தேவதை போல அவதரித்தாள்
அழகு பட்டாம்பூச்சியாய் சிறகடித்தாள்..
நெஞ்சிற்கினியவளாய் கொஞ்சி நின்றாள்..
எல்லோர் வீட்டுக்கும் மகளே
செல்வமகள்....
தந்தையின் அன்பு கொஞ்சும்
செல்ல மகள்...
பூக்காத பருவம் மட்டும்
பறப்பதை தான் ரசித்த உள்ளம்
அழகு ரோஜாவாய் மலர்ந்தபின்னே
முள்ளாகி வேலியிட்டது..
கட்டுக்கள் இல்லாத பட்டாம்பூச்சிக்கு
சிறகுடைந்த கதையாய் போனது..
வளரிளம் பெண்ணாய் அவள்
வளர்ந்து நிற்கையிலே மனம்
வட்டமிடும் கழுகாய் சுற்றிவர
செய்யுது இந்த சமூகத்தின் அவலம்..
நம்பிக்கை கொண்டேன் தேவதையே..
நீ ரோஜாவாய் சிரி...
உன் அழகு வானில் சிறகடித்து பற...
எல்லைகள் இல்லா உலகில்
உன் எல்லைகள் எதுவென்று அறி..
மூத்தோர் வார்த்தைகள் கேள்..
உண்மைகள் மனதில் கொள்..
புரிந்தே பின்னே
நீ தடையில்லாமல் பறப்பதே
நின் சுதந்திரம்..
சங்கர் நீதிமாணிக்கம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக