ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

நம்பிக்கை

பூமழை சொரியும் வானத்தைத் தேடி
நான் காத்து நிற்கிறேன்..

கனவுகளை மட்டுமே சுமக்கும்
கண்கள் என்னைச்சுற்றிலும்
களைத்துக் கிடக்கிறது..

நிலவுக்கு தாலாட்டுப் பாடியே
என் இரவுகள் விடிகிறது..

எல்லா சுமைகளும்
மயிலிறகு போல மென்மையானதும் அல்ல..
படிமத்துக்கரி போல கடினமானதும் அல்ல..

அமிலத்தின் வார்த்தையால்
என் இதயத்தை நீராடினாலும்
இன்னும் கரையாமல் துடிக்கிறது..

நெறிஞ்சி முள்ளாய் குத்தும்
பாதைகளையும் எளிதாய் கடந்துவிடுகிறேன்..

ஆனாலும்... சில சொல்லின்
கூர்முனைகள் என் நெஞ்சை சல்லடையாக்கி
நம்பிக்கையை சலித்து எடுக்கிறது..

இருந்தாலும்.. என் மேல்.
என் நம்பிக்கை நீர்த்துப்போகவில்லை..
என் பார்வைகளும் மாறவில்லை..

இதற்காக இன்னொரு பிறவி வேண்டாம்..
இந்த ஆயுளின் முடிவுக்குள்ளே
என் எல்லைகளை அடைவேன்..

நீர்த்துப்போக நம்பிக்கையோடே..
திடமான மனதும் இருக்கிறது..
பிறகென்ன.......???



கருத்துகள் இல்லை: