வெள்ளி, 18 நவம்பர், 2016

அன்புள்ள மான்விழியே..



உன் விழி தாமரையில் பூத்திருக்கும்
என் மௌனத்தின் புன்னகை
உன் மெல்லிய இதழ் விரிப்பில்
உதிர்ந்து விழும் என் வலிகள்..


நீ கனவுகளில் எழுதி சென்ற
இதழ் கவிதைகளில் சுவைகள்
நீர் காணா வயலென வெடித்துக்கிடந்த
உள்ளத்து வேதனையில் உயிர் நீராய் ஓடியது..

உன் விழிகளில் ஒளியாய்
உருகிப் பெருகி வழியும்
காதலெனும் பெருங்கருணை
என் எல்லாவற்றும் வடிகாலாய்..

நீ புன்னகையோடு அருகில் இருக்க
நான் எதையும் யோசிப்பதில்லை.
நீ விலகி இருக்கும் நேரமோ
எனக்கு சுவாசமில்லை.


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: