இலையுதிர்ந்த மரமாய்
கானகத்தின் நடுவில்...
ஒரு நிறையாத கோப்பையாய்
இருக்கிறேன்..
காய்ந்துபோன நதியின் தடத்தில்
தண்ணீரைத்தேடி
தாகமாய் அலைகிறேன்..
சுழலில் சிக்கிய சருகாய்
மீளா வெளியில்
யாருமின்றி.. திசையுமின்றி..
நகர்ந்து செல்லும் நாட்களும்..
சுழன்று செல்லும் காலமும்
நிற்காது அதன் போக்கில்..
சுமையில்லா காலப் பயணியாய்
தொடரும் என் பயணம்..
சுற்றிவரும் வல்லூறுகளின்
பார்வை..
எப்போது வீழ்வேனென்று...
புரிவதில்லை..
இலையுதிர்காலம்
தன்னைப் புதிப்பிக்கவே..
திணிப்பையும் விட
வெற்றுக்கோப்பை நலம்..
ஓங்கிப் பரிகசிக்கும்
ஓநாய்களின் கொட்டம்
விடியும் மட்டுமே..
யாருக்குமே மறுவிடியல்
இல்லாமல் போவதில்லை..
கானகத்தின் நடுவில்...
ஒரு நிறையாத கோப்பையாய்
இருக்கிறேன்..
காய்ந்துபோன நதியின் தடத்தில்
தண்ணீரைத்தேடி
தாகமாய் அலைகிறேன்..
சுழலில் சிக்கிய சருகாய்
மீளா வெளியில்
யாருமின்றி.. திசையுமின்றி..
நகர்ந்து செல்லும் நாட்களும்..
சுழன்று செல்லும் காலமும்
நிற்காது அதன் போக்கில்..
சுமையில்லா காலப் பயணியாய்
தொடரும் என் பயணம்..
சுற்றிவரும் வல்லூறுகளின்
பார்வை..
எப்போது வீழ்வேனென்று...
புரிவதில்லை..
இலையுதிர்காலம்
தன்னைப் புதிப்பிக்கவே..
திணிப்பையும் விட
வெற்றுக்கோப்பை நலம்..
ஓங்கிப் பரிகசிக்கும்
ஓநாய்களின் கொட்டம்
விடியும் மட்டுமே..
யாருக்குமே மறுவிடியல்
இல்லாமல் போவதில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக