செவ்வாய், 27 செப்டம்பர், 2016

அன்பு – 2



அன்று
எல்லோரும் திருப்தியாய் பசியாற..
ஒற்றை அமுதசுரபி கொண்டு
பசித்தோரின் பசிப்பிணி நீக்கினாள் மணிமேகலை..

வள்ளலாரும் வந்தோர்க்கு அமுது படைத்து
பசித்தோரின் உயிர்த்தீயை அணையாது காத்தார்..

ஒரு அப்பமும் இரு மீன்களையும் கொண்டு
அன்பால் அனைவருக்கும் பகிர..
கொடுக்க கொடுக்க குறையால்...
ஐயாயிரம் பேரை போஷித்தார் இயேசு..

நம்மிடமும்

அதுபோல ஒரு அமுதசுரபி இருக்கிறதே..
அறியாமல் உழல்கிறோம் இந்த பூமியில்..

இது பசி தீர்க்காது..பசியை மறக்கடிக்கும்..
ஆறாத காயங்களாய்
நெஞ்சில் இருக்கும் வடுக்களையும் மாற்றும்..

கொடுக்க கொடுக்க குறையாது..
பெற பெற திகட்டாது..

இது ஏற்றத்தாழ்வுகள் பார்க்காது..
கருணையே இதன் பார்வை...
காதலே இதன் மொழி..
பாசமே இதன் வெளிப்பாடு..

அது  தான்.. அன்பு..
அன்பை கொடுங்கள்..
நீங்களும் வள்ளலே..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: