வெள்ளி, 31 ஜூலை, 2015

வாழ்க்கையில் priority - அன்றும், இன்றும் - விளைவும்...!

1975

இரவு 7 மணிக்கு அப்பா அபீஸிலிருந்து வருகிறார். எல்லோரும் சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு வெளியில் காற்றாட அமர்கிறார்கள்... அப்பா சேரில், அம்மா பிள்ளைகள் வாசப்படியில்...
அம்மா: “சின்னவன் ஸ்கூல்லேந்து வந்ததுலேந்து ஒரு மாதிரி இருக்கான்..”
அப்பா சின்ன பையனைப் பார்த்து : “என்னடா.. என்னாச்சு..?”
பெரியவன்: “ஹோம் ஒர்க் போட்லன்னு ஜியாக்ரபி மாஸ்டர்ட்ட பிரம்படி வாங்கியிருக்கான்பா.... கைய காட்ரா..!”
அப்பா: “ரொம்ப வலிக்குதா..? ஆயின்மென்ட் போட்டுக்கிறியா..?”
சின்னவன் “அம்மா போட்டாங்கப்பா...!”
அப்பா: “டீச்சர்ட்ட அடி வாங்கறதெல்லாம் சகஜம்பா.. ! இப்ப எவ்ளோ பரவாயில்லையே.. உங்கள கையிலதான் அடிக்கிறாங்க.. அப்பல்லாம்.. எங்களையெல்லாம், வாத்தியார் ட்ராயர இறக்க சொல்லி சூத்தாமட்டையிலேயே அடிப்பாரு...!”
எல்லோரோடு சின்னவனும் தன் வலியை மறந்து சிரிக்கிறான்..!
அப்பா: “இது எத்தனாவது தடவை நீ ஹோம் ஒர்க் பண்ணாம போறது..?”
“நா...லு...... இல்ல.. அஞ்சாவது தடவை...”
அப்பா: “அதான்....! வாத்தியார் உன்ன அடிக்கிறாருன்ன அதுக்கு காரணம் நீ கண்டினியுஸா தப்பு பண்றேன்னு அர்த்தம்...! அவரு சொல்றத நீ கரெக்ட்டா செஞ்சுட்டீனா, நீ சின்ன தப்பு செஞ்சாலும் அடிக்க மாட்டாரு... புரியிதா..?”
பையனுக்கு அப்பா சொல்வதில் உள்ள நிஜம் புரிந்தது.. இனி அடி வாங்காமல் இருக்க வழி தெரிந்தது... அவன் மனம் லேசானது....
2012
அப்பா இரவு 10.30 மணிக்கு ஆபீளிலிருந்து தன் டூப்ளே அபார்ட்மெண்ட் வீட்டுக்கு வருகிறார்..
சீரியல் பார்த்துக் கொண்டே, அம்மா: “விகாஷ் இன்னிக்கு ஸ்கூல்லேந்து வரபோதே என்னமோ மாதிரி வந்தான்..! கேட்டா எரிஞ்சு விழறான்... அப்போ ரூமுக்குள்ள போனவன்தான்... சாப்பாடு வேணாங்கறான்.. மேல போய் என்னன்னு கேளுங்க.!“
அதற்குள் அப்பாவிற்கு மொபைலில் கால் வருகிறது..
அப்பா: “ஓ மை காட்..! ஒரு கான்ஃப்ரன்ஸ் கால் இருக்கு இப்போ..! மறந்தே போயிட்டேன்...! ஷிட்.. ஒரு மணி நேரம் ஆகும்..! விகாஷோட நாளைக்கு பேசலாம்.. தூங்கட்டும் விடு...!”
விகாஷ் அன்றிரவு தூங்காமல்தான் படுத்துக் கொண்டிருந்தான்.. அவன் பிரச்சனை பேசப்படவேயில்லை, அவன் drug addict ஆகி ஒரு நாள் டீச்சரை கத்தியால் குத்தும் வரை....


Job இன்டெர்வியுவில் நீ, நீயாய் இருந்தால் வெற்றி...!



Job இன்டர்வியு ஆரம்பித்தது.. (ஆங்கிலத்தில், இங்கே தமிழாக்கம்)
நான் முதல் கேள்வியைக் கேட்டேன்...
அவன் உடனே, தயக்கம் எதுவும் இல்லாமல், சரியான பதில் கூறினான்..!
அடுத்த கேள்வியைக் கேட்டேன்....
அவன் யோசிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டான். ஆனாலும், பதில் சொல்லும்போது எந்த பிசிறும் இல்லாமல் தெளிவாக பதில் கூறினான்..!
அடுத்த கேள்வி..
அவன்: “சர், நான் சொல்லப் போகும் பதில் 100% சரிதானா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு..! ஆனாலும், பதிலைச் சொல்லி அது தவறென்றால், சரியான பதிலை உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆசை..! ..சொல்லலாமா...?
நான் அனுமதித்தேன். அவன் பதிலைக் கூறினான். அது 90% சரியாக இருந்தது...! பதிலில், எந்தப் பகுதி அவனுக்கு தெரியவில்லை என்பதையும் சொல்லும் போதே குறிப்பிட்டான்..!
அடுத்து ஒரு கடினமான கேள்வி.. குறிப்பிட்ட விஷயத்தில் அனுபவம் உள்ளவர் மட்டுமே அதற்கு பதிலளிக்க முடியும்...!
அவன் எந்த யோசனையையும் செய்யாமல் “சர், எனக்கு அந்த விஷயத்தில் தியரிட்ட்கல் நாலட்ஜ்தான் உண்டு..! அதில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.. செய்ய எனக்கு ரொம்பவே ஆவல்..! எனக்கு தெரிந்த தியரிட்டிகல் நாலட்ஜை வைத்து பதில் சொல்லலாமா..?” சுருக்கமாய், ஓரளவு சரியான பதில் சொன்னான்.
கடைசி கேள்வியாய் நான் அவனைக் கேட்டேன்: “உன்னிடம் இருக்கும் எந்த ஒரு குணாம்சம் (virtue) இந்த வேலையில் நீ பரிமளிக்க உதவும் என்று நினக்கிறாய்..?”
அவன் என்னைப் பார்த்து மெல்லியதாய் சிரித்து: “சர், நான் ஒரு 30 செகண்ட் யோசிக்க எடுத்துக் கொள்ளலாமா..?”
“ஓகே….”
அவன் இரு கைகளையும் மடித்துக் கொண்டு யோசிக்கத் தொடங்கினான்... அந்தக் கணம், அவனுக்கு அந்த அறையும் அங்கு இருக்கும் மற்றவரும் மறந்து விட்டது போல், தனக்குள் மூழ்கினான்..!. சில வினாடிகளில் அவன் முகத்தில், விடையின் தெளிவு பிறப்பது தெரிந்தது..!
கைகளை விடுவித்துக் கொண்டு, சரியாக உட்கார்ந்து கொண்டு, புன்னகையுடன் அவன்: “நேரம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஸர்..! இப்போது நான் பதிலைச் சொல்லட்டுமா..?”
நான்: “அவசியம் இல்லையப்பா..! நீ போய் HRரை பார்க்கவும்.. யு ஆர் செலக்டட்..!”


தமிழ் நடிகை உருவாகிறாள்..!



“இங்க பாரும்மா.. உன் பேரென்னா..?”
“எழிலரசி சார்..!”
“நீ தமிழ் ஹீரோயின் ஆகணுன்னா சில விஷயங்கள் பண்ணனும்... செய்வியா..?”
“சொல்லுங்க சார்..! எனக்கு எப்படியாவது முன்னணிக் கதாநாயகி ஆகணும்..!”
“தோ.. இந்த பியுடீஷியந்தான் உன் அழக மெருகேத்துவாங்க..! இனிமே உன் பேரு ஸஃப்ரீன்...! உங்கப்பா என்ன பண்றாரு..?”
“அவுரு எப்பவோ எங்கள வுட்டு ஓடிட்டாரு சார்...”
“உத்தமம்...! நல்லா கேட்டுக்க...! இனிமே உன் பேரு ஸஃப்ரீன் சத்தானி..! உங்கப்பா சத்தானி ஒரு மரைன் இஞ்ஜினீரு.. உலகத்த சுத்திக்கிட்டே இருப்பாரு...! வரவே மாட்டாரு.. சரியா..?.... உங்கம்மா ஒரு பேங்க் மேனேஜர்... உன் மேல அம்மாக்கு ரொம்ப உசுரு...! நீங்க போபாலுக்கு பக்கத்துல ஒரு ஊர்ல இருந்தீங்க..! அங்க நீதான் 4 வருஷத்துக்கு முன்னாடி மிஸ்.போபால்..! ரெண்டு மூணு இந்திப் படத்துல நடிச்சிருக்க.. ஒரு படத்துல அஜய்குமார் கூட சைட் ரோல் பண்ணிட்டிருக்க... யார் கேட்டாலும் இதான் சொல்லணும்... புரிஞ்சுதா..?”
“எனக்கு இந்தியே தெரியாதே சார்..!”
“நீ இந்தில பேசவே வேணாம்..! கொஞ்சம் இங்கிலீஷ் தெரியும்ல..? அதுகூட தமிழ் கொஞ்சம் கலந்து பேசினா போதும்.. இப்போ எப்படி பேசணும்னு காட்றேன் பார் –
‘...மை டாட் மரைன் இஞ்ஜினீர்..! ஊர்மேல போது.... வரான் நோ..! மம்மி பேங்க் மேல மேனேஜர்.. ! லவ்ஸ் மீ ரொம்ம்ம்ப்போ, ரொம்ம்ம்ப்போ.!. நால் வர்சம் பேக் நான் மிஸ் போபால் ஆயாச்சு...! டூ ஹிந்தி மூவீஸ் பந்யாச்சி..! கிரேட் ஹீரோ அஜய் சைட்ல பந்றான்.....!’
-- அவ்ளோதாம்மா...! அப்பப்போ, யோசிக்கிறா மாதிரி திரும்பி, தோ, இந்த வேலைக்கார அம்மாகிட்ட “அத்துக் வாட் டமில் வேர்ட் சொல்றான்..?” அப்பிடின்னு கேக்கணும்...”
“சார்.....! அது என்னோட அம்மா சார்...!”
“உங்கம்மாவா..? அய்யய்யோ..! பியுடீஷியன்..! முதல்ல இவங்கள கவனிச்சு பாங்க் மேனேஜர் ஆக்குங்க...!”

Statisticsஸின் வாழ்க்கை தத்துவம்...!

Average (Mean, Median, Mode), Probability, Percentages என்றெல்லாம் நாம் statistics படித்தோமே.. அதில் வாழ்க்கை தத்துவம் உண்டா..?
நான் ஒரு நாள் இரவு நடந்து வந்து கொண்டிருக்கும் போது மழை..! அருகில் ஸ்லம் ஏரியாவில் இருந்த ஒரு குடிசை வீட்டின் வாசலில் ஒதுங்கினேன்.. உள்ளே இருந்த கிழவர்:
“உள்ள வந்திருங்க..! மழ ஜாஸ்தியாவுது போல..!”
உள்ளே இரண்டு பெண்மணிகள் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்க, நான் சங்கடத்தோடு ஓரமாய் நின்றேன்... திடுக்கென்று காலின் மேல் ஏதோ ஓடும் உண்ர்வு..! சின்ன பாம்பு..! பயத்தில் நான் காலை உதறி... “ஊ...! பாம்பு....!”
கிழவர்: “சார்.. இப்படி பயப்படறீங்க...! பாம்பு, பூரான், தேரை அல்லாம்தான் வரும் மழை பேஞ்சா…!” அசால்ட்டாய் சொல்லி சிரித்தார்...!
கூரை வீட்டில் ஓரமாய் தண்ணீர் ஒழுகுவது பார்த்து நான்: “தண்ணி ஒழுவுதே..! எப்படி ராத்திரி தூங்குவீங்க..?”
“பொம்பளைங்கள நடுல வுட்டு நானும் என் பையனும் ஓரம் பட்த்துக்குவோம் சார்..! அவன் ஒரு 200 மில்லி போட்டுனு வந்து மட்டையாயிட்டான்னா இன்னா தண்ணி வந்தாலும் தூங்குவான்..! நான், தோ பாருங்க... கீழ நெறியா சாக்கு போட்டு, அதுக் மேல பாய் போட்டு பட்த்தன்னா ஒண்ணியும் ஆவாது..!” சிம்பிளாய் சொன்னார்..!
“பயங்கர மழை வந்தா..? தண்ணி ரொம்ப ஒழுவுச்சுன்னா கஷ்டமாயிடாது..? அப்ப என்ன பண்ணுவீங்க...?”
கிழவர் என்னை மௌனமாக சில கணங்கள் பார்த்தார்.. கேட்டிருக்க வேண்டாமோ..?
கிழவர் சொன்னார்: “அப்போ இன்னா பண்றது...? அல்லாரும் தூங்காம நைட்டு பெஞ்சு மேல் குந்திகினு மழைய பாத்துன் கெடக்க வேண்டித்தான்..! ஆனா.. நம்மூர்ல அது மாதிரி அட மழை வருசத்துக்கு மூணு நாலு நாள்தானே சார் வருது..? அத்து பெரிய கஸ்டமா இன்னா..?”
அதானே..? மூணு, நாலு நாள் என்பது ஒரு வருடத்தின் மொத்த நாட்களில் 1% தானே..? அதை நினைத்து பாக்கி 99%டில் ஏன் கவலைப் பட வேண்டும்..?
Statistics..! இப்படி நாமும் நம் வாழ்க்கை பிரச்சனைகளை statisticsஸாக பார்த்தோமானால் எல்லாம் சிறியவை தான்..!
இந்திய மக்களின் average (Mode) வருமானத்தை விட நம் வருமானம் 70-80% அதிகம்..! என்னதான் பெரிய பிரச்சனை வந்தாலும் நமக்கு 3 வேளை சாப்பாடு கிடைக்காமல் போவதற்கான probability 0.00001% தான்..! ஆபீஸில் நம் பாஸ் நம்மைத் திட்டுவது 5% நாட்களுக்கு குறைவே..! இரவில் கரெண்ட் போய் கஷ்டப்படுவது 1%க்கும் குறைவான நேரங்களே..! etc..!
இப்படி statisticsஸாக பார்த்தோமானால், நம் எல்லா பிரச்சனைகளும் சிறியவை..! மிக மிகச் சிறியவை..! ஆனால் நாமோ அவற்றை பூதக் கண்ணாடி மூலம் பார்த்து மருள்கிறோம்..! புலம்புகிறோம்..!
படிப்பறிவில்லாத ஒரு ஏழைக் கிழவர் எனக்கு statisticsஸில் இருந்த வாழ்க்கை தத்துவத்தை விளக்கி விட்டார்..!!

திங்கள், 27 ஜூலை, 2015

சோமசுந்தர_பாரதியார்_அறிவோம்


பதிவு #கவி_தா ‏@kavitha129

#சோமசுந்தரபாரதியார் அறிந்துள்ளோர் எத்தனை பேர்?
இருவருக்குமுள்ள தொடர்பு என்னவென்று அறிந்தோர் எத்தனை பேர்?

இன்றைக்கு(ஜூலை 27) 136 ஆண்டுகளுக்கு முன்னர் (1879ல்) எட்டையபுரத்தில் பிறந்தவர்

தந்தைக்கு எட்டையபுர அரண்மனையில் வேலை என்பதால் கிட்டத்தட்ட எட்டையபுர அரண்மனையிலேயே வளர்ந்தார்.

அரண்மணையில் பணியாற்றி வந்த சின்னசாமி ஐயரின் மகன் சுப்பிரமணியனும், அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரமும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள்.

தமிழ் மீதான ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் இணைப் பறவைகளாய் சுற்றி வந்தனர்.

எட்டையபுரம் அரண்மனைக்கு வருகை தரும் தமிழ்ப் புலவர்களின் பாடல் கேட்டு பா புனையும் ஆற்றலை இருவரும் பெற்றிருந்தனர்

ஒரு முறை யாழ்பாணத்திலிருந்து புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவர் இருவரிடமும் சென்று ஈற்றடி கூறி, பாடலொன்றை இயற்றித் தருமாறு வேண்டினார்.

இருவரும் எழுதுகோல் பிடித்து உடனடியாக அந்த ஈற்றடிக்கு பாடல் தந்தனர். அதனைப் படித்துப் பார்த்த யாழ்ப்பாணப் புலவர் மெய்சிலிர்த்தார்

''அருமைப்பாடல்’’ எனக்கூறி இருவருக்கும் #பாரதி பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.

அன்று முதல் சோமசுந்தரம் #சோமசுந்தரபாரதி என்றும், சுப்பிரமணியன் #சுப்பிரமணியபாரதி என்றும் அழைக்கப்பட்டனர்.

#சோமசுந்தரபாரதி வழக்கறிஞராகத்தான் வாழ்க்கை ஆரம்பித்தார்.
வ.உ.சி.யுடனான நட்பு அரசியலுக்கு இவரை இழுத்து வந்தது

1933ஆம் ஆண்டு அண்ணா மலை அரசரின் வேண்டு கோளுக்கிணங்க வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரானார்

அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகத் தமிழ்ப் பணியாற்றி வந்த காலத்தில்தான் 1937 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புத் ‘தீ’ கொழுந்து விட்டெரிந்தது.

29.08.1937ல திருநெல்வேலித்தமிழ்ப்பாதுகாப்பு சங்கத்தின்சார்பில் மா.வே.நெல்லையப்யப் பிள்ளையும் இந்தித்திணிப்பைக்கண்டித்து முதல்குரல்எழுப்பினர்

அதன் பிறகு இந்தித் திணிப்பிற்கு எதிரான குரலை சென்னையில் தொடங்கி வைத்த பெருமை சோமசுந்தர பாரதியாரையே சாரும்.

இதிலே வந்து கலந்து கொண்டவர்கள்தான் மற்ற தமிழ், சமூக ஆர்வலர்களும் ,அரசியல்வாதிகளும்!

#இந்திஎதிர்ப்புவாரியம் உருவாக்கினார்.
தலைவர் பாரதியார்
செயலாளர் கி.ஆ.பெ.விசுவநாதம்

உறுப்பினர்களாக...
ஈ.வெ.ரா., (கவனிக்க இவரே உறுப்பினர்தான்)
உமா மகேசுவரனார்,
ஊ.பு.சௌந்தர பாண்டியன்,
கே.எம். பால சுப்பிரமணியம்

நாள்தோறும் மறியல், நாள்தோறும் சிறை என்ற நிலைக்குப் போராட்டம் வளர்ந்தது.
தொடர் போராட்டங்கள் அரசைக் கலங்கடித்தன

1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் சோமசுந்தரபாரதியார் ‘தமிழர் கழகம்’ எனும் அமைப்பை நிறுவினார்.

பெரியார் உருவாக்கிய ஆரியத்திற்கு எதிர்வகை குறியீட்டுச் சொல்லாகிய திராவிடத்தை சோமசுந்தரபாரதியார் ஒப்புக் கொள்ளவில்லை.

1942ஆம் ஆண்டு பெரியாரின் திசைமாறிப் போன ‘திராவிட நாடு திராவிடருக்கே’ முழக்கம் காதைப் பிளந்தது

“தமிழன் தன்னைத்தமிழனென்று கூறிக் கொள்ளவும் வெட்கப்பட்டுத் ‘திராவிடன்திராவிடன்’ என்று தோள் குலுக்குவதா? '' - #சோமசுந்தரபாரதி கேட்டாரே அப்பவே

''திராவிடன் என்றபெயர் சங்கநூலிலே ஏது?''
- #சோமசுந்தரபாரதி
(இன்னும்தான் கேட்கிறோம்...அதேதாஇது னு வாழைப்பழ காட்சியாக்கி விட்டனர்)

1950ஆம் ஆண்டு மேமாதம் 27, 28 நாட்களில் கோவையில் தி.மு.க. சார்பில் முத்தமிழ் வளர்ச்சிமாநாடு நடைபெற்றது
மாநாட்டுத் திறப்பாளராக #சோமசுந்தரபாரதி வைத்தார் ஒரு #கொட்டு

''இந்நாளில் பலர் திராவிடம், திராவிடர் என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழர் என்று சொல்ல உங்கள் வாய் ஏன் கூசுகிறது?''

''தமிழ், தமிழர் என்றுசொல்ல வெட்கப்படுகிறவன் தமிழனாயிருக்க முடியுமா? அவன்இரத்தத்திலே எப்படி தமிழ் இரத்தம் ஓடும்?''
பதைபதைத்துப்போனார் #அண்ணா


இந்தி எதிர்ப்புப் போரின் முடிவில் இரண்டு கோரிக்கைகள் தமிழர்களிடத்தில் வலுப்பெற்று நின்றன.
1) மொழிவழித் தமிழ் மாகாணம்
2) தமிழ்நாடு தமிழருக்கே

இவ்விரண்டு கோரிக்கை உருவாக்கியது சோமசுந்தர பாரதியே தன் வாழ்நாளின் இறுதிவரை இக்கோரிக்கைகளின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் நச்சினார்கினியர். நச்சினார்கினியர் உமிழ்ந்த எச்சில் என்றால் அதை நக்கவா வேண்டும்? எனசாடியவர் சோமசுந்தரபாரதி

அண்ணா கம்பராமாயணத்தை எரிக்கும்முயற்சியில் ஈடுபட்டபோது அதை வன்மையாகக்கண்டித்தார்
''ஒரு சிறந்தகாவியத்தை எரிப்பது நல்லதல்ல.அது தமிழ்நெறியன்று''

''அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்?'' கேட்டவர் சோமசுந்தரபாரதி
அரசியலுக்கு அதெல்லாம் தெரியுமா என்ன??

திருவள்ளுவர்,தொல்காப்பியர் ஆகியோரைப் பற்றிப் புனையப்பட்ட பொய்க்கதைகளை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் தகர்த்தவர் #சோமசுந்தரபாரதியார்

அவரது ஆய்வு நூல்கள்
தசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926)
திருவள்ளுவர் (1929) -தமிழ், ஆங்கிலம்.
சேரர் தாயமுறை (1960) -தமிழ், ஆங்கிலம்
தமிழும் தமிழரும் சேரர் பேரூர் (தமிழ், ஆங்கிலம் )
அழகு பழந்தமிழ் நாடு (1955)
நற்றமிழ் (1957)
நிறையவே தனிச்செய்யுள்கள் இயற்றினாலும் படைப்பிலக்கியமாக...
^மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி-ஒரு செய்யுட் கதை (1947)
^மாரி வாயில் (1936)

உரைநூல்..
தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை
அரசியல் நூல்..
”இந்தி” கட்டாய பாடமா?
வாழ்க்கை வரலாறு..
நான் கண்ட சுப்பிரமணிய பாரதி

தமிழ் நெறிப்படி வாழ்ந்து உயர்வோம்...
அவர் காட்டிய வழியில் ஆரியத்தை வீழ்த்தி...
திராவிடத்தைப் புறந்தள்ளி...!

தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு என்றும்
திருவள்ளுவர்திருநாள் என மாட்டுப்பொங்கல் அன்றும்
நாம்இன்றும் கொண்டாடக்காரணமிவரே

தமிழ்மொழி,தமிழினஅடையாளத்தை ஒருபோதும் விட்டுத்தரமறுத்தார் சோமசுந்தரபாரதி
(அதான் அவரையார் எனக்கேட்கும் நிலையில் அரசுகள்வைத்துள்ளன)




#தமிழ்வாழ்க
‪#‎படித்ததில்_பிடித்தது‬

ஞாயிறு, 26 ஜூலை, 2015

பிரபஞ்சம் ( The Universe )



பிரபஞ்சம் ( Universe ), பால் வழி ( Milky Way ), Galaxy (நட்சத்திர மண்டலம்), சந்திரன், சனி, செவ்வாய் என விண்வெளி விடயங்கள் யாவும் அன்றாடம் நமது வாழ்க்கையில் இடம்பெறத் தொடங்கிவிட்டது.

விஞ்ஞானிகள மாத்திரமே ஈடுபாடு காட்டிவந்த இவ்வகையான விடயங்களில் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்விலும் இடம்பெறும் இந்த நிலைக்கு ஊடக வளர்ச்சியும், நவீன விடயங்கள் மற்றும் பிரதானப்படுத்தப்படும் வேற்றுக் கிரகங்களில் உயிர் வாழ்க்கை என்ற தேடலும் மிக முக்கிய இடத்தைப் பெறுகி்ன்றன.

அத்துடன், உலகின் வளர்ச்சியில் தம்மையும் இடம்பெறச் செய்ய பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வங் காட்டி வருகின்றமையும் அந்நாட்டு மக்களின் ஆர்வத்தையும் பெற்று வருகிறது.

இவ்வகையில் நமது பூமி அங்கம் வகிக்கும் இந்தப் பிரபஞ்சம் பற்றிய தேடல் இன்று விஞ்ஞானிகளின் ரகசிய கோப்புகளிலிருந்து இடம்பெயர்ந்து சாதாரண மனிதனின் கற்பனை வரை வந்து அடைந்துவிட்டது.

நாளுக்கு நாள் நவீன தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் விஞ்ஞான உலகம் அவை மக்களை சென்றடைவதை விரும்ப ஆரம்பித்த காரணத்தால் இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் யாவும் ஏட்டிக்குப் போட்டியாக ஊடகங்களில் வெளியாகிக்கொண்டும் இருக்கிறது.

இதுவரை நாம் அறிந்திருந்த பால் வழியின் அளவு நாம் நினைத்ததை அல்லது கணிப்பிட்டதை விட 15 வீதம் பெரிது என்றும், விஞ்ஞான உலகம் இது வரை கணிப்பிட்டிருந்ததை விட 15 வீதம் அதிக வேகத்துடன் பிரயாணிக்கிறது என்றும் கலிபோர்னியாவில் இடம்பெற்ற அமெரிக்க வாணியல் நிபுணர்களின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2009 ஜனவரி 04ம் திகதி முதல் 08ம் திகதி வரை Long Beach, California வில் இடம்பெற்று வரும் 213வது American Astronomical Society (AAS) கூட்டத் தொடரில் Dr Reid அவர்களால் வெளியிடப்பட்ட தகவல்.

நாம் நினைத்திருந்ததை விட அளவிலும், வேகத்திலும் நமது பால் வழி பெரிதாக இருக்குமாக இருந்தால், இது வரை எதிர்வு கூறப்பட்ட வேறு பல ஆபத்துகளும் இங்கு முதன்மை பெறுகிறது.

நமது பால்வழி பயணிக்கும் வேகத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் இடம்பெறும் என்று கணிப்பிடப்பட்ட விண்வெளி மோதல்களின் கால அளவும் குறைக்கப்பட்டு அவை ஏற்கனவே எதிர்பார்த்ததை விட விரைவாக ஏற்படும் அபாயமும் முற்படுத்தப்படுகிறது.

எனவே, விண்வெளி விஞ்ஞானமும் நாளுக்கு நாள் நாம் அறிந்து கொள்ளும் புதுப்புது தகவல்களைக் கொண்டு அபிவிருத்தியடைந்து கொண்டு செல்கிறது.

நமது பூமியை அண்மித்து, நமது பால் வழியில் வேறு எங்காவது உயிர் வாழ்க்கையின் சாத்தியம் தென்படுகிறதா எனும் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், இதுவரை கிடைக்கப்பெற்றிருக்கும் தகவல்களைக் கொண்டு நமது பிரபஞ்சம் தொடர்பான தகவல் ஆராய்ச்சியை மேற்கொள்ளப்போகிறோம்.


முதலில் பிரபஞ்சம் என்றால் என்ன ? என்ற கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.

இயற்கை சார்ந்து காணப்படும் (படைக்கப்பட்ட) அனைத்தையும் உள்ளடக்குவதேபிரபஞ்சம் எனப்படுகிறது. விண்வெளி முதல் பூமியில் காணப்படும் அனைத்தையும் இதற்குள் அடக்கிவிடப்படுகிறது.

எனினும், விண்வெளி ஆராய்வின் போது முன் நிலைப்படுத்தப்படும் பிரபஞ்சம் என்பது பொதுவாக விண்வெளியில் காணப்படும் விடயங்கள் தொடர்பாகவே உபயோகப்படுத்தப்படுகிறது.

சுமார் 14 (அன்னளவாக 13.6 / 13.8) பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் நமது பிரபஞ்சம் - Big Bang என்று அழைக்கப்படும் நிகழ்விலிருந்து ஒரு கட்டமைப்புக்குள் வந்ததாக விஞ்ஞானம் விளக்கமளிக்கிறது.

Big Bang ( பெரும் பேரொலி )  

Big Bang நிகழ்வானது பொதுவாக அடிப்படையில் வெப்ப நிலையிலும், அடர்த்தியானதுமாகக் காணப்பட்ட ஒரு ஆரம்ப நிலையில் குறிப்பி்ட்ட அளவு கால எல்லைக்குள் ஏற்பட்ட ஒரு நிகழ்வாக (பெருவெடிப்பாக) கருதப்படுகிறது.

இதன் தாக்கத்தினாலேயே இன்று நாம் எடுத்துக் கொண்ட பிரபஞ்சம் உருவானதாகவும், விரிவடைந்து கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்த நிகழ்வு ஏற்பட முன்னதாகக் காணப்பட்ட ஆரம்ப நிலை என்ன என்பதை பல்வேறு விஞ்ஞானிகள் பல்வேறு வகையில் விளக்கியும், மேலும் விளக்கங்களுக்காக முயற்சியும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இயற்பியல் துறை வல்லுனர்கள் ( Physicists ) பல்வேறு கோணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு பல் வேறு விதமான தகவல் முடிவுகளைப் பெற்றிருக்கிறார்கள். எனினும், தீப்பிழம்பு நிலையில் காணப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது.

அதன் அடிப்படையில், பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை குறித்த நிலையான தகவல்களாக அதன் செயற்பாட்டு குணாதிசயங்களாகக் காணப்பட்ட அளவற்ற அடர்த்தியும், குறிப்பிட்ட கால அளவுக்குள் ஏற்பட்ட வெப்ப நிலையுமே அறியப்பட்டிருக்கிறது.

Big Bang நிகழ்வின் உந்துதலுக்கு இக்காரணிகளும், அங்கு காணப்பட்ட அடர்த்தி,வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக அமைந்திருப்பதாக பொதுவான நம்பிக்கை இருப்பினும், ஆரம்ப நிலை தொடர்பான நிலையான விளக்கங்களை விட ஊகங்களே அதிகமாகக் காணப்படுகின்றன.

எனவே Big Bang நிகழ்வுக்கு முன்னதான பிரபஞ்சத்தின் நிலை இன்னும் (இதுவரை) முடிவாக அறியப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது.

இப் பெருவெடிப்பே பிரபஞ்சத்தின் ஆரம்பம் என எடுத்துக்கொள்வதனால் இந் நிகழ்வு சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்றதாக விஞ்ஞானிகள் அளவிடுகின்றனர்.

எனினும் இதன் தாக்கம் அண்ட வெளியில் இன்னும் காணப்படுவதாகவும், பிரபஞ்சம் மேலும் விரிவடைந்து கொண்டு செல்வதாகவும் இயற்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட தாக்கங்களும்,வெளிப்பாடுகளுமே இயற்பியற் கோட்பாடுகளை முடிவெடுக்க உதவுகின்றன, பெரு வெடிப்பின் (Big Bang) போது ஏற்பட்ட பல்வேறு கதிர் வீச்சுக்கள் இன்றளவும் விண்வெளியில் காணப்படுவதாக விண்வெளி ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டு செல்லும் பிரபஞ்சம், ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பது இயற்பியல் தத்துவமாக விளங்குகிறது.

அதன் அடிப்படையில் பிரபஞ்சத்தின் முடிவு எவ்வாறு இருக்கப்போகின்றது அன்பதை அறியும் ஆவல் விஞ்ஞான உலகத்தில் அதிகரிக்கின்றது.

பிரபஞ்சத்தின் முடிவில் ஏற்படப்போகும் விடயங்களை அறிந்துகொள்வதன் மூலம் அதன் ஆரம்பத்தை அறிந்து கொள்வது எனும் நம்பிக்கையில் இயற்பியல் நிபுணர்கள்,விஞ்ஞானிகள் இவற்றை மேற்கொள்கின்றனர்.

பெரு வெடிப்பின் பின் ஒவ்வொரு விநாடியும் மிக வேகமாக பிரபஞ்சம் விரிவடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அப்படியாயின் பெருவெடிப்பைத் தொடர்ந்து விண்வெளியில் நடந்தது என்ன என்று ஆராய்ந்தால், விஞ்ஞானம் அதை மூன்று நிலைகள் அல்லது சகாப்தங்களாகப் பிரிக்கின்றது.

முதலாவதாக : பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை
இரண்டாவதாக : தொடக்க நிலை
மூன்றாவதாக : கட்டமைப்பு நிலை

ஆரம்ப நிலை ( The very early universe )

இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆரம்ப நிலை தொடர்பான முழுமையான ஒரு முடிவு இன்னும் எட்டப்படாத நிலையே காணப்படுகின்றது, இதன் அடிப்படையில் தான் பிரபஞ்சத்தின் முடிவு பற்றிய ஆய்வுகளும் முக்கியம் பெறுகின்றன.

எனினும் இச்சந்தர்ப்பத்தில் வெடித்துச் சிதறிய அனைத்தும் மிகுந்த வலிமையுடையவையாக இருந்திருக்கும் என்பது இயற்பியல் நிபுணர்களின் கருத்தாகும்.

இந்த சகாப்தத்தை ஆங்கிலத்தில் The Planck என்று குறிப்பிடுவார்கள்.

பெருவெடிப்பினை அடுத்து பயணித்த 10�43 செக்கன்களே இக்கால அளவாகும், இத்தருணத்தில் ஈர்ப்பு விசை, வலிமையான அணுவிசை, வலிமை குறைந்த அணுவிசை மற்றும் மின் காந்த விசை ஆகிய நான்கு வகையான சக்திகளும் ஒன்றிணைந்தே இருந்திருக்கும் என்பது இயற்பியல் நம்பிக்கை, எனினும் இது தொடர்பான மேலதிக ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்து வந்த 10�43 முதல் 10�35 அளவான செக்கன்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்களை ஆங்கிலத்தில் Grand Unification Epoch, அனைத்தும் ஒன்றாக இணைந்த சகாப்தம் என்று குறிப்பிடப்படுகிறது.

இக்கட்டத்தில் பிரபஞ்சம் ஒரு மிகச்சிறிய அணுக்கல் அளவில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆரம்ப நிலையில் காணப்பட்ட கொதி நிலையை குறைந்து வந்த அதே வுளை இதே கால கட்டத்தில் ஈர்ப்பு விசை தனியாகப் பிரிய ஆரம்பித்திருந்தது.

அடுத்து வந்த 10�35 முதல் 10�12 செக்கன் கால அளவை ஆங்கிலத்தில் Inflationary Epoch, இந்தக் கால கட்டத்தில் தான் பிரபஞ்சம் உப்பிப் பெருக்க ஆரம்பித்ததாக அறியப்படுகிறது.

இக்கால கட்டத்தில் பிரபஞ்சம் குளிரடைந்து வெறுமையாகக் காணப்பட்டிருக்கலாம் எனும் அபிப்பிராயமும் உண்டு, அக்கால கட்டம் Electroweak Epoch என்றும் அறியப்படுகிறது.

இந்த சகாப்தத்திலிருந்து வளர்ச்சியடைய ஆரம்பித்த பிரபஞ்சம் இன்றளவு வரை சுமார் 92 பில்லியன் ஒளியாண்டு அளவுகள் அல்லது அதற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

விண்வெளியில் நட்சத்திரங்கள்,கிரகங்களுக்கிடையிலான தூரத்தை அளவிடுவதற்கு ஒளியாண்டு எனும் அலகு பாவிக்கப்படுகிறது. ஒருஒளியாண்டு என்பது வெற்றிடத்தின் ஊடாக ஒளி (வெளிச்சம்) ஒரு ஆண்டிற்கு பயணிக்கக் கூடிய தூரமாகும், இதை அன்னளவாக பத்து ட்ரில்லியன் கி.மீற்றர்கள் என்று கணிப்பிடப்படுகிறது.

தொடக்க நிலை ( The early universe )

பிரபஞ்சம் தொடர்பான இயற்பியல் முடிவுகள் இந்நிலையிலிருந்தே முழுமை பெறுகின்றன. கடந்த நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சியுடன், பிரபஞ்சம் ஒரு வடிவம் பெற ஆரம்பிக்கும் நிலையாக இக்கால கட்டம் கணிக்கப்படுகிறது.

பிரபஞ்சத்தின் மிக அடிப்படையான விடயங்கள் உருவாக்கத்தைத் தொடர்ந்து, கதிர்வீச்சு ஆதிக்கம் இந்நிலையிலிருந்தே ஆரம்பிக்கிறது.

இன்று நாம் அறிந்திருக்கும் பிரபஞ்சமானது பொருட்கள் அல்லது அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய விடயங்களால் நிரம்பப் பெற்றதாகக் காணப்படுகிறது, எனினும் ஆரம்ப காலத்தில் இவற்றின் செறிவை விட கதிர்வீச்சின் செறிவே மேலோங்கியிருந்ததாக அறியப்படுகிறது.

இதன் பிறகு வந்த கால கட்டத்திலேயே கதிர்வீச்சு ஆதிக்கத்தை விட பிரபஞ்சத்தில் பொருட்களின் செறிவு அதிகரித்திருப்பதாக இயற்பியல் கணிப்பிடுகிறது.

கீழ் காணும் விளக்கப்படத்தில் காணப்படும் மாதிரி கால அட்டவணையைக் கவனிக்க.


தொடக்க நிலை (The early universe) யின் போது விண்வெளியில் ஏற்பட்ட பல மாற்றங்களில், ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையை பிரபஞ்சம் அடைந்தமையானது முக்கியமான ஒரு கட்டமாகும்.

ஆரம்பநிலையில் ஏற்பட்ட நிகழ்வுகள் மற்றும் விளைவுகளின் காரணத்தால் ஒளி ஊடுருவிச் செல்ல முடியாத ஒரு தெளிவற்ற விண்வெளியே காணப்பட்டது.

எனினும், இப்போது பிரபஞ்சத்தின் விரிவாக்க நிகழ்வுகள் தெளிவான ஒரு சூழ்நிலையை உருவாக்கி வந்ததால் தற்போது ஒளி தன் பயணத்தை இடையூறு இன்றி தொடரக்கூடிய சாத்தியம் உருவானது.

இக்கால கட்டத்தில் பிரபஞ்ச விரிவாக்கம் பல சகாப்தங்களூடாக பிரயாணிக்கின்றது.

இந்த சகாப்தங்கள் பற்றி ஆராயும் போது சக்தி (வலிமை) பற்றிய விடயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரபஞ்சம் பல்வேறு வகையான சக்திகளை உள்ளடக்கியே தன் விரிவாக்கத்தை மேற்கொள்கிறது. ஆரம்பத்தில் கதிர்வீச்சின் செறிவு அல்லது அடர்த்தி நிலையே மேலோங்கியிருந்த போதும் தற்போது புதிதாக உருவாகிக்கொண்டு வரும் பொருட்களின் செறிவு விண்வெளியில் ஆளுமை செலுத்த ஆரம்பிக்கிறது.

இதன் அடிப்படையில் ஏற்பட்ட தெளிவான நிலையே ஒளியின் பிராயணத்திற்கு ஏதுவாக அமைந்தது.

பெருவெடிப்பினைத் தொடர்ந்த 10-12 முதல் 10-06 செக்கன்களுக்கு இடைப்பட்ட காலத்தை, ஆங்கிலத்தில் Quark Epoch என்று அழைக்கிறோம், தமிழில் பிரபஞ்சத்தின் மிக அடிப்படையான பொருட்கள் உருவாகிய சகாப்தம் என்று குறிப்பிடலாம்.

இதன்போது, பிரபஞ்ச விரிவாக்கத்தின் போது ஒன்றிணைந்து பயணித்த பல்வேறு வலு (சக்திகள் ) க்கள் தனித்தனியே பிரிய ஆரம்பிக்கின்றன.

இக்கால கட்டத்தில் பிரபஞ்சத்தின் உருவான அடிப்படை அணுப் பதார்த்தங்கள், பொருட்கள் திரள ஆரம்பித்த அதே வேளை, தமக்கிடையிலான தொடர்பாடல் மற்றும் ஈர்ப்பு விசை அடிப்படை நிலைகளையும் அடைய ஆரம்பிக்கின்றன.

எனினும், பிரபஞ்சத்தில் காணப்பட்ட வெப்ப நிலை ஆதிக்கம் இருவேறு அணு வலுக்கள் தமக்கிடையிலான தொடர்பாடலை மேற்கொள்ளும் நிலையை வெகுவாக குறைத்தே வைத்திருந்ததாக கணிக்கப்படுகிறது.

ஆயினும், அடுத்து வந்த 10-6 முதல் 1 செக்கன் வரையான கால அளவு இந்நிலையிலிருந்து மாற்றம் பெற்று, அணுத் துகள்கள் (துண்டுகள்) அவை சார்பான வலுக்கள் ஒன்றையொன்று தொடர்பு கொண்டு இணைந்து செயற்படும் நிலையை தோற்றுவிக்கிறது.

இக்கால கட்டம் ஆங்கிலத்தில் Hadron Epoch என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையின் போது மாற்றமடையாத சில பொருட்கள் உருவாக ஆரம்பிக்கின்றன, இவை அடிப்படையில் நிலையான தன்மையைக் கொண்டிருக்கும்.

இயற்பியலின் போது அதன் தன்மைகளை அதன் வலுவைக்கொண்டு உறுதியானவையாக அடையாளங் காணப்படுகின்றன.

இவற்றிற்கு உதாரணமாக protons மற்றும் Neutrons போன்றனவற்றைக் குறிப்பிடலாம். பொதுவாக Proton கள் சம அளவான நேர் மற்றும் எதிர்மறை வலுவுடையனவாகக் காணப்படும் அதே வேளை  Neutron கள் வலு நிலையில்லாவிடினும் Proton களுக்கு நிகரான திரள் வலுவைக் கொண்டிருக்கும்.

Protons மற்றும் Neutrons என்பவை பொதுவாக ஒரு மூல முன் மாதிரியான பொருட்கள் (தமிழில்) ஆகும்.

இக்கால கட்டத்தில் Pair Production என்று இயற்பியலில் அறியப்படக்கூடிய ஒரு விடயமும் நடந்தேறியதாகக் கணிப்பிடப்படுகிறது.

Pair Production என இங்கே குறிப்பிடப்படுவது, உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் அதன் எதிர் சக்தியுள்ள இன்னொரு பொருள் உருவானதாகும்.

உதாரணமாக Proton கள் நேர்மைறை சக்தியைக் கொண்டிருந்தால் இதே போன்ற எதிர்மறை சக்தியுடைய ஒரு பொருளும் உருவாகியதாகக் கணிப்பிடப்படுகிறது.

எனினும் இவையனைத்தின் செயற்பாட்டின் போதும், இன்றளவும் கூட விஞ்ஞானத்தால் வரையறுத்துக் கூறப்படாத Dark Energy இன் செயற்பாடும் ஆளுமையும் இருந்து வந்ததாக இயற்பியலின் இன்னொரு பிரிவு வலியுறுத்திக் கூறுகிறது.

பிரபஞ்ச விரிவாக்கத்தின் போது அடிப்படைக் காரணிகளாக விளங்கிய பல்வேறு விடயங்களில் Dark Energy மற்றும் Dark Matter போன்றவை இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.


விஞ்ஞானத்தினால் வரையறுத்துக் கூறப்படாத இவ்விடயங்களை இலகுவாக, பின் வருமாறு விளக்கலாம்.

Dark Energy - நேரடி தமிழ் மொழிபெயர்ப்பில் கண்ணுக்குப் புலப்படாத சக்தி என்றே அறியப்பட வேண்டும், பிரபஞ்ச விரிவாக்கத்தின் போது வேறு (அணு) பொருட்களையும் ஒருமுகப்படுத்தி, விரிவாக்க விகிதாசாரத்தை அதிகரிக்கச் செய்த அடிப்படைக் காரணியாக இது கணிக்கப்படுகிறது.

இதன் தாக்கமும் விளைவும் இன்று வரை நீடிப்பதே, நமது பிரபஞ்சத்தின் அளவு இன்றளவும் விரிவடைந்து கொண்டு செல்வதற்கும் காரணமாகும்.

Dark Matter - என அறியப்படுவது பொதுவாக வேறு எந்தவிதமன தொடர்பாடல் வலுவும் இல்லாத ஒரு சக்தியாக அறியப்படுகிறது, எனினும் கண்ணுக்குப் புலப்படக் கூடிய பொருட்கள் மீதான ஈர்ப்பு சக்தியின் போது அனுமானிக்கக்கூடிய ஒன்றாக இயற்பியல் நம்புகிறது.


கண்ணுக்குப் புலப்படக்கூடிய பிரபஞ்சத்தின் பிரமாண்டமான சக்தி மேற்கூறப்பட்ட விடயங்களினாலேயே கட்டுப்படுத்தப்படுவதாக அறியப்படுகிறது.

பிரபஞ்ச விரிவாக்க தொடக்க நிலையின் அடுத்து வந்த 1 செக்கன் முதல் 3 நிமிடம் வரையான கால அளவை  Lepton சகாப்தம் என்று குறிப்பிடப்படுகிறது.

இக்கால கட்டத்தின் போது, இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட Hadron சகாப்தத்தில் உருவான பொருட்களும் அவற்றிற்கு எதிர் வலுவுடைய அனைத்தும் ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றையொன்று அழித்த காரணத்தினால் பலவீனமான தொடர்பாடல் வலுவினைக் கொண்ட அணுப்பிளவுகள் அல்லது அணு மூல தாதுக்கள் எஞ்சுகின்றன. இவையே Lepton என்றும் அறியப்படுகின்றன.

எனினும், இவ்வாறு ஒவ்வொரு சகாப்தத்தில் உருவாகும் தாதுக்களும் அதன் முடிவில் தம் சக்திக்கு எதிர் சக்தி கொண்ட அதே வகை தாதுக்களால் அழிக்கப்படுவதன் மூலமே இன்னொரு புதுவகை பிளவு அல்லது வலு உருவாகிறது.

அந்த வகையில் Lepton சகாப்தத்தின் இறுதியில், முன்னர் உருவான நிலையான அணு மூலங்களுடன் தொடர்பாடல் மேற்கொள்ளக்கூடியதும், மின்காந்த சக்தியை தன்னகத்தே கொண்டதுமான Photon வலு ஆதிக்கம் உருவாகிறது.

அடுத்து வரும் 300,000 ஆண்டுகள் வரை இவை நிலைத்து நின்றதாக அறியப்படும் இச்சகாப்தம் அதன் பெயரைக் கொண்டே Photon சகாப்தம் என்று அறியப்படுகிறது.

Photon என்பதை தமிழில் ஒரு குறிப்பிட்ட அளவான மின்காந்த வலு அல்லது கதிர்வீச்சு என்று சொல்லலாம்.

இக்கால கட்டத்தின் போது பிரபஞ்ச விரிவாக்கம் பல முக்கிய திருப்பு முனைகளை சந்தித்திருப்பதாக இயற்பியல் தத்துவங்கள் எடுத்துக்கூறுகின்றன.

இதில் முக்கியமானதாக பிரபஞ்சம் அக்கால கட்டத்தில் அடைந்த வெப்பநிலையைக் குறிப்பிடலாம்.

ஏற்கனவே உருவாகியிருந்த protons மற்றும் neutron அணு மூலங்கள் ஒன்றிணைந்து உருகு நிலையடைந்ததன் மூலம் ஒன்றிணைந்த அணு சக்திக்கான உருவாக்கம் இங்கே ஆரம்பிக்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தை Nucleosynthesis என்று அழைக்கிறோம், பெருவெடிப்பின் பின்னர் வந்த 3 நிமிடம் முதல் 20 நிமிடம் வரையான காலத்திற்குள் இந்நிகழ்வு நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த பதினேழு நிமிட அளவிற்கு மேல் அணுசக்தி விரிவாக்கம் நடைபெற முடியாத அளவு பிரபஞ்சத்தின் வெப்ப நிலை குறைந்து விட்ட காரணத்தினால் மேலதிக உருகு நிலை வலுவை இழக்கின்றது.

எனவே அணு வலுவும் photon  வலுவும் இக்கால கட்டத்தில் சம நிலையை அடைந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் நிபுணர்களின் கருத்தாகும்.

இக்கால கட்டத்திலேயே ( சுமார் 70,000 ஆண்டுகள் வரை ) பொருட் செறிவு ஆதிக்கம் பிரபஞ்சத்தில் நிலை கொண்டிருந்தது.

பெருவெடிப்பின் பின்னரான 240,000 முதல் 310,000 ஆண்டுவரையான கால கட்டமே ஹைட்ரஜன் (Hydrogen) மற்றும் ஹீலியம் (Helium) போன்ற அணு மூலங்கள் உருவாகிய காலமாகும்.

பிரபஞ்ச வெப்ப நிலை தளர்ச்சியடைந்திருந்த இக்கால கட்டத்தில், அணுச் சேர்க்கை மூலம் இவ்வணு மூலங்களின் வலு, நடு நிலையை அடைகின்றது.

இந்நிலையை மீள் இணையும் காலம் (Re Combination) என்று அழைக்கிறோம்.

இக்கால கட்டத்தின் இறுதியில் பிரபஞ்சத்தில் காணப்பட்ட அனைத்து அணு சக்திகளும் சம அளவில் நேர் அல்லது எதிர்மறை சக்திகள் எதுவும் அற்ற நடு நிலையிலேயே காணப்பட்டிருக்கின்றன.

எனவே, பிரபஞ்ச வெளி எந்தவொரு சக்தியின் ஆளுமையினாலும் செயலாற்றாத திறந்த வெளியாகவும் காணப்பட்டிருக்கும்.

இதன் அடிப்படையில், மீள் இணைவு காலத்தின் இறுதியில் உருவான Photon அணு மூலங்கள் தங்கு தடையின்றி பிரபஞ்ச வெளியில் பயணித்திருக்கும்.

இச்செயற்பாட்டின் போது காணப்பட்ட திறந்த வெளி அரங்கே இயற்பியல் கணிப்பீடுகளுக்கு பெரிதும் உதவக்கூடிய அண்டவெளியின் நுண்ணலை பின்புலம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கின்றது.

இதை இயற்பியலில், Cosmic Microwave Background அல்லது CMB என்கிறோம்.

Cosmic Microwave Background

அண்டவெளியில் காணப்படும் மின்காந்த வலுவுடைய (நுண்ணலை) கதிர்வீச்சையே Cosmic Microwave Background  என்று அழைக்கிறோம்.

சாதாரண கண்களுக்கோ அல்லது தொலை காட்டிகளுக்கோ புலப்படாத இந் நுண்ணலைப் பின்புலம்,  ஒலிக் கதிர்களை விரிவாக்கிக் காட்டக்கூடிய (Radio Telescope) தொலை நோக்கிகள் மூலமாகவே அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

சாதாரணமான தொலை நோக்கிகள் மூலம் காணப்படும் விண்வெளிப் படங்களில் இரண்டு நட்சத்திரங்கள் அல்லது இரண்டு கிரகங்களுக்கு இடையிலான இடைவெளி எப்போதும் கருமை நிறத்தில் இருப்பதையே கண்டிருப்பீர்கள். எனினும், radio telescope மூலமாக இவை வேறு வகையான தகவல்களை நமக்கு தருகின்றன.

1965 ம் ஆண்டு, Arno Penzias மற்றும் Robert Wilson என்று அறியப்பட்ட வானியல் ஆய்வு நிபுணர்கள், ஒரு ஆய்வின் போது தற்செயலாக அவதானிக்க விளைந்த ஒரு விடயமாகவே நமது அண்டவெளியின் நுண்ணலைப் பிரசன்னம் அறியப்படுகிறது.

ஆகாயத்தில் பரவலாக விரிந்து காணப்படும் நுண்ணலை வீச்சு, வான் வெளியின் சகல பக்கங்களிலிருந்தும் ஒரு சீரான பாய்ச்சலைக் கொண்டிருக்கும்.

முதன் முதலில் மேற்கூறிய வானியல் நிபுணர்கள் இதை அவதானித்த போது, இது பற்றிய முன்கூட்டிய எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தால் இது ஏதோ தவறுதலாக தமது Antenna வில் தென்பட்ட விடயம் , ஒரு புறாவின் எச்சமாகவும் இருக்கலாம் என்றும் கருதியிருந்தார்கள்.

எனினும், இது தற்செயல் அல்ல, ஏற்கனவே George Gamow என்பவரால் எதிர்வு கூறப்பட்டிருந்த வகையான கதிர்வீச்சு அதிர்வுகளின் வெளிப்பாடே என்று பின்னர் Robert Dicke மற்றும் Jim Peebles என்பவர்கள் ஊடாக இவர்கள் அறிந்து கொண்டதாக தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.

George Gamow வின் என்பவர், பெருவெடிப்பின் பின்னர் (பிரபஞ்சத்தின் வெப்ப நிலை குறைந்து கொண்டு சென்ற காலகட்டத்தில்) இன்று வரையிலும் அதன் பல்வேறு கதிர்வீச்சு செயற்பாடுகள் வானில் காணப்படலாம் என்று எதிர்வு கூறியிருந்தார்.

எனவே, பெருவெடிப்பின் எதிரொலியில் இப்போதும் பிரபஞ்சத்தில் எஞ்சியிருக்கும் வானொலி நுண்ணலைகளாகவே இதுபார்க்கப்படுகின்றது.


மேற் காணும் படத்தில் நீங்கள் காண்பது நமது பிரபஞ்சத்தின் நுண்ணலை பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் WMAP என்று அறியப்படும் தொலைநோக்கியினால் உருவாக்கப்பட்ட வரைபடமாகும்.

WMAP என்பது  Wilkinson Microwave Anisotropy Probe என்ற விண்ணிலிருந்து செயற்படும் இத்தொலை நோக்கியின் சுருக்கமான பெயராகும்.

CMB மேலும் விரிவாக ஆராயும் போது, ஆரம்பத்தில் இவை கண்களுக்குப் புலப்படக்கூடிய ஊதாக் கதிர்களாக இருந்து பின்னர் வந்த பல பில்லியன் ஆண்டுகால பிரபஞ்ச விரிவாக்கத்தின் போது கதிர்வீச்சு ஆதிக்கத்தில் நீண்ட அலைகளினால் காவிச்செல்லப்பட்டு முழு பிரபஞ்சத்தின் எல்லைக்கும் விரிவாக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

எனவே தான், இன்று அறியப்படும் பிரபஞ்சத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் நுண்ணலை பிரதேசங்களில் இவை காணப்படக்கூடியதாக இருக்கிறது.

அடர்த்தியான ஒரு இடத்திலிருந்து வெளியேற்றப்படும் கதிர் வீச்சு, ஈர்ப்பு சக்தியுடைய பிரதேசங்கள் ஊடாக பயணிக்கும் போது சாதாரண நிலையை விட சற்று அதிகமான வலுவை பிரயோகிக்கும் தேவை வருகிறது, அப்படியொரு நிலையில் மேலதிக வலு பாவிக்கப்படுவதால், இப்பிரதேசத்தை விட்டு நீங்கும் போது அடர்த்தியற்ற பிரதேசங்களில் வெளியேறும் கதிர்வீச்சுகளை விட வலுக்குறைந்ததாகவே இவை காணப்படும். இதன் காரணமாக நுண்ணலைப் பிரதேசங்களின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை விட சற்று வெப்பநிலை குறைந்ததாகவும் காணப்படும்.

இவ்வடிப்படையில், தற்போதைய பிரபஞ்சத்தின் நுண்ணலைப் பிரதேசமும் ஒரு பக்கத்தில் இருக்கும் வெப்ப நிலையை விட இன்னொரு பக்கத்தில் சற்று குறைந்ததாகவே காணப்படுவதாக அறியமுடிகிறது.

எது எவ்வாறியினும், இவற்றின் அடிப்படையிலான மேலதிக ஆய்வுகள் மூலம் பிரபஞ்சத்தின் உருவாக்கம்,விரிவாக்கம் , மாற்றங்கள் மற்றும் இறுதி நிலை தொடர்பான மேலதிக அறிவினைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது வானியல் மற்றும் இயற்பியல் நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக இருப்பதனால், எதிர்வரும் காலங்களில் இவை பற்றிய பல்வேறு ஆய்வுகளும் திட்டமிடப்பட்டிருக்கின்றன. அவை மூலம் பல்வேறு புதுமையான தகவல்களையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கலாம்.


பிரபஞ்ச விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்தை Dark Ages என்று குறிப்பிடுவார்கள், இக்கால கட்டம் ஒளி ஊடுருவாத, தெளிவற்ற நிலையைக் கொண்டிருந்திருக்கிறது.

Photon கள் ஒன்றையொன்று பிரிய முன்னர் தம் தொடர்பாடல்களை அபிவிருத்தி செய்து கொண்ட காலமாக இது கணிக்கப்படுகிறது.

இக்காலத்தில் அண்டவெளியில் இருந்த மூலப்பொருட்கள் யாவும் மின்திறன் கொண்டவையாகவும் ஒன்றோடு ஒன்று தொடர்பாடல் கொள்ளும் நிலையிலும் காணப்பட்டுள்ளதாக இயற்பியல் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன, இதன் இறுதியில் ஏற்பட்ட பிரிவு நிலையின் மூலமே மீண்டும் அண்டவெளி தெளிவான நிலைக்குத் திரும்பியதாக கணிப்பிடப்படுகிறது.

எனினும், இது தொடர்பான மேலதிக ஆய்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்தே அண்டவெளியில் ஒரு கட்டமைப்பு உருவாக ஆரம்பித்ததாக அறியப்படுகிறது. சிறு சிறு கட்டமைப்புகளாக ஆரம்பித்தே அதிலிருந்து பெரிய கட்டமைப்புகள் நிலை கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

இவ்வாறு முதல் முதலில் உருவாகிய அண்டவெளி கட்டமைப்புகளை இயற்பியலில் quasars என்று அழைக்கிறோம். இவை நட்சத்திரங்கள் போன்று வெளிச்சமானதாகவும், பல்வேறு அணுப்பதார்த்தங்களை வெளியேற்றக்கூடியவையாகவும் இருந்திருக்கலாம் என்பது இயற்பியல் கணிப்பீடு.

எனினும் ஈர்ப்பு சக்திக்கு ஈடு கொடுக்கும் நிலையில் இவை காணப்படவில்லை, எனவே முதலில் உருவாகிய Quasar தொகுதிகள் சிதற ஆரம்பித்திருக்கின்றன, இவ்வேளையில் இவற்றிலிருந்து வெளியேறிய கதிர்வீச்சு மீண்டும் அணுப் பதார்த்தங்கள் ஒன்று சேர்க்கக்கூடிய தொழிற்பாட்டையும் கொண்டிருந்திருக்கிறது.

எனவே இதற்குப் பிறகு உருவாகி வந்த கட்டமைப்புகள், ஒன்று சேர்க்கப்பட்டடு மின்வலுக் கொண்ட ஒரு வகை வாயு (குழம்பு) நிலையை அடைகின்றன.

தொடரும்.... 


01.07.2009

ஓர் எழுத்து ஒரு சிந்தனை - கர்மா


"K for Karma"
How people treat you is their karma; how you react is yours.
Wayne Dyer
இந்து மதத்தின் இந்த கர்மா என்ற கான்செப்ட்டை மேற்கத்திய நாடுகள் மகிழ்ச்சியுடன் வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த வார்த்தை அவர்களின் அகராதியிலும் இடம் பெற்று விட்டது. பூஜ்ஜியம் போல இந்த கர்மாவும் இந்தியாவால் உலகுக்கு அளிக்கப்பட்ட கொடை . நாம் செய்யும் செயல்கள், conscious or unconscious, ஏதோ ஒரு விதத்தில் நமக்கே திரும்பி வரும் என்ற கான்செப்ட் அவர்களுக்குப் புதியது. நியூட்டனின் மூன்றாம் விதி நம் வாழ்விலும் ஒரு முக்கியமான பங்கு வகிக்கும் என்பது fascinating .இங்கே இந்த கான்செப்ட் நமக்குப் புதியதல்ல. நியூட்டன் விதிக்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் என்ற குறள் எழுதி விட்டோம்.
சரி. இந்த கர்மா என்பது என்ன? யாரேனும் மேலே ஒரு குண்டு நோட் புக்கை வைத்துக் கொண்டு நாம் தினப்படி செய்யும் செயலை சின்ஸியராக குறித்து வைத்துக் கொண்டுள்ளார்களா? இன்று நீ காரில் செல்லும் போது பக்கத்தில் அப்பாவியாக ,மெதுவாக கார் ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து நடுவிரலை காண்பித்தாய், எனவே உனக்கு அடுத்த ஜென்மத்தில் அந்த விரலில் நகச் சுற்று வரட்டும் என்று விதிக்கிரார்களா? ஆனால் Why wait till அடுத்த ஜென்மம்???அதில் நாம் இந்த ஜென்மத்தில் செய்தது ஞாபகம் இருக்காதே?
We are not punished for our sins; We are punished by our sins.பாவங்களால் தண்டனை. பாவங்களுக்காக தண்டனை அல்ல என்கிறார் ஓஷோ. ஏதோ ஒரு விதத்தில் கர்மாவே நம்மை தண்டித்து விடுகிறது. பேன்சி தொப்பி அணிந்த ஒரு record keeper தேவை இல்லை. தினை விதைத்தவன் தினை அறுப்பான்!
கர்மாவே நம்மை தண்டிக்கிறது. ஒருவரை கேலி செய்யும் போது , ஒருவரைப் பார்த்து பொறாமை கொள்ளும் போது , ஒருவரை அழிக்க நினைக்கும்போது ஏதோ ஒரு விதத்தில் அந்த எண்ணம் நம் அசேதனத்தில் தங்கி விடுகிறது. something not right ! ஏதோ ஒரு விதத்தில் அது நமக்கே திரும்பி வருகிறது, sooner or later !! இரவு முழுவதும் பார்ட்டி, நண்பர்களுடன் கூத்து, கலர் கலராக எல்லா திரவங்களையும் உள்ளே தள்ள வேண்டியது. மறுநாள் ஏதோ சரியாக இல்லை. உடல் எதிர்வினை காட்ட ஆரம்பித்து விடுகிறது. ஹேங் ஓவர் வந்து விடுகிறது. வாந்தி, தலை சுற்றல்...அதே இரவு முழுவதும் ஒரு சத் சங்கம், நல்ல இசை, நல்ல சொற்பொழிவு இவைகளைக் கேட்டிருந்தால் அடுத்த நாள் ஏதோ உள்ளகத்தில் something nice !!!
அடுத்தவரைப் பார்த்து விரலைக் காட்டும் போது சில வினாடிகளுக்கு இன்பம், பெருமிதம். பிறகு ஏதோ ஒரு சந்தர்பத்தில் கர்மா வெளிப்பட ஆரம்பிக்கிறது. ஏதோ ஒன்று உறுத்துகிறது.
அதே போல, விரலைக் காட்டாமல் சற்றே பொறுமையுடன் அவரைப் பார்த்து புன்னகைத்து வழி விட்டிருந்தால் அல்லது வழி கேட்டிருந்தால் கர்மா ஏதோ ஒரு விடத்தில் நம்மை reward செய்கிறது.
Like gravity, karma is so basic we often don't even notice it.
Sakyong Mipham

சனி, 25 ஜூலை, 2015

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள்நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை
கண்டு " ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார். அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து
போய்விட்டேன் " என்றார். " எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால்
அவர்.  " 50 கோடி ரூபாய் " என்றார் இவர். " அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை
சொன்னார். அசந்து போனார் இவர்... " சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர். உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.
பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும்
சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக்
கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு  அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர். இந்த நிறுவனத்தின் தலைவர் பேச
ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி
ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது. மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம்.

அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை. இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்
அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது
தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார் இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார். அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார். ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.  அன்பு நண்பர்களை .. - இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது  என்வென்றால் எந்த ஒரு விசயமும்
நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும். " வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்

வியாழன், 23 ஜூலை, 2015

மணவாழ்க்கை - தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள சில உபயோகமான தகவல்கள்



1. நாம் வாழ்க்கையில், வேலை செய்யும் ஆபீஸ் மற்றும் எத்தனையோ இடங்களில் – சாலையில்; நண்பரகளிடம்; கவர்மெண்ட் ஆபீஸ்களில், வெளிநாடுகளில் பயணிக்கும் போது, etc., என - பல compromises, சமரசங்கள் செய்து கொள்கிறோம்..! 
ஆபீஸில் நம் பாஸ், கலீக்ஸை என்னதான் பிடிக்கவில்லை என்றாலும் குறைந்த பட்சம் அந்த கம்பெனியில் 2 or 3 வருடங்களாவது இருக்க வேண்டும் என்றுதானே compromises செய்து கொள்கிறோம்..? அதென்ன மணவாழ்க்கை என்னும் முக்கியமான விஷயத்தில் 6 மாதம் கூட compromise செய்து கொள்ள முடியவில்லை..?
2. ஆண், பெண் உறவுகளில், compromise செய்து கொள்வதில் ஒருவருக்கு தயக்கம் இல்லையென்றாலும், ‘அதென்ன ' நீ' compromise செய்து கொள்ளாமல் இருப்பது..?’ எனும் ஈகோவில்தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது..! பகவான் கன்ணன் சிசுபாலனின் தாயிடம், “நான் அவன் 100 தவறு செய்ய அனுமதிப்பேன்..” என்று சொன்னதைப் போல ஒருவர் அடுத்தவருக்கு குறிப்பிட்ட அளவு time leverage கொடுத்து அதுவரையில் reciprocation எதிர்பார்க்காமல் காம்ப்ரமைஸ் செய்யலாமே..? ஆனால், அது மனதிற்குள் இருக்க வேண்டும்... ! வெளியே சொன்னால், ஈகோவில், “இநதா எண்ணிக்கோ” என்று அடுத்தவர், வேண்டுமென்றே கடுப்பேற்றலாம்..!
3. யார் நோய், யார் மருந்து என்பதை analyse செய்து, மணவாழ்க்கையில், ஆண் நோயென்றும், பெண் மருந்தென்றும் நம் முன்னோர்கள் வரயறுத்து வைத்தார்கள். காலத்தின் மாற்றத்தில் இப்போது ஆண், பெண் இருவருமே நோய்தான்...! (பெண்கள் மத்தியில் “Why compromise, even if mutual ..?” என்று ஒரு எண்ணம் தீவிரமாக பரவுகிறதோ..?. Male Chauvinism போல் இப்போது Female Chauvinism வந்து விட்டதோ..?)
4. இப்போது, மணவாழ்க்கைக்கு மூன்று வழிகள் or படிகள் உண்டு:
a. ஆண்-பெண், ஒருவருக்கொருவர் மருந்தாக இருக்கலாம் or
b. ஒருவரின் நோயை இன்னொருவர் இன்னும் கூட்டாமல், decent space கொடுத்து வாழலாம் or
c. ஒருவருடைய நோயை இன்னொருவர் தன் நோயால் (குணத்தால்) கூட்டி அல்லல் அதிகமாகி விடலாம்.
மூன்றாவது நடக்கும்போதுதான் மண வாழ்க்கை கசக்கிறது..!
3ம் படியில் இருப்பவர்கள், பிரச்சனை புரிந்து, முயற்சித்து, இரண்டாம் படிக்கு செல்ல வேண்டும். அந்த புரிதல், முயற்சி நடக்காமலே பல திருமணங்கள் முறிகின்றன...!
5. Compromises இல்லாத மண வாழ்க்கை என்பது, ‘டைனோசர்’ போல் சுத்தமாய் மறைந்து போன ஒன்று..! மணவாழ்க்கை என்பதற்கு இனி அர்த்தம்: ‘co-existence with lot of compromises and mutual understanding’. இதில் தெளிவில்லாதவர்கள்- ஆண்கள or பெண்கள் - கல்யாணம் செய்து கொள்ளும் முன் தீர யோசிக்க வேண்டும்..!

வெள்ளி, 10 ஜூலை, 2015

மகாபாரதத்தில் இது உங்களுக்கு தெரியுமா?

பீஷ்மர் சரியாக தன்னுடைய முழு ஆற்றலுடன் போரிடவில்லை என்று அவரை துரியோதனன் எப்பொழுதும் குறை கூறிக்கொண்டு இருந்தான்.
பீஷ்மரும் வெறுத்து போயி , நாளை நான் பாண்டவர்களை சாய்கிறேன் என்று சொல்லி ஒரு ஐந்து அம்புகளை தயார் செய்து துரியோடனுக்கு காண்பித்தார் . துரியோதனன் அவரை நம்பாமல் , அந்த பானங்களை தன்னிடம் கொடுக்கும் படி கேட்டு , தான் இதை நாளை பிரயோகித்து அவர்களை மடிய செய்வேன் என்று சொல்லி வாங்கிக்கொண்டு சென்று விட்டான்.
இது நம்ம மாயக்கண்ணன் சகல வியாபி பரமாத்மா கிருஷ்ணனுக்கு தெரிய வந்தது.
உலகின் மிகப்பெரிய சாணக்கியதாரி அவர்,அர்ஜுனனை கூப்பிட்டு , நீ ஒரு முறை துரியோதனன் உயிரை கந்தவர்களிடமிருந்து காப்பற்றிய பொழுது அவன் உனக்கு ஒரு வரம் கொடுத்தான் அல்லவே. நீ இன்று சென்று அந்த அம்பு பாண்ணங்களை அவனிடமிருந்து அவன் கொடுத்த வரத்திற்கு ஈடாக பெற்று வா என்று சொல்லி அனுப்ப , அவனும் அழகாக சென்று துரியோதனிடம் கேட்க , துரியோடனும் மறுக்க முடியாமல் , அந்த அம்புகளை அர்ஜுனனிடம் கொடுத்து விட்டான் .
பின்பு பிஷ்மரிடம் சென்று இன்னும் அதே போல 5 அம்புகள் வேண்டும் என்று கேட்க அவரும் என் ஆயுளின் எல்லா தவபலமும் கொண்டு உருவாக்கப்பட்ட அம்பு அவை. அதே போல இன்னொரு முறை உருவாக்க முடியாது என்று மறுத்துவிட்டார் .
ஆக, பாண்டவர்களை வெற்றி பெற இருந்த மற்றொரு சந்தர்ப்பத்தையும் துரியோதனன் நழுவ விட்டான்.
Ranga Nathan's photo.
கட்டுரை நன்றி https://www.facebook.com/photo.php?fbid=1107699659260086&set=a.264360220260705.78637.100000601878768&type=1&theater