ஞாயிறு, 8 நவம்பர், 2015

வைர நெஞ்சம்-2

பாசங்கள் கோடி நம்மை 
சுற்றி இருந்தாலும் 
வேஷங்கள் கொண்ட உலகம்
நம்மை வதைக்கக்கூடும்
சோதனைகள் சூழ்த்து வரும்
வேதனைகள் வேக வைக்கும்
சொல்லீட்டி அம்புகளோ
சூழ்த்து நம்மை கொல்லவரும்..
துரோகமும் நிழல்போல
நம்முடனே நாளும் வரும்
சொல்லன்னா துயரங்களும்
சொல்லாமல் வந்துநிற்கும்
ஏமாற்றம் எதிரே வர
இல்லாமை இறுக வைக்க
தள்ளாமை நடையில் வரும்
தளர்ந்தே நம்மை போகச்செய்யும்
எல்லாவற்றையும் நம்மேல் போட்டு
புதைத்துக்கொண்டு
அழுத்தங்கொண்டு
வெப்பங்கொண்டு...
கனிந்துவரும் நாளுக்காய்
மூச்சடக்கி பேச்சடக்கி
மௌனமாய் காத்திருப்போம்
மனத்தின் திடத்தோடு
மாறாத புன்னைகையுடன்
பூமியின் மேலே நாம்
போராடி வெற்றிகண்டு
வாழ்த்து காட்டும்போது..
கரியென்று நம்மை நினைத்து
புதைத்து மிதித்து அழுத்தி
பூமியிலே போட்டவர்கள்
புரிந்துகொள்வர் அந்நாளில்...
நாம் நெஞ்சம்
ஜொலிக்கின்ற வைரமென்று
-சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: