செவ்வாய், 15 நவம்பர், 2016

பதிவு - லைக் - கமெண்ட்




காணாமல் போன குழந்தையாய்
எங்கோ சென்று மறைந்தது
என் பதிவுகள்..
எப்போது ஒப்புதல் பெற்று
எல்லோரின் பார்வைக்கும் வருமென்ற
தவிப்புடன் உள்ளம்..
பதிவிட்ட நொடியில் மனதில்
பிரசவித்த மகிழ்ச்சி..
குழந்தையை பாராட்டுபவர்கள் யார்?
விரும்புவோர் யார்?
ஏக்கம் கொள்ளும் மனசு..
பார்வைகள் பரிதவிக்கும்..
விரும்புவோர் லைக்கிட(like)..
மெத்தவும் ரசித்தவர் இடும்
கருத்தீடோ
உள்ளத்தின் உற்சாக ஊக்கியாய்..


சங்கர் நீதிமாணிக்கம் 

கருத்துகள் இல்லை: