திங்கள், 25 ஏப்ரல், 2016

இளமை

மரங்கள் தோறும் ஆடி ஓடி
தூக்கணாங்குருவி குருவி போல
தொங்கி விளையாடும்
இன்பம் எங்கே..போச்சு?
சோர்ந்து போயி சொங்கி போல
மூலையில் முடங்கி இப்படி
முகம் பார்க்காம விளையாடும்
இதில் இன்பம் தொலைஞ்சு போச்சு..?
தாவி குதிச்சி மோதி மிதிச்சி
காயா பழமா விட்டு விளையாடும்
காலமும் போச்சு..
இருக்கும் நாலு மூலைக்கு
ஒருத்தராக உட்கார்ந்து
முகம் பார்த்து களித்து
விளையாடும் நாளும் காணாம போச்சு?
மீளாத தனிமையில்
இல்லாத உலகத்தில்
இன்பம் என்றே ஆச்சு..

கருத்துகள் இல்லை: