வியாழன், 17 செப்டம்பர், 2015

வாழ்க்கை

சோர்ந்து இருக்கும்போது
ஒரு அழகு பட்டாம்பூச்சி
தோள்மேல் அமர்ந்தால்
எப்படி இருக்கும்....
மெல்ல நாம் சாலை கடக்கும்போது
எதிர்படும் எவரையும்
நட்புடன் புன்னகைத்து
கடந்து செல்ல வரும் உணர்வு
எத்தகையது...
எதையும் எதிர்பார்க்காமல்
மற்றவர்களுக்கு செய்யும்
உதவி எதைப்போன்றது..
வாழ்க்கை மிக
அற்புதமானது...
எதிர்பார்ப்பு இன்றி
வாழ்ந்து பார்க்கும்போது
மட்டுமே உணரமுடியும்..

கருத்துகள் இல்லை: