செவ்வாய், 22 நவம்பர், 2016

சில நேரங்களில் சில மனம்


சிறு துளிபட்டாலும்
அலையெழுப்பி சிலிர்த்துவிடும்
பெரும் நீர்பரப்பின் மெல்லினமாய்..
கண்விழித்து எழும் முன்னே
உலகை சுற்றிவந்து
கண்ணாம்பூச்சி  காட்டுவதும்.....
விகாரங்களுக்கு வெளிப்பூச்சு கொண்டு
வேடிக்கை காட்டுவதும்....
பிறன் இன்னலிலே இனிமை காண்பதும்
தன் சோகத்திலே துணை தேடுவதும்
சுற்றி சுற்றி வந்தாலும் திருப்தியில்லை என்றே
தீராத தேடலை எல்லோருக்கும் சுமத்துவதும்..
நல்லார்க்கு உள்ள சாட்சியாய்..
அல்லார்க்கு இல்லா சாட்சியாய்..
எல்லோர்க்கும் இருக்கும் ஒன்றாய்..
கல்லாகி சமயங்களில் கடுமை காட்டி..
கனியாகி சமயங்களில் உருகி வழிவதும்..
பெருங்கருணை அவன் முன்னே மருகுவதும்..
தன்கருணை வேண்டுவோருக்கு இறுகுவதும்..
என்னென்ன மாயம் செய்யும்..
ஏதோதோ வித்தை செய்யும்..
இந்த மனமென்னும்
மகுடி பாம்பு....


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: