சனி, 26 செப்டம்பர், 2015

வேண்டும்.. வேண்டும்..

அன்பே..

சில்லென்ற தூறல் விழும்
அந்திமாலைப் பொழுதில்
உன் கரம் பற்றி ஒரு
சின்ன நடை போட வேண்டும்..

வசந்தகால பூக்களைத் தூவும்
மரங்களின் நிழலில் உன்
மடி சாய்த்து
சிறிது துயில வேண்டும்...

சிலிர்க்கின்ற அருவிக்கரையில்
பாதம் நனைத்து உன்
புன்சிரிப்பில்
மனம் கரைந்து போகவேண்டும்

கடலைகள் கம்பளம் விரித்த
மணற்பரப்பில் உன்
பாதச்சுவடு
பற்றி நடக்க வேண்டும்..

விண்ணுயர்ந்த மலையுச்சியிலே
மேகம் தழுவும் வேளையிலே
உன்னோடு இருந்து
மகிழ வேண்டும்..

கனவுகளின் ராஜ்யத்தில்
மாயவன் கோட்டையிலே உன்னை
ராணியாகி
ரசித்திட வேண்டும்..

வேண்டும்.. வேண்டும்..
எல்லாம்.. வேண்டும்..

அதற்கு முன்..
எனக்கு உன்..

நிபந்தனையில்லா உன்
நேசம் வேண்டும்..
எதிர்பார்ப்பில்லா
இதயம் வேண்டும்..
நெகிழ்ந்துருக உன்
அன்பு நெஞ்சம் வேண்டும்...
கனிவு கொண்ட உன்
கண்ணோடு.. காதலும் வேண்டும்....


கருத்துகள் இல்லை: