ஏதாகிலும் செய்...
ஏதாகிலும் சொல்..
ஏதாகிலும் கேள்...
உன் உயிர்ப்பைக்
காட்ட
அதுவே வழி..
ஏதாகிலும் நினை..
ஏதாகிலும் படி..
ஏதாகிலும் எழுது..
உன் செயலைக் காட்ட
அதுவே வழி..
தூங்கினாலும்
விழித்திருக்கட்டும்
உன் அகம்..
விழிப்புடன்
கழியட்டும்
உன் நாட்கள்..
பொல்லாத உலகம்..
உன்னை படிக்கல்லாக்கி
மிதித்தோடிவிடும்
-சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக