வெள்ளி, 18 செப்டம்பர், 2015

தனிமை

தூரத்திலிருந்து வெளிச்சக்கீற்று
வழிகாட்ட - மெல்ல மெல்ல
செல்கிறது என் பயணம்..
சில்வண்டுகளின் கூக்குரலில்
என் வார்த்தைகள் மௌனமாயின..
இருள்சூழ்ந்த காடுகளின்
சலனமற்ற அமைதி
மெல்ல என்னை அசைத்துப்பார்க்க
தடம்மாறது அனிச்சையாக
நடைபோடுகிறேன்..
தனிமைக்காடு தாண்டி
வெளிவரும் பயணத்தில்
மெல்லப்பெருகிவரும்
ஒளிப்பிரவாகத்தில்
திரும்பிப்பார்க்க - என்
நிழலும் இல்லாது போனது...

கருத்துகள் இல்லை: