தேடிப்பிடிக்கச் செல்ல
மெல்ல பறந்து சென்றது
பட்டாம்பூச்சி....
காலவெளியில் தேடியும்
பிடிக்க முடியவில்லை...
பொறுமை தொலைத்து
ஓடித்துரத்த
விட்டு விலகிச் சென்றது...
கோபத்தோடு வேகம் காட்ட
பூக்காட்டில் ஒளிந்துகொண்டது..
வேதனைக்கண்ணீரோடு அழைக்க
நெருக்க மறுத்தது..
செயலற்று மெல்ல அமர்ந்தேன்..
கண்கள் மூடி சுவாசத்தை
நேசிப்போடு நோக்கினேன்..
பூக்களின் கூட்டத்தைப்
புன்னகையோடு பார்த்தேன்..
சூழ்ந்த வனத்தை அதன் வனப்பை
அன்போடு கட்டிக்கொள்ள..
புற்களின் மேனி வலிக்காது
மெல்ல ஸ்பரிசம் கொடுக்க..
எல்லா குரோதங்களைய்ம் விட்டு
கனிவோடு உலகை பார்த்து
அமைதியில் ஆழ்ந்திருக்க...
என் கரம் அமர்ந்தது
மெல்ல சிறகடிக்கும்
பட்டாம்பூச்சி......
மெல்ல பறந்து சென்றது
பட்டாம்பூச்சி....
காலவெளியில் தேடியும்
பிடிக்க முடியவில்லை...
பொறுமை தொலைத்து
ஓடித்துரத்த
விட்டு விலகிச் சென்றது...
கோபத்தோடு வேகம் காட்ட
பூக்காட்டில் ஒளிந்துகொண்டது..
வேதனைக்கண்ணீரோடு அழைக்க
நெருக்க மறுத்தது..
செயலற்று மெல்ல அமர்ந்தேன்..
கண்கள் மூடி சுவாசத்தை
நேசிப்போடு நோக்கினேன்..
பூக்களின் கூட்டத்தைப்
புன்னகையோடு பார்த்தேன்..
சூழ்ந்த வனத்தை அதன் வனப்பை
அன்போடு கட்டிக்கொள்ள..
புற்களின் மேனி வலிக்காது
மெல்ல ஸ்பரிசம் கொடுக்க..
எல்லா குரோதங்களைய்ம் விட்டு
கனிவோடு உலகை பார்த்து
அமைதியில் ஆழ்ந்திருக்க...
என் கரம் அமர்ந்தது
மெல்ல சிறகடிக்கும்
பட்டாம்பூச்சி......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக