ஞாயிறு, 8 நவம்பர், 2015

காதலின் தோல்வி

கண்கள் பார்க்க
காதல் பிறந்தது
நெஞ்சம் இனிக்க
நாளும் நகர்ந்தது 
சொல்லாத வார்த்தைகள்
காதில் ஒலித்தது
சொர்க்க பூமியாய்
காட்சி விரிந்தது ..
சொல்லென்று ஒரு
மனதும்
பொறுவென்று ஒரு
மனதும்..
சொல்லாமலே ஓடியது
காலமும்..
இன்று நீயொரு ஊரில்
உன் குடும்பத்தோடு
நானொரு ஊரில்
என் குடுப்ம்பத்தோடு
இந்த நாளும் மகிழ்ச்சியாய்
தான் இருக்கிறது..
இது காதலின் தோல்வியல்ல..
நம்மின் காதல்தோல்வி மட்டுமே..

கருத்துகள் இல்லை: