என் ராசாவே ஒன்ன நம்பி
வோட்டுபோட்டு காத்திருந்தேன்..
வெள்ளைவேட்டி கட்டி வந்த
வெறுங்கைய வீசி வந்த..
கையெடுத்து கும்பிட்டு
உங்க வீட்டு பிள்ள நானு
தவறாம ஓட்டு போடுன்னு
கைகாலா பிடிச்சிகிட்டு
கெஞ்சி கேட்டுகிட்ட..
வருசம் அஞ்சு ஆச்சு
வந்த ரோடும் பள்ளமாச்சு..
எங்க வாழ்க்கையில முன்னேத்தம்
ஒன்ன தான் காணல...
நடந்து வந்திங்க அப்பு..
பெறவு வண்டியில வந்தீக..
இப்ப பறக்கிற வண்டி எல்லாம்
வரிசையா நிக்குது உங்க வீட்டு
வாசலிலே..
இருந்த காள மாடும்
ஜல்லிக்கட்டு தட போட்டு
இல்லாம போயிடிச்சி எங்க வீட்டு
வாசலிலே..
எதோ.. ராசாவே..ஒன்ன நம்பி
நானிருக்கேன்..
வோட்டுபோட்டு காத்திருக்கேன்..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக