ஞாயிறு, 8 நவம்பர், 2015

வைர நெஞ்சம்

கொள்கைப்பிடிப்போடு
கோணல் வழியின்றி
நேர்கொண்ட மனதோடு
வாழ்வார் நெஞ்சம் – வைரம்
அன்போடு அரவணைத்து
பண்போடு பாதுகாத்து
துயரங்களில் தளராது
துக்கங்களில் துவளாது
தோளோடு தாங்கும்
சதி/பதி நெஞ்சம் – வைரம்
திக்கற்றோர் துயர்நீக்கி
வக்கற்றோர் வறுமைபோக்கி
எத்திக்கும் இனிமை விதைக்கும்
மனிதருள் மாணிக்கத்தின்
நெஞ்சம் – வைரம்
சோராமல் உழுது மண்ணை
வளமாக்கி விதை தூவி
விளைததெல்லாம்
ஏமாளியாய் விற்றுவிட்டு
கோமாளியாய் ஏரெ(றெ)டுக்கும்
விவசாயி நெஞ்சம் –
வைரமன்றி கரியா என்ன?

கருத்துகள் இல்லை: