செவ்வாய், 1 நவம்பர், 2016

** காணாமல் போன எழுதுகோல்- 2 **



எல்லாவறையும் எழுதிய
எழுதுகோல்
எழுத்துப்பழகிய நாளில் இருந்து
என் இதயத்தின் அருகிலேயே..
பிரியாமல் என்னுடனே..

முதலில் பாடங்களை எழுதியது
மெல்ல மெல்ல
என் கனவுகளை எழுதியது..
என் கற்பனைகளை எழுதியது
என் காதலை எழுதியது
என் கவிதையை எழுதியது

ஏற்றங்களில் ஆனந்த கண்ணீர் வரிகளில்
ஊக்கம் தந்தது
ஏமாற்றங்களில் ஆறுதல் கண்ணீர் வரிகளில்
அணைத்துக்கொண்டது
சோதனைகளில் யதார்த்தங்களை சொல்லி
நிற்க வைத்தது
வேதனையில் உண்மைகளை சொல்லி
உறங்க வைத்தது..

மாற்றங்கள் மாறாத போது
இறுக்கிப்பிடித்த விரல்கள்
இன்று விசைப்பலகையில் நார்த்தனம் ஆட..
விரல்களில் இருந்து மனதினை வடித்த
என்னைப்பிரியாத எழுதுகோல்
என்றும் நிரந்தரமாய்
இதயத்தின் அருகில்


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: