திங்கள், 28 நவம்பர், 2016

கண்ணன் ஏமாந்தான்..



காதலன் அவன்..
பாரதின் அன்புக்காதலன் அவன்..
ரௌத்திரம் பழகச்சொன்ன பாரதி
சௌந்தரியலகரியில் தன்னை மறந்து
கண்ணுக்கு தந்தது காதல் அல்லவோ..

பார்த்தனுக்கு சாரதியாய் வந்தவன்..
பாரதிக்கு கண்ணமாவாகி காதல் சொன்னான்..

காதலனை கண்ணாக காத்திருந்தான்..
அவன் பாடல் வரிகளில் பூத்திருந்தான்..

வறுமை அவன் வயிற்றுக்கு தானே..    
கண்ணனில் உருகி நறுக்கிய வரிகளுக்கு இல்லையே..

கண்ணன் அந்த பாரதியை..
காத்து வந்தான்
கைகளில் ஏந்தி வந்தான்..
வார்த்தை தந்தான்..
வரிகளுக்கு வலிமை தந்தான்..

தேடிவந்து பாடிவந்து நாடிவந்து வணங்கி சென்ற
கலாபக்காதலனை கண்ணிமைக்கும் நேரத்தில்
கலபம் கையணைக்க அசந்துவிட்டான்..

ஏனோ..
கண்ணன் ஏமாந்தான்....

(கலபம் – யானை )


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: