திங்கள், 11 ஏப்ரல், 2016

அருவி

வானிருந்து வீழுகின்ற
வெண்பஞ்சு மேகமென..
கடல்தேடும் நீரருவி
பாய்ந்துவரும் மலையெல்லாம்
மேனிசிலிர்த்திட தேகம் செழித்திட..
உற்சாக நடைபோட்டு
ஊரெலாம் சுற்றிவந்து
சில்லென்று சாரலோடு
என் தேகம் தழுவிக்கொள்ள வா..
நீ என் தேகம் தொடும் வேளை
என்னவளை நினைவூட்டி
மெல்ல கொஞ்சும் காதலியாய்

மேனி தழுவி செல்வாயோ

கருத்துகள் இல்லை: