மகிழ்கிறேன்..
துயரங்களை எல்லாம் தூர வைத்துவிட்டு
என் மனது தந்த மந்திர சாவியால்
நான் என்றென்றும் மகிழ்கிறேன்....
காலங்கள் விட்டுசென்ற வடுக்களோடு
போட்டியிடும்
வேதனைகள் நெஞ்சில் நிறையவே...
வெளித்தள்ள இயலா குருதியாய்
என்னுள் அவை சுழலட்டும்..
என் பார்வைகள் மகிழ்ச்சியாய்..
என் உதடுகள் புன்னகையுடன்..
என் நட்புக்கள் உதிர்க்கும்
நேச குளிர்மலர்கள் வார்த்தைகள்
பனித்துளியாய் என்னை மெல்ல
அணைத்துக்கொண்டு
என் வேதனையின் வெப்பங்களை
கழுவி விடுகிறது..
இல்லையே என்ற ஏக்கம் இல்லை..
இருந்தால் நலமோ?
கேள்வியும் இல்லை..
இல்லாதவர்களின் களிப்பும்
இருப்பவர்களின் தத்தளிப்பும்
என்னை தண்ணீரில் மிதக்கும் சமநிலை
தக்கையாய்
சமநிலையில் உலகில் மிதக்க வைக்கிறது..
கோலம் முடிந்தபின்
எது ஆரம்பம்..
எது முடிவு....???
யாருக்கு தெரியும்..
சுற்றி சுற்றி வந்தாலும் சந்திக்கும்
புள்ளி தான் ஆரம்பம் எனக்கொள்வோம்..
நானும் சுற்றி சுற்றி வருகிறேன்..
ஏற்றம், தாழ்வு
அன்பென பாயும் ஏச்சுக்கள்
வேதனைகள்
அலட்சியங்கள்..
மனதை கிளரும் துக்கங்கள்..
குப்பையாய் சில நினைவுகள்
எல்லாம் கடந்து
மகிழ்வுடனும் நம்பிக்கையுடனும்
தொடங்கிய ஆரம்பப்புள்ளியில்
மீண்டும் மீண்டும் நின்று களிக்கிறேன்
மகிழ்வோடு ஆரம்பித்த இடந்தில்
மீண்டும் மகிழ்வோடு இளைப்பருகிறேன்..
அன்புடன் சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக