செவ்வாய், 27 செப்டம்பர், 2016

பெண் என்பவள் யார்..



உயிரின் உயிர்..
உயிர்மையின் வேர்..
ஆணின் அடிமையாய் நினைக்கப்படும் பொய்யின் உண்மை
ஆணை ஆளும் உண்மையின் பொய்..
புரிந்துகொள்ள முடியாத புதிர் என்று
விலகிச்செல்லும் ஆண்களில் பிரதி....
அன்பின் ஊற்றும் அவளே..
அன்பை விட்டுக்கொடுக்க மறுப்பவளும் அவளே..(Possessiveness)
காமத்தை மறைக்கும் காதல் தேவதை..
காமத்தை வெல்லும் கடவுளும் அவளே..
உயிரோடு உயிராய் இருப்பவளும் அவளே..
உயிரை உறிஞ்சம் இன்பமும் அவளே..
புதிராய் தோன்றும் புன்னகை தருவாள்..
புன்னகை கொண்டு புதிரையும் அவிழ்ப்பாள்..
கடவுளாய் நினைக்க இல்லை என்பாள்..
பேயென ஒதுங்க அன்பால் அணைப்பாள்..
அடங்கியும் வாழ்வாள்..
அடக்கியும் ஆள்வாள்..
முரண்களில் முரண் அவள்..
எல்லோரையும் பிரதிபளிக்கும் கண்ணாடி அவள்..
நாம் நினைப்பதும் அவள் தான்..
நாம் நினைக்காததும் அவள் தான்..
ஆணின்றி அவளுண்டு..
அவளின்றி ஆணில்லை..
இதுதான் பெண் என்று சொல்லும்போதே
அதுவல்ல நான் என்று மாறி நிற்பாள்..
இருக்கும்போது வேண்டாமென நினைக்கவும்..
இல்லாத போது இல்லையே என்று ஏங்கவும் வைப்பவள்..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: