ஞாயிறு, 22 நவம்பர், 2015

கோபம்


பாரதியின் வாய்மொழியில்
ரௌத்திரம் பழகு என்று 
கோபத்தை கொண்டாடினான்..
வள்ளுவனின் ஈரடியோ
சினம் கொண்டாரைக் கொள்ளும்
நோய் என்றது கோபத்தை
கோபம் கொள்ளும்மிடத்து அதை
கொல்லுபவன் மிகச்சிறந்தவன்..
கோபத்தில் சொற்கள் ஒவ்வொன்றும்
நம் நிம்மதியோடு
ஆயுள் அழிக்கும்
தன்மீது கல்லெறிபவன் மீது
கோபங்காட்டமல் கனிகளை
பரிசளிக்கும் நல்மரம்
கோபத்தால் குணமழியும் குலமழியும்
உனைச்சுற்றி எல்லாமழியும்..
இருக்குங்கால்
எதற்கிந்த வீண் கோபம்..
கோபங்கள் துயர்மீட்கும்
இடமுண்டு
கோபத்தில் ஊற்றினிலே
குணம் வாழும்
மனமும் உண்டு
கோபத்தின் குணமது தான்
நெருப்புப் போல..
கோபமது..
தீபமும் ஏற்றும்
தீயும் வைக்கும்..
-சங்கர்நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: