதற்குக் காரணம் உடலில் உள்ள பிராணன். உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் இந்த ஜீவ அணுக்கள் ஒன்றிணைந்து இயங்கும் தன்மையை இழந்தவிட்ட நிலையில் அங்கும் இங்கும் சிதறி ஓடுகின்றன.

இறப்பின் பின்னும் உயிரணுக்கள் உடலில் இருப்பதால்தான் பிணத்தைப் பேணும் செயல்முறை சாத்தியமாகிறது உடல் அழுகுவதற்கும் அதுவேதான் காரணம்.


#
சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள் - பக்கத்திலிருந்து 

ஆத்திசூடி - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்


நம்முடைய வாழ்வில் சிறப்படைய ஔவையார் கூறும் அறநெறிகள் !!! 

அனைத்து தலைமுறையினருக்கும்.... !!
==============================

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.

16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார்.

தமிழ்நாடு ஒரு சிறப்பு பார்வை..!



1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்.


2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி


3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்


4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்


5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்


6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)


7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)


8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்


9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை


10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை


11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 
இருக்கைகள்)


12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்


13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்


14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)


15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)


16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]


17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )


18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)


19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)


20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)


21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்


22. கோயில் நகரம் – மதுரை


23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)


24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்


25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

வியந்து தான் போவீர்கள் !!!



* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.

* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.

* அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.

* அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.

* அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.

* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.

* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.

* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.

* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.

* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.

* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.

* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.

* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.

* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.

* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.

* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.

கணவன் மனைவி உறவு மேம்பட சில விதிகள் - 2

என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய ‘நவீன யுக மனைவி’யின் அன்பைப் பெற 10 விதிகள்…

1. மதியுங்கள்


வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல


இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.


3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்


மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.


4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்


‘ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.


5. ஆலோசனை கேளுங்கள்


நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.


6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்


நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர்தான் அவர்களைப் பொறுத்தவரை ‘முழுமையானவர்’.


7. பேசுங்கள்


பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.


8. மனைவியின் குடும்பத்தில் ‘பங்கு கொள்ளுங்கள்’


வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.


9. அழகில் கவனம் செலுத்துங்கள்


அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?


10. அவ்வப்போது ‘வழக்கம்போல்’ இருங்கள்


எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, ‘நீதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று ‘பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!


1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-

01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

www.facebook.com/puradsifm
.......................................

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

கண் தானம் செய்வது எப்படி?

கண் தானம் செய்வது எப்படி?

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.


2. மின்விசிறியை இயக்கக்கூடாது.
3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.
4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.

யார் கண்தானம் செய்ய முடியாது?
நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.

கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:
1. ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.
2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.
3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.
4. கண்தானம் செய்ய 20-30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.
5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.
6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.
7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.

- எனவே , கண் தானம் செய்வோம்...!!! Please, donate your Eyes.