செவ்வாய், 24 நவம்பர், 2015

நீறு பூத்த நெருப்பு போல..


நெஞ்சுக்குள்ளேயே கறுவிகொண்டு இருந்தது. தன்னுடைய வாழ்விடத்தை, வரும் பாதைகளை அனுமதி இன்றி சுற்றி வளைத்தவர்கள் மீது. கேட்ட யாருமில்லை என்ற இறுமாப்பில் வளைத்து வளைத்து ஓரிடம் நிற்க முடியாமலும், தன் போக்கில் நிம்மதியாய் ஓடமுடியாமலும் தன்னை முடமாக்கியவர்கள் மீதான தன்னுடைய கோபத்தை நீறு பூத்த நெருப்பு போல மனதில் தேக்கி வந்தது. சூரியனின் துணை இருப்பதால் ஆட்டம் போடும் உங்களின் கொட்டம் ஒருநாள் அடங்கும். வாழ்க்கை வட்டத்தில் எனக்கும் ஒரு காலத்தில் ஏற்றம் வரும். அப்போது நான் யார் என்று காட்டுகிறான் என்று அமைதியும் காத்துக்கொண்டு இருந்தது. வானம் வழி விட, வளியும் வாய்ப்பு தர சுற்றிச்சுழன்று அடித்த மழையில் தன்னுடைய ஆற்றாமைகளை வாரிக்கொண்டு வழியில் கண்டதை எல்லாம் சுருட்டி கொண்டு தன்னுடைய வஞ்சத்தை தீர்த்துக்கொண்டது வாழிடம் பறிகொடுத்த தண்ணீர்....

கருத்துகள் இல்லை: