இரக்கம் உயிர்களின் கொடை..
எவ்வுயிரும் தன்னுயிரில்
இரக்கம் கொண்டே வாழ்கிறது
இரக்கம் கொண்டவர்கள் பாக்கியவான்கள்
ஏனோ..
என்னுடைய இரக்கம்
சந்தேகத்தோடு பார்க்கப்படுகிறது
என்ன பலன் எதிர்ப்பது
இந்த இரக்கம்...?
கேலிகளுக்கு பின்னே எழும்
வலிகளை துடைத்துக்கொண்டு
நடக்கிறேன்..
உலகம் எல்லாம் பேசும்
ஒன்றும் செய்து
உண்மை புரிந்தபோது
என் இரக்கத்தின் எல்லை
இன்னும் விரிந்தது..
சங்கர் நீதிமாணிக்கம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக