செவ்வாய், 19 ஏப்ரல், 2016

** நாணல் **



நேர்கொண்ட நெஞ்சம் போச்சு..
வளையாத மனதும் போச்சு..
எல்லார் வாழ்க்கையும் நாணலாய் ஆச்சு...

நேர்மைகள் விலைபேசும் நாட்டில்
நாணலாய் மக்கள்..

திசைகள் தோறும் நாணல் மனிதர்கள்..
பேச்சுக்களில் வளைப்பார்கள்..
பேச்சுக்களில் வளைவார்கள்..
ஈனமென நினைத்தாலும் - அதில்
நாமும் ஒரு  நாணலாய்..

கூனிக்குறுகிடும் நடையிலே
சுயங்கள் தொலைத்து
சாக்கடையோர நாணலாய்
தலை குனிந்து
நிஜங்கள் தொலைகின்றன..

முறிந்தாலும் நேர்மையில் நிமிர்ந்திடும்
விழுதுகள் தாங்கும் ஆலமாய்
நிற்பது யார்???

நாணலாய் வளைகின்ற நெஞ்சுகள்
எங்கும் சுயநலக்கூட்டை ஏந்தி
கோடியிலே ஒன்றாய் கரைகிறது..

அலை கவரும் மணலாய்
மெல்ல அரிக்கப்படும் மானுடம்..
என்றும் நாணல் மனதினால்
மாற்றம் வந்திடுமோ?

நாணலாய் எங்கும் வளைவது
தவறில்லை என்றால்..
இங்கு தவறுக்கு தலைவணங்கி
வீழ்ந்திடும் மனித நாணல்கள்..

வேதனை சின்னமே..


கருத்துகள் இல்லை: