புதன், 18 மே, 2016

கணநேர முடிவு


அஞ்சி படித்தாலும் - கண்
துஞ்சாது் படித்தாலும்
புரிந்து படித்தாலே
பட்டறிவு பெருகிவரும்..


கண்விழித்து மெய்விழித்து
படித்த நாட்கள் முடிந்தது..
இதோ..
தவத்திற்கான பலனில்
நாள் கண்முன்னே..


நிறையாய் நிறைந்திருக்கும் சிலருக்கு
நிறையில் கொஞ்சம் குறைந்திருக்கும் சிலருக்கு..
நிறையில் நிறையவே நீர்த்திருக்கும் சிலருக்கு..


பாதகம் ஏதுமில்லை பாசமலர்களே..
பாதகமாய் முடிவெதுவும்
எடுக்காதவரை எந்த
பாதகமும் இல்லை..


தவறுக்காக வருந்துங்கள்..
தவறுகளை திருத்துங்கள் - ஆனால்
கணநேர முடிவினிலே
வாழ்க்கையை தவற விடாதீர்கள்..


வென்றவனும் வாழ்கின்றான்..
தோற்றவனும் வாழ்கின்றான்..
விழி இல்லாதவனும் வாழ்கின்றான்..
வாழ வழியில்லாத பூமியா இது?


உயர்ந்தது தான் இக்கரை
வாழ்த்திடவே அக்கறை

வாழ்வே இனி சர்க்கரை

கருத்துகள் இல்லை: