செவ்வாய், 30 டிசம்பர், 2014

மதங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றன –சுரண்டலில்

 | இதழ் 119 | 29-12-2014| அச்சிடு அச்சிடு

(பிரச்சினைக்கு பதில் சொல்வது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. பிரச்சினை எது/எங்கே என அறியும் ஒரு முயற்சியே)
நான் கொஞ்சம் நாத்திகம் பேசுவேன். ஆனால், உள்மனசு 100சதவீத நாத்திகம் பேசுகிறதா எனக்கேட்டால் தெரியாது. ஆனாலும் நான் நாத்திகம் பேசுவேன். சத்தமாகவே. சமீபமாக என்னை உற்றுக் கவனித்தபோது, அந்த நாத்திகத்தில் ஒரு கோவம், வெறுப்பு இருப்பதைப்போல உணர்ந்தேன். இதே கோவம் என் தோழியர் பலரிடமும் பார்க்க முடிந்தது.
என்னைப் போலவே அவர்களும். ஏன்..? தெரியவில்லை.
இந்த முறை குடும்பத்தோடு எதோ குடும்ப மூத்தவர்களின் வேண்டுதல் என கோவில்களுக்கு ஒரு பயணம் போய் வந்தோம். என் கணவர் வீட்டு குல தெய்வம் என்றார்கள். மூத்தவர்களுக்காக நான் வாய் மூடித்தான் இருந்தேன். பெருங் குடும்பத்தின் ஒவ்வொரு வீட்டுத் தலைவரையும் கூப்பிட்டு, அர்ச்சனை, செய்து அவர்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்யப்பட்டது.
கூட்டம் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால், அன்று என்னவோ, அங்கிருந்து நகர்ந்து போய்விட வேண்டும் என்றே தோன்றிக்கொண்டிருந்தது. சொல்லிவிட்டுக்கிளம்பினேன். வெவ்வேறு சன்னதிகளுக்குப் போய், சாமி கும்பிட்டுவிட்டு, தெப்பக்குளத்தினருகே வந்து உட்கார்ந்திருந்தேன்.
எனக்கு என்னவோ அவமரியாதை நிகழ்ந்த மாதிரி உணர்வு. ஆனால், குடும்ப உறுப்பினர்கள் யாரும் எதுவும் செய்திருக்க/சொல்லியிருக்கவில்லை. எல்லாருமே அன்பானவர்கள்தான்.
எனக்குக் கோவில் என்றால் கொள்ளை இஷ்டம். ஏகப்பட்ட கோவில்களின் தலவரலாறு அத்துப்படி. அதன் சிற்பம், சுவற்றோவியம் என எல்லாமே…ஆனால் அந்த கர்ப்பகிரகம், அர்ச்சனை வகையறா மட்டும் ஏனோ ஆத்திரத்தைக் (ஆமாம் ஆத்திரமேதான்) கிளப்பும்.
இன்று வீட்டில் தோட்டக்காரருடன் தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் எதோ கோவிலுக்கு நேர்ந்து கொண்டு மாலை போட்டிருக்கிறாராம். அந்த கோவில் அதிக தொலைவென்பதால் இரண்டு வாரம் விடுப்பு கேட்டிருந்தார்.
“பரவால்ல போயிட்டுவாங்க. அது சரி….ஏன் பெரிய சாமி? இங்க பக்கத்தில இருக்கிற சாமிக்கு மாலை போடலாமில்ல? எனக்கும் சிரமமில்லாம இருக்கும்..?” என்றேன் ஒரு சமாதானப் புன்னகையுடன்..
“அதில்லேங்கம்மா….எங்க சாமி ரொம்ப விசேசம். கேக்கிறதெல்லாம் கொடுக்குற சாமி. இந்த சாமிய விட எங்க சாமி ரொம்ப விசேசம்” என்றார்.
கொஞ்ச நேரத்தில் சின்ன முணுமுணுப்பாக, “அங்க எங்க கோவில்ல எங்களுக்கு, எங்கள்ள மூத்தாருக்கு பரிவட்டமெல்லாம் கட்டி…நல்ல மரியாத செய்வாங்கம்மா…மால போட்டவங்களுக்கு ஊரே மருவாத செய்யும்…”
ஹஹ்…..
“மரியாதை”
அங்கே இருக்கிறது பதில். எனக்கான பதில். கோவிலில் அர்ச்சனையில் நான் “ஹன்ஸா அல்ல. அங்கே நான் பெண் வெறும் பெண். இன்னாரின் மனைவி, இன்னாரின் மகள், புருசனின் குலதெய்வம்தான் என் குல தெய்வம். அர்ச்சனையில் புருசனின் கோத்திரம்.”
நன்றி பெரியசாமி. பதிலுக்கு நன்றி.
எங்களிருவருக்குமே, “சீ…சீ….இந்த பழம் புளிக்கும்”
ஜாதி ஒழிப்பை கையிலெடுத்தவரே தலித்தியம் பேச முடியும். அது போலவே, மதங்களை மறுக்கிற ஒருவரே பெண்ணியம் பேச முடிகிறது..
Women in Nepal.
ஏனெனில் மதங்கள் அப்படியான இடத்தையே தந்திருக்கிறது.
மாக்ஸ் வீபர் (1964 – 1920) சொல்படி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழியிலான சுரண்டலைக் கைக்கொண்டிருக்கின்றன.
ஆனால் அத்தனை மதங்களுமே மறக்காமல் வேறுபட்ட கருத்தில்லாமல் சுரண்டும் இனமாக மனித இனத்தின் ஐம்பது சதவீதமான பெண் இனம்தான்.
ஏனெனில் அத்தனை, அத்தனை மதங்களுமே பெண்ணுக்கு இரண்டாம்பட்ச இடமே தந்திருக்கிறது. இன்னமதம்தான் என பிரிக்கவே வேண்டாம். இந்த விஷயத்தில் அனைத்து மதங்களுமே ஒற்றுமையாகவே இருக்கின்றன
பெண்களுக்கு மனித உரிமைகள் கொடுப்பதாக(!!!)ச் சொல்லும் மதங்களுமே, உரிமைகள் தருகின்றன..ஆனால் நகைப்பிற்கிடமாக ‘பெண்ணியம்” அல்லது ‘பெண்ணூரிமை’ எனும் பததிற்கான பொருளை அர்த்தத்தை மாற்றி விட்டு.. அப்படியாயின் அவை எப்படி மனித உரிமைகள் ஆகும்? அதாவது consent என்பது வெவ்வேறாகிறதல்லவா?
இவை எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பகுதிகளில் மனிதக் குழுக்கள் இருந்திருக்கின்றன. அவர்களின் தேவையை ஒட்டிய பழக்கங்கள் விதிகளாயின. பின் அந்த விதிகளே சட்டங்களாயின. ஒன்றை கவனித்தோமேயானால், எந்த ஒரு குழுவும் மற்றொரு குழுவுக்கு அறிமுகமாயிராத காலத்தில் அந்தந்த குழு தனக்கேற்ப சரி தவறுகளும் அதை ஒட்டி சட்டங்களும் செய்திருக்கும். அத்தனை குழுக்களும் செய்த சட்டங்கள் அத்தனையும் வெவ்வேறு சரிதவறுகளின் அடிப்படையிலானவை. அவை இருந்த காலம்,இடம்,. இடத்தின் தட்பவெட்பநிலை இவற்றை ஒட்டியமைந்தவை.
ஆனால், அத்தனை குழுக்களிலுமே தவறாமல் இடம் பெறும் ஒன்று எனில் அது பெண்ணை அடக்குவது அல்லது இரண்டாமிடம் தருவது.
அப்படியாயின்?
1. அப்படி ஒரு இரண்டாமிடத்தின் தேவை இருந்ததா?
2. அதை அன்றே அந்தப் பெண்கள் ஏன் எதிர்க்கவில்லை?
தேவை இல்லை எனில் எதிர்க்க முடியாத நிலையில்தான் இருந்திருந்தனரா?
தேவை இருந்ததால் அன்றையப் பெண்கள் எதிர்க்கவில்லை எனில் அது இப்போது ஏன் தேவையானது.?
ஆண்/பெண் உறவு குற்றம். அந்தக்குற்றத்தைத் தூண்டுபவள் பெண். எனவே அந்தப் பெண்ணிற்குக் கட்டுப்பாடுகள் அவசியம் எனும் நோக்கிலேயே இந்து, கிறித்தவர், இஸ்லாம், பெளத்த மதங்கள் பேசுகின்றன.
கிறித்தவ மதத்தை எடுத்துக் கொண்டால், அதில் பாதிரியாராகும் தகுதியே பெண்ணுக்கு இப்போதுதான்..அதுவும் முழு அளவில் இல்லை. ஆண் பாதிரிமார்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஆண் பாதிரிமார்கள் வெளி இடங்களில் மத சம்பந்தமில்லாத இடங்களில் மாற்றுடை தரிக்கலாம்.
”மனைவிகளே,கர்த்தருக்குக் கீழ்படிவது போல உங்கள் சொந்தப்புருசருக்குக் கீழ்படிதலாய் இருங்கள்” – எபெசியர் 5அதிகாரம் 22வசனம் (புதிய மற்றும் பழைய பைபிலில்)
”கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான். அவரே சரீரத்திற்கும் ரட்சகராயிருக்கிறார்” – எ.பெ. 5.23.
அதாவது சரீரத்திற்கு. பெண்ணின் உடல் எனும் பொருளுக்கு காவலாளி.
ரிக் வேதமும் சரி, பைபிலும் சரி பெண் என்பவள் ஆணின் விலா எலும்பிலிருந்து உருவானவள். ..என்கிறது. அதனால் அவள் அவனுள் அடக்கம். அவனின் தேவையைப் பூர்த்தி செய்யும் கடமை அவளுக்கு என்கிறது.
ரிக் வேதத்தின் 8.3.17ல் “பெண்கள் நிலையற்ற புத்திபடைத்தவர்கள். எனவே அவர்கள் நம்பத் தகாதவர்கள்” என்கிறது.
இஸ்லாமோ பெண்களுக்கு ஜமாத்துகளில் எந்த அளவுக்கு பெண்களுக்கு இடம் கொடுத்திருக்கிறது.? இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறார்களா அதாவது அதை அவர்கள் எந்த அளவுக்கு அவர்கள் இம்ப்லிமெண்ட் செய்ய முடிகிறது?
கிறிஸ்தவத்தின் பைபிலும், இஸ்லாத்தின்ன் குரானும் போல இந்து பெளத்த மதங்களில் அவர்களுக்கென்று தனி புத்தகம் இல்லாததாலேயே, அவர்களை எதிர்த்து எது சொன்னாலும் அப்படி சொல்லப்படவில்லையே என்க முடிகிறது.
ஆனால் எல்லா மத புத்தகங்களுமே மாறுதலுக்குட்பட்டதாகத்தானே இருக்க முடியும்?
மதங்களே இல்லாத ஆதி சமூகத்தில் தெய்வம் எப்படி வந்திருக்க முடியும்?
மதம் எப்படித் தோன்றி இருக்க முடியும்?
எது அவனை பயப்படுத்தியதோ அதைத் தொழுவதன் மூலம் தன்னை பலப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம்.
எது மனித சமூகத்திற்கு அதன் நீட்சிக்கு உதவியாக இருந்ததோ அதை தெய்வமாக நினைத்திருக்கலாம். பெண் அங்கே முன்னிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதற்கு ஒரே காரணம் அவளின் அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்யும் திறன். அதை ஒட்டியே பெண் தெய்வங்கள் தோன்றி இருக்க வேண்டும். ஆதி தெய்வம் என பெண் போற்றப்பட அதுவே காரணமாக இருந்திருக்க முடியும்.
இப்படியாகத்தானே பெண் தெய்வமாகி இருக்க முடியும்?
பின் எப்போதிருந்து ஆண் உச்ச தெய்வமாகவும் அவன் மனைவியாக தொழுபவளாகப் பெண் தெய்வங்கள் என்றாயிற்று?
”பெண்ணைச் சுரண்டுதல்” ஆணின் நோக்கமாக ஆரம்பம் முதலாக இருந்திருக்கவில்லை. அடுத்த தலைமுறையை அவளே உற்பத்தி செய்து (generate) செய்ய இயலும் என்பதால் அவள் பாதுகாக்கப்பட வேண்டியவளாகிறாள். Peternity identification என்பதே கேள்வியாகவே இருந்திராதபோது, பெண்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதும், ஆண்கள் அவர்களுக்கான உணவைத் தேடிவருவதும் ஒரு சமூக செயல்பாடாகவே இருந்திருக்க வேண்டும். இது வெறும் Division of labour மட்டுமே. இது அப்ரஷன் அல்ல. அல்லவா? தேவையின் பால் ஏற்பட்ட ஒரு அட்ஜஸ்ட்மெண்ட். ஆனால், எப்போது அவளின் தேவை மாற ஆரம்பித்ததோ, அந்த வேகத்திற்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட்கள் மாற ஆரம்பிக்கவில்லை என்பதை விட மாறவே இல்லை எனலாம்.
அதை ஏன் பெண் ஏற்றிருந்தாள்? உணவும், பாதுகாப்பும் மனித இனத்திற்கு அன்று போதுமானதாக இருந்தது.
இன்று… அங்கிகாரம் போன்ற பலவும் … மேலும் அவளின் இடத்தை செயல்படுத்த கிடைத்த மாற்றுக்களும்..
மதம் என்பது இப்போது ஒரு பக்தி சந்தை. இதில் வலிமையுள்ளவனே பிழைத்துக்கிடப்பான். ஆகவே, ஐம்பது சதவீத மார்கெட்டை தக்க வைக்க சில மத நிறுவனங்கள் புது வழியைக் கையாள்கின்றன.
பெண்களுக்கென்று தனி சாமி. பெண்களே அதன் அதிகாரிகள். பெண்களே அதன் சடங்குகளைச் செய்யலாம்( !!!)அர்ச்சனை எனும் பெயரில் ஆணின் பின் ஒளிய வேண்டியதில்லை…எனக் கூவிக் கூவி மார்கெட்டிங் செய்கின்றன…பலத்த லாபம்தான். ஆனால்…வந்து விழுபவை வெறும் விட்டில் பூச்சிகள். கூலி வேலை செய்யும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஆட்கள். அனேகர் தனக்குத் தரும் சிறப்புச் சலுகையால் அதிலேயே விட்டில்களைப் போல..
இங்கே இரண்டு லாபம். கட்டுரை ஆரம்பத்தில் சொல்லி இருந்ததைப் போல என் மனசுக்கும், நொந்தே வெந்திருந்த பெரிய சாமி மனசுக்கும்…தோதாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
பெண்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
பெரியசாமிக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
- See more at: http://solvanam.com/?p=37596#sthash.4myEnQHb.dpuf

சனி, 27 டிசம்பர், 2014

வாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள் – ஒரு பார்வை

வாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள் – ஒரு பார்வை


வாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள் – ஒரு பார்வை
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற எந்தக்காலத்தி லும் செய்யக்கூடாத, செய்ய‍ மறுக்க‍வேண்டிய செயல் கள் உண்டு. அந்த செயல்களை
வெற்றியாளர்கள் ஒரு போதும் செய்ய‍ மாட்டார்கள் அதனால்தான் அவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடிந்தது  
வெற்றியாளர்கள், எப்போது மே  எதைச் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள், எதற்கு செய்கிறார்கள் என்று தான் பார்ப்போம். ஆனால் பல செயல்களை அவர்கள்செய்யாமலே விட்டுவிடுவார்கள். அவை எவை என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1. பணத்திற்காக வெற்றி பெற வே ண்டும் என எண்ண மாட்டார்கள்
பெரும்பாலான வெற்றியாளர்கள் பணத்தினை வெற்றி யாகக் கருதியதே இல்லை. மன அமைதி அல்லது மற் றவர்களுக்கு உதவுவதைத்தான்அவர்கள் வெற்றியாகக் கு றிப்பிடுகின்றனர். அவர்கள் பணத்தினை வாய்ப்புகளை த்தரும் கதவாகவும், சில வேளைகளில் சுகம் தரும் பொருளாகவும் மட்டுமே கருதுகின்றனர். பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சம்ப ந்தம் இல்லை என அவர்கள் நம்புகின்றனர்.
2. திட்டமிடாமல் ஒரு நாளை தொடங்குவதில்லை

ஒவ்வொரு நாளையும் எப் படி பயன்படுத்த வேண்டும், அதற்கான திட்டமிடல்களா க எவற்றை செய்ய வேண் டும் என அவர்களுக்கு நன் றாகத் தெரிந்திருக்கும். அன்றைய நாளில் செய்ய வேண்டிய செயல்கள் அனை த்தையும் ஒரு பட்டியலாக வைத்திரு ப்பார்கள். அத னை எந்த வரிசைப்படி செய்ய வேண்டுமெனவும் முன் கூட்டி யே தீர்மானித்திருப்பார்கள்.
3. ‘முழுநிறைவு’ என எதையும் இலக்காக கொண்டிருக் க மாட்டார்கள்

‘அய்யய்யோ நான் இதை முடித் தே ஆக வேண்டும்’ என்று அவர் களின் மனம் அவர்களை வருத் தாது. முழு நிறைவினை பெறுவ தற்கான பசியினைக் காட்டிலும், இதுவரை செய்த செயல்களில் தவறுதல்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்துவ தில் அவர்களின் கவனம் சற்று அதிகமாக இருக்கும். வெற்றிக் கான செயல்களின் ஒவ்வொரு நிறுத்தத்திலும், தங்களது வளர் ச்சிக்கான செயல்முறை குறித்து ஆய்வு செய் வார்கள்.
4. ‘நெகடிவ்’ பேச்சாளர்களின் கூட்டத்தில் இருக்க மாட்டார்கள்
எந்த செயல் எடுத்தாலும் இது நடக்காது, இது உருப்ப டாது என்று கூறுவதற்கென்றே ஒரு குழு எப் போதும் நம்மைச் சுற்றி இருந்தால் நாம்செய்யும் செயலின் மீதான நம் பிக்கை மிகவும்குறைவாக மாறிவிடும். இதனால்தான் அத்தகைய ஆட்கள்இருக்கும் கூட்டத்தில் வெற்றியாளர்க ள் இருப்பதே இல்லை. அவர் களை இலக்கினை நோக்கி உற்சாகப்படுத்துபவர்கள் எங் கு இருக்கிறார்களோ, அங்கு தான் இவர்களும் இருப்பார்க ள்.
5. கஷ்டங்களை பிரச்சனைகளாக எண்ணமாட்டார்கள்

வெற்றியை நோக்கிச் செல்லும் போது கண்டிப்பாக பல தடை கள் வரும் அவற்றையெல்லாம் பிரச்சினைகளாகக் கருதினால் இலக்கினை அடைய முடியாது. அதனால்தான் எல்லாத் தடைகளையும் தங்களை வலு ப்படு த்த வந்த வரப்பிரசாதமாக எண்ணுவார்கள்.
6. தோல்வியால் துவண்டு விட மாட்டார்கள்
ஒவ்வொரு தோல்விலும் துவ ண்டுவிடாமல், அந்த தோல்வி யில் இருந்த தங்களைப் பற்றிய குறைகளைக் கண்டறிந்து கொ ள்ள முயற்சி செய்வார்கள். தோல்வியும் வெற்றிக்கான பாதையில் உள்ள கற்கள், அவற்றைக் கண்டு பயந்தால் இலக்கினை அடைய முடியாது என் பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
7. பிரச்சனைகளால் கீழே விழுந்தாலு ம் வருத்தப்பட மாட்டார்கள்
ஒரு பிரச்சனையின்போது அதிலே தொடர்ந்து சிந்திப் பதால்தான் ஒரு பிரச்சனை பல பிரச்சனைகளாக மாறத் தொடங்குகிறது. உங்கள் எண்ணங்களையும், கவனத்தையும் ஒன்று சேர்த்து உங்கள் செயலில் இறங்குங்கள். உங்கள் கவனம் பிரச்சனை யிலிருந்து மாறும்போ து, அதில் தோல்வி ஏற்பட்டாலு ம் வருத்தப்பட மாட்டீர்கள். இதை த்தான் வெற்றியாளர்களும் செய் கின்றனர்.
8. தங்களின் சுயமரியாதையினை மற்றவர்கள் தீர்மா னிக்கும்படி விட்டுக்கொடுக்கமாட்டார்கள்

மற்றவர்களின் வார்த்தைக ளினாலோ அல்லது செயல் களினாலோ தங்களுக்கு சுய மரியாதை கிடைக்க வேண்டுமென அவர்கள் எண்ணமாட்டார்கள். தாங்கள் எந்த நிலையில் இரு க்கிறோம், தங்களின் மதிப்பு என்ன என்பது அவர்களு க்குத் தெரிந்திருக்கும். மற்றவர் களிடம் தங்களது திற மையினை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்போதும் இருக்காது, அத்துட ன் தனக்கென தானே வகுத்துக் கொண்ட வழிமுறைகள் இவர்க ளை எப்போதும் திருப்தியடைய ச் செய்யும்.
9. சாக்கு-போக்கு சொல்லமாட்டார்கள்

தங்களின் தவறுதல்களுக்கு தாங்கள்தான் காரணம் என் பதை எந்தவித ஒளிவு மறை வுமின்றி ஏற்றுக் கொள்வார் கள். அவர்கள் நினைத்தது கை கூடாத நேரங்க ளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர்களே பொறுப்பேற்றுக்கொள் வார்கள். அத்துடன், இலக்கு பெரியதாக இருந்தாலும்,சிறியதாக இருந்தாலும் அ தை குறித்த நேரத்தில் முடி க்க வேண்டுமென எண்ணு வார்கள். அப்படி நிறைவே றாத காலங்களில் எந்த சா க்கு-போக்கினையும் அவர் கள் முன்வைப்பதில்லை.
10. அடுத்தவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமை ப் பட மாட்டார்கள்

நாம் அடைய முடியாத இல க்கினை மற்றவர்கள் அடை யும்போது பொறாமை வரு வது மனித இயல்புதான். என்றாலும், மற்றவர்களுக் கு நம்மைப்போல் பிற திற மைகள் இருக்கும் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இதை மனதில் வைத்துதான், மற்றவர்கள்வெற்றி பெற்றால் அதை உத் வேகமாக எடுத்துக் கொண்டு முன்னேற நினைப்பார்கள் வெற்றியாளர்கள். அவர்க ளைக்கண்டு பொறாமைப்பட மாட்டார்கள்.
11. தங்களுக்கு அன்பு கொடுப்பவர்களை புறக்கணிக்க மாட்டார்கள்

வேலை எவ்வளவு முக்கி யமானதாக இருந்தாலும் நம்மை விரும்புபவர்களா ன குடும்பம், மனைவி மற் றும் நண்பர்கள் வேலையி னை விட முக்கியமானவர்கள். இந்த அன்பு நம்மை இலக்கினை நோக்கிக் கொண்டு செல்வதிலும் முக்கி யப்பங்கு வகிக்கும்.

12.வேடிக்கையினை வேலைக ளை தவறவிடுவதில்லை
வேடிக்கையில்லாத வேலைஎரிச் சலை ஏற்படுத்தி விடும். ஆண்டி ல் அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வேலை செய்ய நாம் கடவுள் படைத்த இயந்திரங்கள் அல்ல, மனிதர்கள்!. நாம் செய்யும் வேலை நமக்கு பிடித்தாற்போல் இருந்தால்தான் நம்மால் தொடர்ந்து வேலை செ ய்யமுடியும். இப்படி வே லைகளை பிடித்தாற் போல் மாற்றுவ தற்கு வேலை மற்றும்பொழு து போக்குகளை சம அளவில் வைத்திருக்கவேண்டும். அதனால் பொழுதுபோக்குகளை வெற்றியாளர்கள் எப் போதும் ஒதுக்கியதே இல்லை.
13.உடலை அதிகம் துன்பப்படுத்த மாட்டார்கள்
உடல் உழைப்பு இல்லாமல் வெற் றி பெற முடியாது என்றாலும், ந மது உடலை கவனிக்காமல் வெ றும் வேலையினைப்பார்த்து இல க்கினை அடைவதால் ஒரு பயனும் இல்லை. இதனா ல்தான், இலக்கினைப் பற்றிய வே லைகள் ஒருபுறம் நடந்தாலும், தங் களது உடலையும் அவர்கள் பேணி க்காத்துக்கொள்கின்றனர்.
14. வீண் இலக்குகளை வைக்க மாட்டார்கள்
ஏதாவது இலக்கு வேண்டும் என்பதற்காக, வாழ்க்கைக் கு சம்பந்த்ம் இல்லாத இலக்குக ளை வைக்க மாட்டா ர்கள். தங்கள் கனவு இலக்கிற்கு தகுந்தாற் போ ல் சிறு இலக்குகள வகுத்து பெரிய இலக்குகளைஅடைவார்கள். தான் வாழ்க்கையில் இருக்கும் தற்போ தைய நிலை குறித்து அவர்களு க்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.
15. வெட்டிப்பேச்சு பேசமாட்டார்கள்
வெற்றியாளர்கள் வெறும் பேச்சினை மட்டும் பேசிக் கொண்டிருப்பவர்கள் அல்ல, பேசியபடி செய்தும் காட் டக் கூடியவர்கள். அவர்கள் சொ ன்னால் கண்டிப்பாக செய்து காட்டுவார்கள், அவர்களை நம்பலாம் என்று மற்றவர்கள் கூறும் அளவிற்கு தங்க ளது வார்த்தைகளின் மீது பற்று கொண்டிருப்பார்கள்.
16. மற்றவர்களால் தாங்கள் பாதிக் கப்படுவதை அனும திக்கமாட்டா ர்கள்
தங்களின் எண்ணங்களுக்கு அல் லது இலக்கிற்கு ஒவ்வாமல் இரு ப்பவர்களிடம் இருந்து வெற்றியா ளர்கள் விலகியே இருப்பார்கள். தங்களின் பாதையில் முன்னேறிச் செல்வது மட்டுமே தனக்கு மகிழ்ச் சியைத் தரும் என எண்ணவார்கள். மற்றவ ர்கள் செய்யும் செயல்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு நடந்துகொள் வார்கள்.
17. கடந்தகாலத்திலேயே நிலைத்திருக்கமாட்டார்கள்
கடந்தகால பிரச்சினைகளை சுமப்பதா ல் தங்களது வேலைப்பளுவும், பொறுப் புகளும் அதிகரிக்கும் என்று வெற்றியா ளர்கள் கருதுவார்கள். அதனால்தான் பழைய வலிதரும் காலத்தினை மறந்து விட்டு தற்கால மகிழ்ச்சிக்குத் தேவை யான வேலையினை செய்வார் கள்.
18. மாற்றங்களை தடுப்பதில்லை
‘மாற்றம் ஒன்றுதான் மாறா தது’ என்பதைப் போல் தங் களின் திட்டங்கள், வழிமு றைகள் மற்றும் செயல்பா டுகள் எப்போது வேண்டுமா னாலும் மாறாக்கூடும், அத னால் அத்தகைய மாற்றங் களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்களே தவிர, அவற்றினை தடுக்க மாட்டார்கள்.
19. ஒருபோதும் கற்றுக் கொள்வதை விட மாட்டா ர்கள்
எத்தனை வயதானாலும் தாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் இ ருக்கிறது என எண்ணுவார்கள். எவருக்குமே அனைத் தும் தெரிந்திருக்காது, ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து எதையாவது கற்று க் கொண்டுதான் ஆக வேண்டும் என்று அவர்களுக்குத்தெரியும் .கற்றுக்கொள்வதற்கான தன து மனநிலையினை எப்போது ம் ஆயத்தமாக வைத்திருப்பார்கள்.
20. நன்றியில்லாமல் நாட் களை முடிக்கமாட்டார்கள்
தனக்கு கிடைத்த ஒவ்வொ ன்றிற்கும் நன்றி கூறுவார் கள். இதை தங்களுக்குள் ளே கூறிக்கொள்வார்கள். இந்த நன்றி தனக்கு உதவியவர்கள், தன்மீது அன்பு செ லுத்தியவர்கள் மற்றும் அன்றைய நாளினை சிறப்பா ன நாளாக மாற்ற உதவியவர்கள் என யாராகவும் இருக்கலாம். இந்நாளின் இறுதியில் மனதால் கூறப்படும் நன்றி , மன அமைதியையும், உறுதியான எ ண்ணங்களையும் கொடுக்கவல்லது.
இவையனைத்தும் உங்களுக்கும் பய ன்படும் செயல்முறைகள்தான். இதில் உங்களுக்குப் பொருந்திய செயல் முறைகளை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வும் பிரகாசம் பெறும்.


புதன், 24 டிசம்பர், 2014

நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!!

நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!!

கிராமப்புற விளையாட்டுக்களை பல வகைப்படுத்தலாம். ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள், ஜோடிப்புறா, வண்டிப்பந்தயம், கோலிக்குண்டு,சிலம்பு, ச+ விளையாட்டு என பலவகையுண்டு.
ச+ விளையாட்டு
இவ்விளையாட்டில் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக சமமாக பிரிந்து இரண்டு கட்சிகளாக அல்லது இரண்டு பிரிவுகளாக இருப்பார்கள். உட்கார்ந்திருப்பவர் ஒரு கட்சியும், ஓடுபவர்கள் மற்றொரு காட்சியாகவும் இருப்பார்கள். ஒரு பிரிவினர் கிழக்கு பக்கம் உட்கார்ந்திருந்தால் மற்றொரு பிரிவினர் மேற்குப்பக்கம் அமர்ந்திருப்பார். நிற்பவருள் ஒருவர் ஓட இன்னொருவர் தொடவேண்டும். தன்னால் தொடமுடியாது என்று தெரிந்தால் கட்சியாருள் ஒருவரைச் ச+ என்று சொல்லி எழுப்புவார். எழுப்பப்பட்டவர் உடனே ஓடிப்போய் ஓடுகிறவரை தொட்டுவிட்டால், தொட்டவர் ஓடுகிறவராகவும், ஓடியவர் தொடுகிறவராகவும் மாறவேண்டும். ச+ என்று சொல்லி ஒருவன் இன்னொருவனை எழுப்பும் விளையாட்டு என்பதால் இப்பெயர் பெற்றது. இவ்விளையாட்டிற்கு ஆறு அல்லது எட்டுப்பேர் குழுவாக விளையாடுவார்கள். இவ்விளையாட்டு தற்பொழுது முன்னேற்றம் அடைந்து கோகோ என்ற விளையாட்டாக மாறியது.
ஆடுபுலி ஆட்டம்
இந்த விளையாட்டு அறிவுத்திறனை சோதிக்கும் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டுக்கு மூளையைச் செலுத்தி மனதை ஒருமுகப்படுத்தி ஆட வேண்டியிருக்கும். இந்த விளையாட்டிற்கு மூன்று சிறுகற்களும் 15 புளியங்கொட்டைகளும் தேவைப்படுகிறது. ஆடுகளைக்கொண்டு புலியை நகர விடாமல் கட்டியும் விடுவார்கள். புலியால் ஆடுகள் வெட்டவும் படும். இவ்வாறு நாட்டுப்புற ஆண்கள் விளையாடும் இவ்விளையாட்டு தற்பொழுது சதுரங்கம் என்ற செஸ் விளையாட்டாக மமாறிவிட்டது.
நீச்சல் விளையாட்டு
மழைக்காலங்களில் இவ்விளையாட்டு விளையாடுவார்கள். ஆறு, மதகு, கிணறு போன்ற பெரிய வாய்க்காலில் சிறுவர்கள் குதித்து விளையாடி மகிழ்வர். இதற்கு எண்ணிக்கை இல்லை. கரையில் ஒரு புறமிருந்து மறுகரையை தொடவேண்டும். முதலில் தொட்டவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவர். இதற்கு நீச்சலிடிக்கும்போது நீரில் மூச்சுவிடுவது எப்படி, நீரில் மூழ்காமல் எழுந்து நிற்பது ஆகியவை. இயற்கையாக நீச்சலடிப்பது வேறு. ஆனால் நீச்சலடிக்கும்போது சுவாசிப்பது கடினம். மூச்சுப்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியமானது. இதற்கு பயிற்சியாளர் சுரக்காய் குடுவை, வயிற்றில் கட்டி பழக்கிவிடுவார்கள்.
கிட்டிப்புள்ளை
பரந்த மைதானத்தில் ஓரிடத்தில் இரண்டு கம்புகளை வைத்து விளையாடு விளையாட்டாகும். அதில் ஒரு கம்பு சிறியதாகவும், மற்றொன்று கம்பு பெரியதாகவும் இருக்கும். மைதானத்தில் ஓரிடத்தில் கிட்டியை வைக்க ஒரு கோட்டைக் கிறுவார்கள். அதன் மையத்தில் கொஞ்சம் கீழே செங்குத்தாக குழிவடிவில் ஒரு குறுக்குக்கோடு போட்டு இந்தக் குறுக்குக் கோட்டிலிருந்துதான் புள்ளைக் கீந்துவார்கள். அப்படி கீந்திய புள்ளை எதிர்ப்புறமாக இருப்பவர் கிட்டியை நோக்கி வீசுவார். புள்கிட்டியின் மேல் பட்டுவிட்டால் ஆட்டம் இழந்து விடுவதாகப் பொருள்படும். அப்படிப் படவில்லையென்றால் கிட்டியானவர் புள்ளைத் தட்டி எழுப்பி அடிப்பார். அவருக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த அளவைக்கொண்டு ஸ்கோர் கணிப்பர். குழுவினர் அனைவரும் முடிந்துவிட்டால் எதிரணியினர் ஆடுவர். இதுவே கிட்டிப்புள் விளையாட்டாகும். இவை பரிணாம வளர்ச்சி அடைந்து கிரிக்கெட்டாக உருமாறியது. தற்பொழுது நாடுகளுக்கு இடையே போட்டியையும், வெறுப்பையும், பல நுகர்பொருட்களை விற்பனை செய்வதற்கும் மோசடிகள் நடைபெறுவதற்கும் உகந்த விளையாட்டு. இதனை பெர்னாட்சா பதினொரு முட்டாள் விளையாட பதினொரு ஆயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்று கூறினார்.
இளவட்டக்கல்
ஒவ்வொரு ஊரிலும் கிராமங்களில் இளவட்டக்கல் என்ற கல் பந்தைப்போல் உருண்டையாக இருக்கும். திருமணம் முடிக்கின்ற வயதிற்கு வருகின்ற ஆண் அந்தக்கல்லை தூக்கி பின்புறம் எரிய வேண்டும். அப்போதுதான் அவனுடைய வீரத்தையும், உடல்திறனையும் வைத்து பெண் கொடுக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்துள்ளது. தற்பொழுது கெங்குவார்பட்டி பகுதியில் கேட்பாரான்றி இளவட்டக்கல் ஒன்று உள்ளது.
கோலிக்குண்டு
இரண்டு நபர்கள் சேர்ந்து இரண்டு கோலிக்குண்டை அடித்து விளையாடுவதும், ஈரமான மண்தரையில் ஒரு குழியை தோண்டி குண்டை விழவைக்கும் விளையாட்டு உள்ளது. அதே போல 10க்கும் மேற்பட்ட குழிகளை தோண்டி அதில் சிறிய குண்டுகளைப்போட்டு பெரிய குண்டால் அடிப்பது ஒரு வகையான விளையாட்டு.
வளரி விளையாட்டு
வளரி அல்லது வளைதடி என அழைக்கப்படும் விளையாட்டு இந்திய சுதந்திரப்போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகுத்தது. இது ஓரிடத்தில் நின்று கொண்டே தொலை தூரத்தில் வருகின்ற எதிரிகளைத் தாக்குவதற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆங்கிலேய அரசு இதனை கள்ளர் ஆயுதம் என அழைத்தனர்.
இவ்விளையாட்டு தற்பொழுது ஆஸ்திரேலியாவில் பூமராங்குகளுக்கு ஒப்பானதாகும். இவ்வளைதடி பிறைவடிவிலனதாகத் தட்டையான அமைப்புடையது. கையால் பற்றுதவற்குரிய முனையிலிருந்து எதிரான முனை போகப் போக அகலமுடையதாக அமையும். கைப்பிடிக்கும் பகுதியின் முனையில் உருண்டையான குமிழ் போன்ற அமைப்பு இருக்கும். எறிவதில் பயிற்சி உள்ளவர்கள் இலேசான முனையை கையில் பிடித்து வேகம் கொடுப்பதற்காகச் சில முறை தோளுக்கு மேலே சுழற்றி விரைவுடன் இலக்குநோக்கி எறிந்திட அது எதிரியை தாக்கிக்கொன்று விட்டு எறிந்தவர் கைக்கருகே திரும்பி வந்துவிடும் அல்லது சிறிது தூரம்; முன்னோக்கி விழும்.
இவ்வகை வளைதடிகள் பெரும்பாலும் சேக்கரிய மரத்தினாலும், யானைத் தந்தங்களினாலும், இரும்பினாலும் செய்யப்படும் போர்காலங்கள் தவிர முயல் மற்றும் மான் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதற்கும் இதனை பயன்படுத்தியுள்ளனர்.
பாளையக்காரர்களின் இறுதி யுத்தத்தில் இக்கருவி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இறுதி யுத்தத்திற்குப் பின்பு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வளைதடிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக பாண்டியரைத் தோற்கடித்த ஆங்கிலத்தளபதி அக்னியு குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது சிவகெங்கை அரண்மனை அருங்காட்சியகத்தில் இரண்டு மரத்தாலான வளைதடிகள் மட்டுமே சுவடுகளாக உள்ளது.
சிலம்பு
இவ்விளையாட்டு தமிழரின் பாரம்பரிய வீரமிக்க விளையாட்டாகும். இது தனிநபர் விளையாடக்கூடியது. ஒரே ஒரு மூங்கில் கம்பு இருந்தால் போதும் எதிரியை ஓட ஓட விரட்டிவிடலாம்.
ஆள் உயர அளவிற்கு சுழற்றுவதற்கேற்றவகையில் கன அளவினையும் பெற்றிருக்கும். மூங்கில் கம்புகளால் ஆடக்கூடிய ஒரு வகை ஆட்டமே சிலம்ப ஆட்டம். இச்சிலம்ப ஆட்டத்திற்கு அடவுகளே மிகவும் இன்றியமையாதது. இதில் கம்பு வீசும் முறைகளுக்கு பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. முதலில் குருவணக்கம் தெரிவித்த பின்னரே இவ்விளையாட்டில் உள்ள பல்வேறு விந்தைகளையும் செய்து காண்பிப்பார்.
குருவணக்கம் தெரிவிக்கும் முறைக்குச் சலாவரிசை என்று அழைக்கப்படுகிறது. சலாம் என்ற அரபிச்சொல்லே அலா என வழங்குவதாக நம்ப படுகிறது.
சிலம்புக்கலையானது உடலை மட்டுமே பயன்படுத்தி விளையாடும் விளையாட்டாகும். இதனை கையால் அடிப்பது, வெட்டுவது, குத்துவது அதே போல காலால் அடிப்பது என பல நிலைகள் உள்ளது. தன்னை மட்டும் பலப்படுத்திக்கொள்ளும் பயிற்சிக்கு செவுடு என்கின்றனர். நிலச்செவுடு, ஒத்தைச்செவிடு, பிரிவுச்செவுடு, சீனாடிச்செவுடு, அங்கச் செவுடு என பல வகையில் உள்ளது. எதிரியிடமிருந்து காத்துக்கொள்ளுகின்ற விதமாக அமைகின்றது. அதாவது 64 செறுப்பு, 64 அறுப்பு, 64 வெட்டு, 64 இருப்பு என்று பிரித்துக்ளனர்.
கம்பு விளையாட்டில் சிரமம், நெடுங்கம்பு, விளையாட்டு என இரண்டுமுறை உள்ளது. நெற்றிமூட்டுக்கம்பு, என்பது அந்தக் கம்பின் உயரம் அதனைப் பயன்படுத்துகின்ற நபரின் நெற்றியின் கீழ்பகுதி வரையிலான உயரம் கொண்டதாக இருக்கும். எனவே அதனை நெற்றிமூட்டுக் கம்பு என்றும் கம்பைச் சுழற்றி தடுப்பதும், அடிப்பதுமான செயல்களை செய்யப்படுகின்றன.
இதில் பனிரெண்டு நிலைகள் உள்ளது.கிருக்கி, உடான், படை, குத்து போன்ற பெயர்களால் கம்புவீசும் முறைகள் அழைக்கப்படுகின்றன. இவ்வகைப்பெயர்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். சிலம்பக் கலையில் திறனறி முறையினைத் தெரிவிக்க ஒரு வீடு கட்டுதல், இருவீடு கட்டுதல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதனுடைய பரிணாம வளர்ச்சியாக கராத்தே, குங்பூ, சிட்டோரியா என பல பெயர்களில் அழைக்கபடுகிறது. இதில் கருப்பு பெல்ட், சிவப்பு பெல்ட், என தங்களுடைய திறனுக்கேற்ப பெயர்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
கிராமப்புற மக்கள் நாகரிக வளர்ச்சியின் காரணமாக பிறமக்களின் நடை, உடை, பாவனைகளுக்கு ஆட்பட்டு வருகின்றனர். விளையாட்டுக்கள் பெரும்பான்மையும் உடற்பயிற்சியோடு தொடர்புடையதாக உள்ளது. பொழுது போக்கு, மகிழ்ச்சி தருவதாகவும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்றவை அகற்றப்படுகிறது.
வழுக்கு மரம்
ஆடவரின் உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மரம் விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட உயரமான மரம் நடப்படும். அதனை மேலும் வழுவழுப்பாக்கப் பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவப்படும். மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்படும். வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார் என்பதைக் கண்டறிவதுதான் போட்டி.
அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பை எடுத்துவிட முடியாது. இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில் ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக் கருதப்படுவார். அவருக்கு மேலும் பணமும் பாராட்டுகளும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கிராமப் புறங்களில் இவ்விளையாட்டு நடத்தப்படும்.
உறியடி
விளையாட்டில் ஆடவரின் உடல்திறன் எவ்வாறு வெளிப்படுகிறது என்று காண்போம். வைணவக் கோயில் திருவிழாக்களில் உறியடித்தல் என்னும் சடங்கு, வழிபாட்டின் ஓர் அங்கமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. ஆயர் பாடியில் கண்ணன் வெண்ணெய் திருடி விளையாடியதை நினைவு கூரும் வகையில் உறியடித்தல் சடங்கு நடத்தப் படுவதாகக் கூறப்படுகிறது.
வடிவில் மூங்கில் கழிகள் நடப்பட்டிருக்கும். கழியின் மையப் பகுதியில் ஓர் உருளையும் அதன்வழி ஒரு கயிறும் தொங்கவிடப்பட்டிருக்கும். கயிற்றின் ஒரு முனையில் ஒரு மண் பானையைக்கட்டி, மறு நுனியை ஒருவர் பிடித்துக் கொள்வார். அந்தப் பானையினுள் வண்ணக் கலவை நீர் நிரப்பப் பட்டிருக்கும். இப்பொழுது அந்தப் பானையைக் கம்பு கொண்டு அடித்து உடைக்க வேண்டும். இது எளிதான செயல்தானே என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். அது அவ்வளவு எளிதான செயலன்று. ஏனென்றால் பானையை உடைக்க முன்வருபவர் கண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும். கண்ணைக் கட்டி இரண்டு மூன்று முறை அவரைச் சுற்றி விட்ட பின்பே கையில் கம்பைக் கொடுத்து அனுப்புவர். இந்நிலையில் அவர் எந்தத் திசையில் நிற்கின்றார் என்று அவருக்கே தெரியாது.
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல என்று கூறுவார்களே அந்த நிலைதான் அவருக்கு. அந்த நிலையையும் தாண்டி அவர் பானை அருகில் வந்துவிட்டால் பானை மேலும் கீழும் இழுத்து விடப்படும். இந்தத் தடைகளை எல்லாம் மீறி அவர் பானையை உடைத்து வெற்றி பெற வேண்டும். வேறு சில இடங்களில் கண்ணைக் கட்டாமல் ஒரு காலை மட்டும் மடக்கிக் கட்டி நொண்டியடித்துக் கொண்டே பானையை உடைக்க வேண்டும். பானையை உடைக்க விடாமல் சுற்றியிருப்போர் அவர் மீது மஞ்சள் நீரை ஊற்றுவர். இதுபோன்ற தடைகளை எல்லாம் மீறிப் பானையை உடைப்பவருக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்படும். உறியடி விளையாட்டின் போது ஊரே திரண்டுவிடும். உற்சாகம் கரை புரண்டோடும்.
சல்லிக் கட்டு
நாட்டுப்புற மரபில் வீர விளையாட்டாகக் கருதிப் போற்றப்படுவது சல்லிக் கட்டு ஆகும். தமிழர் திருநாளாம் தைத்திருநாளின் ஓர் அங்கமாக ஊர்கள் தோறும் சல்லிக் கட்டு வெகு விமரிசையாக நடத்தப்படுவதுண்டு. எருது கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்று பல பெயர்களில் வழங்கப் பெறும் இவ்விளையாட்டினைப் பார்ப்போம்.
முரட்டுக் காளைகளை விரட்டிப் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தும் போட்டி விளையாட்டாக, சல்லிக் கட்டு நிகழ்த்தப் படுகின்றது. சல்லிக் கட்டில் பயன்படுத்துவதற்கு என்றே காளைகள் வளர்க்கப்பட்டு, அவற்றிற்குப் பயிற்சி அளிக்கப் படுகின்றது. இவ்வாறு பயிற்சி பெற்ற காளைகள் சல்லிக் கட்டு நடைபெறும் இடங்களுக்கு அழைத்து வரப்பட்டு, போட்டிக்கு விடப்படுகின்றன. காளைகள் வாடி வாசல் என்ற பகுதியிலிருந்து வெளிக்கிளம்பி எதிர்ப்பட்டோரை எல்லாம் முட்டித் தள்ளியும் மிதித்தும் ஓடிவரும்.
காளைகளின் போக்கை அறிந்த, காளைகளைப் பிடிக்கப் பயிற்சி பெற்ற, காளைகளின் சாகசம் அறிந்த இளைஞர்கள் சீறிவரும் காளைகளின் மீது துணிச்சலாகப் பாய்ந்து திமிலை இறுகப் பற்றியோ, கொம்பைப் பிடித்து மடக்கியோ அடக்குவர். அனுபவமில்லாத சிலர் காளைகளால் காயப்படுவதுமுண்டு. காளைகளைப் பிடித்து அடக்கியோருக்குப் பலவிதமான பரிசுகள் வழங்கப் பெறும்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சல்லிக் கட்டு மிகவும் பிரபலம். பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூரில் ஆண்டு தோறும் சல்லிக் கட்டு விழாவைத் தமிழக அரசே ஏற்று நடத்துகிறது. உலகின் பல நாடுகளிலும் காளைகளோடு தொடர்புடைய விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்டு வந்தாலும், தமிழரின் மறப் பண்பாட்டைப் பறை சாற்றும் சல்லிக் கட்டு தனிச் சிறப்புடையது என்பதைப் பார்த்தோர் அறிவர்.
நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!!

வாழ்க்கையின் தத்துவங்கள் ஏழு!!!

ஏழு என்பதற்கும் வாழும் வாழ்க்கைக்கும் நிறைய சம்பந்தமுண்டு.
சூரியனே மிகப்பெரிய சக்தியாக உள்ளது இச் சூரிய ஒளியில் மறைந்திருக்கும் நிறங்கள் ஏழு ,
இந்த ஏழு நிறங்களும் ஒன்றேடுடன் இணைந்து (இறைவனுக்கு மாத்திரம் தெரிந்த தொழிநுட்பத்தில்) வெள்ளெளியாக பூமி‌யை மிக சக்திவாய்ந்த ஒளிக்கதிர்களாக வந்தடைகிறது.
ஆகவே ஏழுக்கு ஒருவித சக்தியுள்ளது என்பது வெளிப்படையாகிறது,இதனை கருத்திற் கொண்டு எமது முன்னோர் வாழ்க்கைக்கு மிக முக்கிய பக்கபலமாக இருப்பவற்றை ஏழு விதமாக பிரித்துள்ளனர் அவையாவன.
கவனிக்க ஏழு விடயங்கள்!!!
உன் வார்த்தைகளை கவனி
உன் செயல்களை கவனி
உன் எண்ணங்களை கவனி
உன் நடத்தையை கவனி
உன் இதயத்தை கவனி
உன் முதுகை கவனி (பின்னாலுள்ளவர்கள்)
உன் வாழ்க்கையை கவனி
வழிகாட்டும் ஏழு விடயங்கள்!!!
சிந்தித்து பேசவேண்டும்
உண்மையே பேசவேண்டும்
அன்பாக பேசவேண்டும்
மெதுவாக பேசவேண்டும்
சமயம் அறிந்து பேசவேண்டும்
இனிமையாக பேசவேண்டும்
பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விடயங்கள்!!!
மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
பரிசுத்தமாக சிரிக்க கற்றுக் கொள்ளுங்கள்
பிறருக்கு உதவுங்கள்
யாரையும் வெறுக்காதீர்கள்
சுறுசுறுப்பாக இருங்கள்
தினமும் உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்
மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
நன்மை தரும் ஏழு விடயங்கள்!!!
ஏழ்மையிலும் நேர்மை
கோபத்திலும் பொறுமை
தோல்வியிலும் விடாமுயற்ச்சி
வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
துன்பத்திலும் துணிவு
செல்வத்திலும் எளிமை
பதவியிலும் பணிவு
மனித வாழ்வில் இருந்தும் பயனற்றவை ஏழு!!!
தன்னுடைய குறையை மறைத்து மற்றவர்களின் குறை,குற்றங்களை ஆராய்தல்
கணவனின் வரவு – செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத மனைவி
கோபத்தைக் கட்டுப்படுத்த தெரியாத அரசர்
பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்
தாக விடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்
நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு
வயதான காலத்தில் பெற்றோருக்கு உதவாத பிள்ளை
தீமை தரும் ஏழு விடயங்கள்!!!
பேராசை,
முதியோரை மதியாமை,
மண்,பொன்,‌பெண் ,போதை என்பவற்றின் பக்கவிளைவுகளை சிந்திக்காமை,
நம்பிக்கை துரேகம்,
நேரத்தினை வீணடித்தல், அதிக நித்திரை,
வதந்தியை நம்புதல்.
வாழ்க்கையின் தத்துவங்கள் ஏழு!!!

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை!!!

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’ என்று சொல்ல நேரிடலாம்.
3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்’ என்று மிரட்டும்.
6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ” கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.
10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.
11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை!!!

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஆபிரஹாம் லிங்கன்........


முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.
1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.
சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!
இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.
இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால் தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.
மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல…
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்...

Thanks: 
Prema Latha


படித்ததில் பிடித்தது...


சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட் டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட் டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.
ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? 


அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள். என் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.


நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.


மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம்,கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்)

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது(10 நாட்கள்).
மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை(2 நாட்கள்).
ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.
ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?



Thanks: Prema Latha