செவ்வாய், 20 செப்டம்பர், 2016

மனைவியின் மனதில் இடம் பிடிக்க....

மனைவியின் மனதில் இடம் பிடிக்க....

மனைவி...
சிரிக்கும்போது சிரித்து விடுங்கள்..
அழும்போது ஆறுதல் சொல்லுங்கள்..
அணைக்கும் போது நெகிழ்ந்து விடுங்கள்..
விலகும் போது வேடிக்கை பாருங்கள்..
கேட்கும் எல்லாம் வாங்கிக்கொடுங்கள்…
பார்வையில் ரசிப்பதை கேட்காமலேயே கொடுங்கள்..
கேலி பேசும்போது புன்னகைத்து விடுங்கள்..
கேலியாய் அவளை பேசிடாது இருங்கள்..
உணவகத்தில் வாங்கித்தாருங்கள்..
நீங்கள் உணவகம் செல்லாதிருங்கள்..
அவள் தூங்கும்போது தூங்கி விடுங்கள்..
அவள் விழித்திருக்கும்போது தூக்கம் மறங்கள்..
எள் என்றால் எள்ளாக மட்டுமே இருங்கள்..
எண்ணையாக என்றும் இருக்காதீர்கள்...
மௌனமொழிகள் பழகிக்கொள்ளுங்கள்..
ஜாடை மொழிகள் புரிந்துகொள்ளுங்கள்..
கண்களில் பாஷை அறிந்துகொள்ளுங்கள்...
தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையாய்
வாழ்ந்து விடுங்கள்..
வீட்டில் நீங்கள் தாக்குபிடிக்கலாம்..

கவலையும் வேண்டாம்.. பயமும் வேண்டாம்....
வெளியுலகம் நமக்கே..

(இந்த புன்னகை போதுமே.. அதுக்கு தானே இந்த பதிவு..)


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: