திங்கள், 31 அக்டோபர், 2016

** காணாமல் போன எழுதுகோல் **



வாளின் முனையைவிட கூர்மையானது
வடிக்கும் வார்த்தைகளோ….
எண்ணத்தின் மறுவடிவமாய்
வந்தது வார்த்தைகள்....
வார்த்தைகளில் பிம்பக்கள் தந்தது
வாளுக்கு பதிலான கூராயுதம்
எழுதுகோல்..

குத்திக்கிழித்த வல்லூறுகள் பல...
வாழ்த்தி எழுதிய கவிதைகள் பல...
சொல்லி சென்ற காவியங்கள் பல..
வாழ வைத்த காதல்கள் பல..

வெற்றிகள் கொண்டாடிய எழுதுகோலும்
காலவெள்ளத்தில்
காணமல் போனது..

முத்துமணியாக கைஎழுத்து என்று
பார்த்து வியந்த எழுதுகோல் வரிகள்
எங்கே சென்றது?

வாள்முனையை பறித்த துப்பாக்கியாய்..
எழுதுகோலை களவாடியது காலம்..

சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: