ஞாயிறு, 1 நவம்பர், 2015

மனம்

எல்லா கோப்பைகளும்
காலியானது
சுவாரசியங்களை
நிரப்பக்கூடியதாய்....!
இனிய நினைவுகளை
ஊற்ற
இன்பத்தில் தளும்புகிறது
சோகங்களை நிரப்ப
ஆழ்ந்த
அமைதி கொள்கிறது
சுவாரசியங்களையும்
சுகங்களையும் கூடவே..
அன்பை அளவிலாமலும்
காமத்தை இதழோடும்
மரியாதையை மனதோடும்
எவ்வளவு ஊற்றினாலும்
சில கோப்பைகள்
நிரம்பாமல்..
துயரங்களின் கண்ணீர்த்துளிகளையும்
தாங்கிக்கொள்கிறது...
மனதும் கோப்பையும் ஒன்றுதான்
ஏற்றுக்கொள்ள இடமுண்டு
கொட்டிவிட வழியுண்டு....
-சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: