வியாழன், 14 ஏப்ரல், 2016

திசையறியா பயணம்..

ஓயாது ஆர்ப்பரிக்கும் நீலக்கடலின்
கரைதேடும் அலையில்
கரைந்தோடும் மணலாய்
கரைந்தே போகிறது என் எண்ணங்கள்..

அலையாடும் கடல்மீது
தடம்மாறாது படகோட்ட
ஆசைப்படும் சிறுபிள்ளையாய் என்  மனது....

மெல்லக்காற்றிலடி
இடம்தேடி அலையும் சின்ன துகளாய்
எந்தன் பயணம்..

தொலைத்த அன்பின் முகவரி தேடி
தொலைத்த இடம்தவிர்த்து
எங்கெங்கோ அலைகிறேன்..

மனக்காயங்களின் அருமருந்தாம் அன்பு
எங்கும் பூத்துக்கிடக்க
வழி தவறிய பயணத்தில்
தடம்மாறி நிற்கிறேன்..

காலப்பந்து என்னை கசக்கிய காகிதமாய்
காற்றிலும், மேட்டிலும், காடுகரைகளில்
சுற்றவைத்து அலைகழிக்கிறது..

பிரளயத்தின் நீர்ச்சுழலில்
சிக்கிச்சிதறி உருதெரியாது
உடைந்து போன ஓடமாய்

என்  பயணமும் முடிந்துவிடுமோ.......?

கருத்துகள் இல்லை: