செவ்வாய், 5 ஏப்ரல், 2016

ஊடலும் கூடலும்



வறண்டுபோன பாலையிலே
உன்னோடான ஊடல் கூடலின்
நினைவுகள் தான்
தண்ணீர்ப்பந்தலாய்
என் மனத்தாகம் தீர்க்கிறது

தண்ணீரிலே மிதந்தாலும்
ஒட்டாது நிற்கும்
தாமரை இலையாய்
வாழ்க்கை தனியாகிப்போனது
நெறிஞ்சி முள்ளாய்
நான் நிற்கையிலே நெஞ்சில்
குத்துகிறது..

கனவுகளில் இனிமை தரும்
செல்ல ஊடலும்
ஏக்கங்களின் பார்வையில்
தவிக்கும்போது எதிர்பார்க்கும்
கூடலின் இனிமையும்
வாழ்வின் வசந்தங்கள்.

இந்த கூடலின் இனிமையை
ரசித்திடத்தான் நானும்
தினம் தினம் எதிர்பார்க்கிறேன்
உன்னோடான ஊடல்களை.. 

கருத்துகள் இல்லை: