ஞாயிறு, 22 நவம்பர், 2015

விடை என்ன?

நிறமற்று போனாலும்
நீ யற்று போவதில்லை கனவுகள்
நீயே என் வானத்தின்
விடிவெள்ளி...
நீயே என் சுவாசத்தின்
உயிர் காற்று...
நீயே என் வார்த்தைகளின்
வாழும் அர்த்தம்....
நீயே என் கண்ணீரின்
காரணம்..
நீயே என் மனதின்
சாந்தி..
நீயே என் வேதனைகளின்
சாரம்..
நீயே என் வலிகளுக்கு
மருந்து..
நீ நீயாக இருக்கும்போது தரும்
வேதனைகளை
நீ நானாக மாறும்போது
ஆறுதலாகிறாய்..
நீ என்பது நீயா இல்லை
நீ என்பது என் நிழலா
நீ என்பது என் மனமா
நீ என்பது என்ன?
வினாக்களாய் சூழ்ந்திருக்க
விடையாய் நீ வேண்டும்

கருத்துகள் இல்லை: