ஞாயிறு, 8 நவம்பர், 2015

காதலுக்கு கடிதம்

என் உள்ளத்தை கொள்ளைகொண்ட
வெள்ளிநிலவே – நீ
என்னை நோக்குங்கால் 
சிறகடிக்கம் வண்ணத்துப்பூச்சியைப் போல்
கண்கள் துடிப்பது ஏனோ?
வெள்ளைமனம் கொண்ட
என் இதய ராணியே...
நான் பெரும் பாக்கியம் பெற்றவனாவேன்...
உன்னை சந்திக்கவும்...
உன் அன்பை பெறுவதற்கும்...
உன் காதலை அடைவதற்கும்..
நான் அதிர்ஷ்டத்தை நம்பாதிருந்தேன்..
அதிர்ஷ்டதேவதையே..
நீயே என்னை வந்து
சேர்ந்த பிறகு நம்பாமலிருக்க முடியுமா...?
அன்பானவளே...
உன் அன்பு எனக்கு
கடுங்கோடையில் கிடைத்த
குளிர் தெள்ளிளநீர் போல
மிகவும் தேவையாகவும்
நினைத்திட இனிமையுமாய் உள்ளது..
பூவனத்து பூக்களில் தலைவியே..
நீ நினைத்து நின்றபோது
நான் தயங்கி நின்றிருந்தேன்..
நீ தேடி வந்தபோது
நான் மயங்கி மகிழ்ந்திருந்தேன்..
இதோ இரவுகள்
கடந்துகொண்டே இருக்கிறது..
ஆனால்
உன் இனிய நினைவுகள்
என்றும் நீங்காமல்..
என்றும் அன்புடன்..

கருத்துகள் இல்லை: