ஞாயிறு, 8 நவம்பர், 2015

வாழ்ந்து பார்க்கவேண்டும்

வாழ்ந்து பார்க்கவேண்டும்
உலகை ரசித்துப்பார்க்க வேண்டும்..
பாரதியின் காணி நிலத்தினிலே
தோப்பமைத்து குடிசைக்கட்டி
அமைதியான குளுமையிலே
மேதினியில் காதலினியாளின்
கூட்டினிலே களித்து
மையலில் வாழ்ந்து பார்க்க வேண்டும்..
இன்பங்களும், துன்பங்களும்
இணைத்து வந்தாலும்
என்றும் தளராத மனம்கொண்டு
இவுலகில் வாழ்ந்து பார்க்க வேண்டும்..
காசில்லா உலகு படைத்து
கடனில்லா வாழ்க்கை பெற்று
எளிமையான உலகினிலே
இனிமையாக வாழ்ந்து பார்க்க வேண்டும்..
துரோகத்தின் கூட்டமில்லா
நட்புகளின் நேசத்தோடு
உறவுகள் சூழ நெஞ்சில்
சந்தோசம் பொங்கிடவே
அன்புடன் வாழ்ந்தது பார்க்க வேண்டும்..
விலையில்லா பொருள் தவிர்த்து
உழைப்பாலே எல்லாம் வாங்கி
பெருமையுடன் இன்பமாய்
எல்லோரும் வாழ்ந்து பார்க்க வேண்டும்..
குடிகெடுக்கும் குடியில்லா
அமைதியான தமிழகம் மலர்ந்திட
ஓர்நாள் அதில் வாழ்ந்து பார்க்க வேண்டும்..
-சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: