இலையுதிர் காலத்து
பொன்மணி சருகுகள் இடையே
உதிர்ந்து கிடக்கிறாய்..
கண்டறியா அண்டவெளி மறைபொருளாய்
ஆனந்தத்தின் வழியறியா ஆற்றாமையில்
மெல்ல வழிகிறது
குருதியுன் கண்களில்..
மெல்ல அணைத்து உன் நெற்றியில்
முத்தமிடும் என் நினைவுகள்
சில்லுகளாய் நொறுங்கி விழுகையில்
தவித்துகிடக்கிறேன் நான்..
நீயோ...
புன்னகைப்பூக்காரி என்பதை
மறவாமல் எனக்குணர்த்தி
வீழ்ந்துகிடக்கிறாய்
கொடியில் மலர்ந்த பூவாக..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக