செவ்வாய், 4 அக்டோபர், 2016

இதுதானா வாழ்க்கை...



சொல்லிவிடலாம் இது தானா வாழ்க்கை என்று..
சுகம் தரும் சோகமும்
இன்பம் தரும் சுமைகளும்
அன்பு தரும் வேதனைகளும்
ஆசை தரும் அவஸ்தைகளும்..
நேசம் தரும் வலிகளும்..

சொல்லிவிடலாம்..இது தானா வாழ்க்கை என்று..
எதோ ஒரு திசையை நோக்கி செல்லும்
இலக்கில்லா சருகின் பயணமா?
இல்லையே..
வலசை வரும் பறவைகளின் பயணம் போல
உலகை வென்றுவிட வரும்
ஆசைகளின் பயணம் இது..

வென்று விடலாம்...
வீழ்த்தி விடலாம்....
வாழ்ந்து விடலாம்..
என நம்பிக்கையின் சிறகடிக்கும்
சாகச பயணம்...

சொல்லிவிடலாம் இது தானா வாழ்க்கை என்று..
இச்சைகளும் இம்சைகளும்
சேர்ந்து புரட்டிபோடும் சிலநேரம்..
இன்பங்களும் துன்பங்களும்
எச பாட்டாய் படுத்திவிடும் சிலநேரம்..
இன்பம் போல துன்பங்களும்
துன்பம் போல இன்பங்களும்
சூழ்ந்திருக்கும் கறையில்லா கடலாய் வாழ்க்கை..

இது தானா வாழ்க்கை என்று
நினைப்பதை விட
இந்த வாழ்க்கைக்கு என்ன குறை..?
என்றெண்ணி
மகிழ்வோடு வாழ்ந்துவிடுவோமே....


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: