புதன், 23 செப்டம்பர், 2015

ரகசியம்

திறக்கப்படாத கதவுகளின் பின்னே
ஒளிந்திருக்கும் ரகசியங்கள்..
மூடிவைத்திருக்கும்மனதின்அடியில்
கனன்றுகொண்டிருக்கும் ஆசையின் தகிப்பு..
உச்சரிக்கப்படாத வார்த்தையில் தான்
எல்லா ரகசியமும்...
ஊசியின் காதுவழி உலகத்தை
பார்க்க தெரிவதென்ன?
கவிழ்த்து வைத்த கோப்பையில்
என்ன நிரப்புவது?
கேள்விகளின் சங்கிலிகள்....
விடையில்லா முடிச்சுகளாய்...
ஓடாது தேங்கும்நீர் புழு நெளியும்
சகதியன்றோ?
சாளரங்கள் திறந்துவைக்க
வெளிச்சக் கோலத்தோடு சுகந்தம்
ஏந்திவரும் கற்று...
திறந்துவைத்த கதவின் பின்னே
ரகசியமும் இல்லை..
சங்கடமும் இல்லை...
நேர்வழியில் பயணிக்க
நிபந்தனையின் தேவை என்ன????

கருத்துகள் இல்லை: