புதன், 20 ஜூலை, 2011

கணவன் மனைவி உறவு மேம்பட சில விதிகள்

1. ஒருவரின் மீது ஒருவர் எப்போதும் கடுஞ்சொற்களை பேசக் கூடாது.

2. வீட்டு வேலைகளைச் செய்வதில் சமத்துவம் வேண்டும்.


3. சிறிய தவறு செய்தலும் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். 


4. இருவரில் யார் எந்தத் தவறு செய்தலும் பெரிதாக்காமல் உடனே மன்னிக்க வேண்டும்.


5. தனிப்பட்ட விஷயங்களை பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால் சண்டையாக மாற்றிவிடக் கூடாது.


6. வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.


7. யார் மீதும் யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சுதந்திரம் என்பது மிக முக்கியம்.


8. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.


9. வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


10.'எந்நாளும் உன்னை விட்டுப் பிரியமாட்டேன்' என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும்.


இதை பின்பற்றினால் "To Love and to be loved is the greatest happiness of human existence" எனும் பொன்மொழி எத்தனை சத்தியம்! 


அவள் விகடன் - 08.07.2011


------------------------------------------------------------------------------------------------
'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' ---(A smooth sea, never made a skillfull sailor)
------------------------------------------------------------------------------------------------

புதன், 6 ஜூலை, 2011

இனிய உள்ளங்களுக்கு என் முதல் வணக்கம்.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

இனிய தமிழில் எழுத நினைக்கும் எனக்கு அன்பு உள்ளங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டுகிறேன். தவறுகள் இருந்தால் அன்புடன் சுட்டிகாட்டுங்கள். நிறைகளை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். 

நன்றியுடன் உங்கள் 

நீ. சங்கர்.