வருடிவிட்ட தென்றாலாய் பார்த்த
கண்களுக்கு
சுழன்றடித்த சூறாவளி பேராச்சர்யமே..
சுற்றிச்சுற்றி வந்து
முடக்கிப்போட்ட நாளில் தான்
யாரும் பார்க்காத
இயற்கையை கற்றுணர்ந்தனர்...
அமைதியான நாளில் வந்த
ஆழிப்பேரலையும்..
ஆர்ப்பாட்டமாக வந்த “வர்தா”வும்
நினைவு ஏடுகளில் நீங்கா பக்கமாயின..
பேய்ப்பிடித்தாடும் பெண்ணாகி
தலை சுற்றியாடியது மரங்கள்..
வீழ்த்த முடியாது என்று இருமார்ந்த
தலையாட்டி மரங்கள்
வேர்வீழ தடம்புரண்டன..
பளிச்சிடும் வண்ணவிளக்குகள் காணாமல்
மீண்டும் ஒரு இருண்டநாள் வாழ்க்கை
எல்லோருக்கும்..
புதிய அனுபவம் தான்..
நள்ளிரவு கடந்தாலும் அயராத கூட்டம்
நாழிப்பொழுதில் கூட்டில்
சுருட்டிக்கொண்டது..
செயலிழந்த அலைபேசிகள் வெறும்
நெகிழிபொம்மையாய் சிலநாட்கள்..
இந்த நாளும் கடந்துபோனது..
இதோ..
இயல்புக்கு திரும்பினர் மனிதர்கள்
அதே சுயநலத்தோடு...
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக