சனி, 12 மே, 2012

மாம்பழங்களை பற்றி ஒரு விழிப்புணர்வு

நன்றி:  Ravi Nag


என்ன எல்லாஇடத்திலும் முக்கனியின் முதல் கனி, மாம்பழம் வீதீக்கு வீதி கிடைக்கிறது. ...மாம்பழம் அதில் அந்த சத்து இந்த சத்து, அதில் சர்க்கரை அதிகம்னு லெக்சர் கொடுக்க நான் வரல......எல்லோரும் விரும்பும் இந்த மாம்பழங்களை பற்றி ஒரு விழிப்புணர்வு.................

ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கல கதை தான் இந்த மாம்ப்ழ சிசன் கதையும். மாங்காவை பறித்து வியாபரிகள் கை மாற்றி விட்டபின் தான் கொடுமை நிறைய நடக்கிறது. ஒரிஜினலா மாம்ப்ழம் மரத்திலே பழுத்தால் தான் அதன் சுவை பன்மடங்கு இருக்கும். அட்லீஸ்ட் நல்ல ஃபார்முலாவில் பழுக்க வைத்தால் பாதி சுவையாவது இருக்கும். ஆனால் இன்று 60 - 70% கெமிக்கல் மாம்பழம் தான் கிடைக்கிறது மார்க்கெட்டில்......இதை எப்படி கண்டு கொண்டு அதில் இருந்து தப்பிப்பது...................

ஆப்பிள் மற்றூம் மாதுளையில் மெழ்கு பூசின மாதிரி இந்த கார்பைடு கல் மேட்டர் தானே ரவின்னு நீங்க கேட்டா - நான் சொல்வேன் இல்லை இப்ப வேற டெக்னிக் யூஸ் பன்றாங்க............... ஏற்கனவே மன்னு பாழாகிபோச்சி உரம் என்ற பெயரில் கெமிக்கலை கொட்டி கொட்டி அந்த மன்னில் விளையும் எல்லா பொருட்களும் அந்த கெமிக்கல் சப்ஸ்டன்ஸ் இல்லாமல் வருவதில்லை......... இப்ப வெளியேவும் கெமிக்கல் வேலை, நான் குறிபிட்டபடி மாம்பழம் மரத்தில் பழுத்து தான் மார்க்கெட்டுக்கு வரனும்னா கடைசி மாச சீசன்ல தான் வரும் அது போக பேக்கிங் கஷடம், வேஸ்டேஜ் அதிகம் அதனால குறுக்கு புத்தி காரங்க மாங்காய் வாங்கி இந்த மாதிரி கேடுகெட்ட முறையில பழுக்க வைக்கிறாங்க. கால்ஷியம் கார்பைடுல பழுத்த பழம் கருப்பு திட்டு அங்க அங்க இருக்கும் சோ உஷாரு, வாசனை வராது, எதிபோன், ஆக்ஸிடைசின், எரித்தால் போன்ற கெமிக்கல்கல் தடவ மற்றும் தெளித்து பழிக்க வைக்கின்றனர். அதனால் நல்ல கடையில் கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்தால் கூட வாங்குங்கள். நீங்கள் வாங்கிய பழங்கள் சந்தேகமாக இருந்தால் தண்ணீரில் போடுங்கள் மிதந்தால் அது டுபாக்கூர் - உள்ளே கனிரசம் (தண்ணீர்) முழுவதும் கெமிக்கல் உறிஞ்சிய பழம். சில ந்ல்ல பழத்தில் ஊசியை வைத்து கூட ஜூஸை இழுத்து விடுகின்றனர். மாம்பழமும் சதையுடன் இருந்தால் போது என நினைத்து நாமும் அதை சட்டை செய்வதில்லை. சும்மா கையில எடுத்து வாயில வச்சா பி கை முழௌங்கை மட்டும் சாறு வடியும் பாருங்க அதுதான் உண்மையான மாம்பழம். சரி கிப்டு வந்திச்சின்னு சொன்னா ஒரு பக்கெட்ல சுடு தண்ணி, ஒரு எலுமிச்சை பழம் மட்டும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு எல்லா மாம்பழத்தையும் நல்லா கழுவி அப்புறம் கட் பண்ணி சாப்பிடுங்க. சில பழங்களில் கை ரேகை, ஊசி குத்து இருக்கும் பழங்களை டோட்டலாக அவாய்டு பண்ணிடுங்கோ.............................

கடைசி டிபஸ் - ஏதாவது கடைக்காரன் கோல்மால் பண்னி வித்து நல்லா இல்லைனா உடனே அவனிடம் பாக்கி பழங்களை திருப்பி கொடுங்கள் சில கடைகளில் ஒரு பீஸ் கீரீ வாங்கி சாப்பிட்டு பார்த்து வாங்குங்க. அப்படி அவன் டபாய்சாஅ ஹெல்த் இன்ஸ்பெக்டர், அல்லது கார்ப்பெர்ஷனிடம் சொல்லுங்க. ஹைகோர்ட் விதித்த 1974
சட்டத்தின்படி பழங்களை கெமிக்கல் வைத்து பழுக்க வைக்கும் வியாபரிகளுக்கு மரண் தண்டனை கூட கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

நன்றி: By: Ravi Nag

செவ்வாய், 1 மே, 2012

கோவில் அமைவு - ஒரு தகவல்



கோவில் அமைவு - ஒரு தகவல்


கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.