ஞாயிறு, 8 நவம்பர், 2015

காதல் நினைவுகள்

நினைவுகளை சுழற்றி அடிக்கும்
உன் பார்வையின்
இம்சையிலிருந்து தப்பிக்க முடியாமல்
தத்தளிக்கிறது மனது..
பாலைநிலத்தில் நடந்தாலும்
தெரியாத சோர்வு
உன்னை பார்க்காமல் இருக்கையில்
வீழ்த்துகிறது
உன் ஒற்றை வார்த்தை
எனக்கு உயிர் தரும்போது
உன் மௌனமோ
உயிரை மெல்ல உறுஞ்சுகிறது..
காலடித்தடம் இல்லாத நிலத்திலும்
உன் மனதின் தடம் பற்றி
நடக்க முடிகிறது
உன் நினைவுகள் இல்லா நிமிடங்களோ
ஆக்சிஜன் இல்லா கணமாய்
என்னைத் திணறடிக்கிறது...
காதல்
இனிமையா, இம்சையா? என
தெரியாத மூடனாக்கி
உன் நினைவுகள் என்னை மூழ்கடிக்கிறது...
கூட்டத்தின் நடுவில்
உன்னினைவுகளால் தனியாளாய்
நிற்கிறேன்..
உன் நினைவுகளே
என்னைத் தாலாட்டுகிறது
உன் நினைவுகளே
என் மூச்சையும் நிறுத்தி
வேடிக்கைக்காட்டுகிறது
-சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: