வெள்ளி, 30 செப்டம்பர், 2016

இப்படித்தான் ஆரம்பம்



எது எப்படி ஆரம்பமானது என்று அறியா
நொடியில் தான் எல்லாமே ஆரம்பமாகிறது..
வாழ்க்கையின் எழுச்சியும் வீழ்ச்சியும்...
இன்பமும் வேதனையும்..
நேசமும் வெறுப்பும்...
உண்மையும் பொய்யும்..

ஒற்றை நொடியில் வெடிக்கும் விதை தான்
மாவிருட்சமாய்......

எல்லா நொடிகளும் விழிப்புடன் இருப்பது முடியுமா?

இந்த பிரபஞ்சவெளியாய்..
முடியாத தொடக்கமும்..
முடியாத முடிவும் தான்
வாழ்க்கையின் நிலையோ?

புரட்டிப்போட்ட மாற்றங்கள் எல்லாமே..
இப்படிதான் ஆரம்பம் என்று வரையறுக்கப்பட்ட எல்லையில்
என்றைக்கும் இருப்பதில்லை..

ஒன்றை வார்த்தையில்..
ஒற்றை சிரிப்பில்...
ஒற்றை மௌனத்தில்...
ஒற்றை இகழ்ச்சியில்..
ஒற்றை பார்வையில்...

எல்லாமே ஒரு அறியா நொடியின் தொடக்கமே..
முடித்து வைத்த கோலத்தின் தொடக்கப்புள்ளி எது?
நமது பிறப்பின் தொடக்கம் எது?

கேள்விகள் எல்லாம் கேள்விகளாய் வரிசையில் நிற்கட்டும்..
இப்படிதான் ஆரம்பம்...
எந்த புள்ளியில் என்பது...
முடிவு பெறாத கேள்வி....


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: