வியாழன், 6 ஆகஸ்ட், 2015

வாழ்க்கை


வாழ்க்கை ஒரு இசைக்கருவி போன்றது. இசைக்கருவி தன்னிலே சூன்யமாய் இருப்பினும் இனிய, ஆழமான, அழகிய இசையை பிரதிபலிக்கும் தகுதி கொண்டது. அதை மீட்டுபவர்களை பொறுத்து இசையின் தன்மை அமையும். அதே போல்தான் வாழ்க்கையும். வாழ்க்கையின் திசையை, அதன் போக்கை நிர்மாணிப்பது நாமே. நம் வாழ்வை சொர்க்கமாக்குவதும், நரகம் ஆக்குவதும் நம் கையில்தான் உள்ளது. அதற்கு நமக்கு உள்ள சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி, நம் வாழ்வை மகிழ்ச்சியாக, பயன் உள்ளதாக நாமே உருவாக்க வேண்டும்.

புரிந்துகொள்ளுங்கள் :-
நீங்களாக கேட்காமல் உதவி கிடைக்காது!
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது!
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது!
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது!

நன்றி சொல்லுங்கள் :-
சிந்திக்க தூண்டும் சவால்களுக்கு!
சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு!
கவனகுறையை உணர்த்தும் தோல்விகளுக்கு!
ஓய்வு கொடுக்கும் இரவுக்கு!
நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு!

வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு!

கருத்துகள் இல்லை: